தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எண்ணாகமம்
1. இவ்வாறிருக்க, சூசையின் வம்ச வழியைச் சேர்ந்த மனாஸேயின் மகனான மக்கீரின் புதல்வர்களும், கலாத் வம்சங்களின் அதிபதிகளும் வந்து, இஸ்ராயேல் தலைவர்களின் முன்னிலையில் மோயீசனிடம் சொன்னதாவது:
2. சீட்டுப் போட்டு இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டைச் சீட்டு விழுந்தபடி பிரித்துக் கொடுக்குமாறு எங்கள் தலைவராகிய உமக்குத் தானே ஆண்டவர் கட்டளை கொடுத்து, எங்கள் சகோதரனாகிய சல்பாதுக்கு வர வேண்டிய உரிமைப் பாகத்தை அவன் புதல்வியருக்குத் தரக் கட்டளையிட்டார்?
3. ஆனால், வேறொரு கோத்திரத்து ஆடவர்கள் அவர்களை மணந்து கொள்வார்களாயின், அந்தப் புதல்வியருடைய உரிமைப் பாகம் அவர்களோடு போகும். அப்பொழுது அவர்களுடைய உரிமை நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் உரிமையோடு சேர்ந்து போகும்.
4. அப்படியிருக்க, ஐம்பதாம் ஆண்டாகிய ஜுபிலி ஆண்டு வந்தாலும், முந்திச் சீட்டுப் போட்டுப் பங்கிட்டுக் கொடுத்த உடைமைகள் ஒன்றோடொன்று சிக்குண்டு போகும். ஓருவனுடைய உரிமை நீங்கிப் போய் மற்றொருவனுடைய உரிமையோடு சேர்ந்துபோகும். (அதற்கு நியாயம் என்ன) என்று கேட்டார்கள்.
5. அதற்கு மோயீசன் ஆண்டவருடைய கட்டளையின்படி இஸ்ராயேல் மக்களை நோக்கி: சூசையின் கேத்திரத்தார் சொன்னது முறையே.
6. ஆதலால் ஆண்டவர் சல்பாதின் புதல்வியாரைக் குறித்து விதிக்கிற கட்டளை என்னவென்றால்: அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடவரை மணந்து கொள்ளலாம். ஆனால், தஙகள் கோத்திரத்தாரோடு மட்டுமே அவர்கள் மணம் செய்து கொள்ள வேண்டும்.
7. இல்லாவிட்டால், இஸ்ராயேல் மக்களுடைய உரிமைப் பாகம் ஒரு கோத்திரத்தைவிட்டு மற்றொரு கோத்திரத்துக்குப் போய்விடும்.
8. ஆதலால், ஆடவர் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலும் தங்கள் தங்கள் வம்சத்திலும் மட்டுமே மணம் செய்து கொள்ளவும், அவரவருடைய உரிமைப்பாகம் அவருடைய கோத்திரத்திலே நிலைகொண்டிருக்கும்படியாய்ப் பெண்கள் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலே மட்டும் வாழ்க்கைப்படவும் கடவார்கள்.
9. இவ்வாறு கோத்திரங்கள் ஒன்றோடொன்று கலவாமல் இப்போதிருக்கிற முறையிலே நிலைபெறும்.
10. அந்தக் கோத்திரங்கள் ஆண்டவராலேயே வேறுவேறாகப் பிரிக்கப்பட்டன அல்லவா என்று சொன்னார். சல்பாதின் புதல்வியர் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
11. மாலா, தேற்சா, ஏகிலா, மெல்கா நோவா ஆகியவர்கள் தங்கள் தந்தையின் சகோதரருடைய புதல்வர்களை மணந்து கொண்டார்கள்.
12. இவர்கள் சூசையின் புதல்வனான மனாஸேயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த உரிமைப் பாகம் அவர்களுடைய தந்தையின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலை கொண்டது.
13. எரிக்கோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளிலே ஆண்டவர் மோயீசன் வழியாய் இஸ்ராயேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் சட்டங்களும் இவைகளேயாம்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 36 Chapters, Current Chapter 36 of Total Chapters 36
