1. நற்புகழ் அளவற்ற திரவியத்தைக் காட்டிலும் நல்லதாம். நன்கு மதிக்கப்பெறுவது வெள்ளியையும் பொன்னையும்விட மேலானதாம்.
|
3. நுண்ணறிவு உள்ளவன் தீமையைக் கண்டு ஒளிந்துகொள்கிறான். கபடில்லாதவன் கடந்து செல்லவே அழிவுக்கு உள்ளாகுகிறான்.
|
5. அக்கிரமியின் வழியில் படையணிகளும் வாழுமாம். தன் ஆன்மாவைக் காக்கிறவனோ அவற்றினின்று அகன்று போகிறான்.
|
7. செல்வந்தன் வறியவர்களுக்கு அரசனாய் இருக்கிறான். கடன் வாங்குகிறவனோ கடன் கொடுக்கிறவனுக்கு அடிமையாகிறான்.
|
9. இரக்கத்துக்குச் சார்பாய் இருக்கிறவன் ஆசி பெறுவான். ஏனென்றால், அவன் தன் அப்பங்களினின்றும் ஏழைக்குத் தந்தான். வெகுமதிகளைத் தருகிறவன் வெற்றியும் மகிமையும் அடைவான். ஏனென்றால், வாங்குகிறவர்களுடைய ஆன்மாவை அவன் தன் வயப்படுத்துகிறான்.
|
10. கேலி செய்பவனைத் துரத்து. அவன் ஓடிப்போனபின் சண்டையும் ஒழியும்; வழக்குகளும் நிந்தைகளும் ஒழிந்துபோம்.
|
13. சிங்கம் வெளியே இருக்கின்றது; நான் (வெளி வந்தால்) தெருக்களின் நடுவில் கொல்லப்படுவேன் என்கிறான் சோம்பேறி.
|
16. தன் செல்வத்தைப் பெருக்கும்படி ஏழையை வஞ்சிப்பவன், தன்னிலும் அதிகச் செல்வனுக்குத் தன் சொத்துகளைக் கொடுத்து விட்டுப் பிச்சையும் எடுப்பான்.
|
21. உன்னை அனுப்பினவர்களுக்கு உண்மையான வார்த்தையைப் பதிலாக உரைக்கும்படி உறுதியும் உண்மையுமான வாக்கியங்களை உனக்குக் கற்றுக் கொடுத்தேன்.
|
25. ஏனென்றால், அவன் வழிகளை நீயும் ஒரு வேளை கற்றுக் கொள்ளவும், உன் ஆன்மாவுக்கு இடறலைத் தேடிக் கொள்ளவும் கூடுமன்றோ ?
|
26. தங்கள் கைகளைக் கட்டுகிறவர்களோடும், கடனுக்குத் தங்களை உத்தரவாதிகளாக ஒப்புக் கொடுக்கிறவர்களோடும் இராதே.
|
27. ஏனென்றால், ஈடு செய்ய உனக்கு வகையில்லாதபோது உன் கட்டிலின் மூடு துணியை அவன் எடுத்துக் கொண்டு போவதற்குக் காரணம் ஏது ?
|
29. தன் அலுவலில் சுறுசுறுப்புள்ள மனிதனைக் கண்டாயோ ? அவன் அரசனின்முன் நிற்பானேயன்றிக் கீழ் மக்களிடத்தில் இரான்.
|