2. மனிதனுடைய செயல்கள் யாவும் அவன்தன் கண்களுக்கு நன்றாயிருக்கின்றன. (ஆனால்) அவன் உள்ளத்தைப் (பரிசோதித்து) நிறுக்கிறவர் ஆண்டவரே.
|
5. அகங்காரிகள் அனைவரையும் ஆண்டவர் வெறுக்கிறார். அவர் உதவியாக அவன் கைக்குள் (தம்) கையை வைத்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பிக்கொள்ளான். அறநெறியின் தொடக்கம் நீதியைச் செய்தலாம். அதுவே பலிகளைப் படைப்பதைவிடக் கடவுளுக்கு அதிக விருப்பமானது.
|
6. இரக்கமும் உண்மையும் அக்கிரமத்தை நிவர்த்தி செய்யும். ஆண்டவர்பால் பயம் இருந்தால் பாவத்தை விட்டு விலக முடியும்.
|
7. ஒரு மனிதனின் வழிகள் ஆண்டவருக்கு விருப்பமாய் இருக்குமாயின், இம்மனிதன் தன் பகைவர்களையுஙள்கூடச் சமாதானப் படுத்துவான்.
|
9. மனிதனுடைய இதயம் தன் வழியைச் சீர்ப்படுத்துகின்றது. ஆனால், கடவுள்தாமே அவனுடைய அடிச் சுவடுகளை நடத்துகிறவர்.
|
11. ஆண்டவருடைய தீர்ப்புகள் நியாயமான நிறையும் தராசுமாம். அவருடைய செயல்களெல்லாம் சாக்கிலுள்ள நிறைகற்களாம்.
|
16. பொன்னைவிட மேலானதாய் இருக்கிற ஞானத்தைக் கொண்டிரு. வெள்ளியிலும் விலையுயர்ந்ததாய் இருக்கிற விவேகத்தை அடைந்துகொள்.
|
17. நீதிமான்களுடைய பாதை தீமையை விலக்குகின்றது. தன் ஆன்மாவை எவன் காக்கிறானோ அவன் தன் வழியைக் காக்கிறான்.
|
19. அகங்காரிகளுடன் கொள்ளைப் பொருட்களைப் பங்கிடுவதைவிடச் சாந்தமுள்ளவர்களுடன் சிறுமைப்படுவது அதிக நல்லது.
|
20. வார்த்தையில் கவனமுள்ளவன் நன்மையைக் கடைப்பிடிப்பான். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவனே பெறு பெற்றோன்.
|
21. இதயத்தில் ஞானமுடையோன் விவேகியென்று அழைக்கப்படுவான். வாய்ப்பேச்சில் இனிமை உள்ளவனோ மேலானவற்றைப் பெறுவான்.
|
25. நேர்மையானதென்று மனிதனுக்குத் தோன்றுகிற நெறி உண்டு. ஆனால், அதன் கடைசி எல்லைகள் சாவிற்குக் கூட்டிச் செல்கின்றன.
|