எண்ணாகமம் 36:31
1. இவ்வாறிருக்க, சூசையின் வம்ச வழியைச் சேர்ந்த மனாஸேயின் மகனான மக்கீரின் புதல்வர்களும், கலாத் வம்சங்களின் அதிபதிகளும் வந்து, இஸ்ராயேல் தலைவர்களின் முன்னிலையில் மோயீசனிடம் சொன்னதாவது:
2. சீட்டுப் போட்டு இஸ்ராயேல் மக்களுக்கு நாட்டைச் சீட்டு விழுந்தபடி பிரித்துக் கொடுக்குமாறு எங்கள் தலைவராகிய உமக்குத் தானே ஆண்டவர் கட்டளை கொடுத்து, எங்கள் சகோதரனாகிய சல்பாதுக்கு வர வேண்டிய உரிமைப் பாகத்தை அவன் புதல்வியருக்குத் தரக் கட்டளையிட்டார்?
3. ஆனால், வேறொரு கோத்திரத்து ஆடவர்கள் அவர்களை மணந்து கொள்வார்களாயின், அந்தப் புதல்வியருடைய உரிமைப் பாகம் அவர்களோடு போகும். அப்பொழுது அவர்களுடைய உரிமை நீங்கி அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் உரிமையோடு சேர்ந்து போகும்.
4. அப்படியிருக்க, ஐம்பதாம் ஆண்டாகிய ஜுபிலி ஆண்டு வந்தாலும், முந்திச் சீட்டுப் போட்டுப் பங்கிட்டுக் கொடுத்த உடைமைகள் ஒன்றோடொன்று சிக்குண்டு போகும். ஓருவனுடைய உரிமை நீங்கிப் போய் மற்றொருவனுடைய உரிமையோடு சேர்ந்துபோகும். (அதற்கு நியாயம் என்ன) என்று கேட்டார்கள்.
5. அதற்கு மோயீசன் ஆண்டவருடைய கட்டளையின்படி இஸ்ராயேல் மக்களை நோக்கி: சூசையின் கேத்திரத்தார் சொன்னது முறையே.
6. ஆதலால் ஆண்டவர் சல்பாதின் புதல்வியாரைக் குறித்து விதிக்கிற கட்டளை என்னவென்றால்: அவர்கள் தங்களுக்கு விருப்பமான ஆடவரை மணந்து கொள்ளலாம். ஆனால், தஙகள் கோத்திரத்தாரோடு மட்டுமே அவர்கள் மணம் செய்து கொள்ள வேண்டும்.
7. இல்லாவிட்டால், இஸ்ராயேல் மக்களுடைய உரிமைப் பாகம் ஒரு கோத்திரத்தைவிட்டு மற்றொரு கோத்திரத்துக்குப் போய்விடும்.
8. ஆதலால், ஆடவர் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலும் தங்கள் தங்கள் வம்சத்திலும் மட்டுமே மணம் செய்து கொள்ளவும், அவரவருடைய உரிமைப்பாகம் அவருடைய கோத்திரத்திலே நிலைகொண்டிருக்கும்படியாய்ப் பெண்கள் யாவரும் தங்கள் தங்கள் கோத்திரத்திலே மட்டும் வாழ்க்கைப்படவும் கடவார்கள்.
9. இவ்வாறு கோத்திரங்கள் ஒன்றோடொன்று கலவாமல் இப்போதிருக்கிற முறையிலே நிலைபெறும்.
10. அந்தக் கோத்திரங்கள் ஆண்டவராலேயே வேறுவேறாகப் பிரிக்கப்பட்டன அல்லவா என்று சொன்னார். சல்பாதின் புதல்வியர் மோயீசன் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
11. மாலா, தேற்சா, ஏகிலா, மெல்கா நோவா ஆகியவர்கள் தங்கள் தந்தையின் சகோதரருடைய புதல்வர்களை மணந்து கொண்டார்கள்.
12. இவர்கள் சூசையின் புதல்வனான மனாஸேயின் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையால், அவர்களுக்குக் கிடைத்த உரிமைப் பாகம் அவர்களுடைய தந்தையின் கோத்திரத்திலும் உறவின் முறையிலும் நிலை கொண்டது.
13. எரிக்கோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமவெளிகளிலே ஆண்டவர் மோயீசன் வழியாய் இஸ்ராயேல் மக்களுக்கு விதித்த கட்டளைகளும் சட்டங்களும் இவைகளேயாம்.
Total 36 Chapters, Current Chapter 36 of Total Chapters 36
×

Alert

×

tamil Letters Keypad References