தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எண்ணாகமம்
1. அப்படியே ஏழாம் மாதம் முதல் நாள் உங்களுக்குப் புனிதமும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அது எக்காளம் முழங்கும் நாளாகையால், அன்று எந்தச் சாதாரண வேலையையும் செய்யாதிருப்பீர்கள்.
2. அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங் காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
3. அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
4. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும்,
5. மக்களின் பாவத்துக்குப் பரிகாரப்பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக் கொடுப்பீர்கள்.
6. அன்றியும், மாதப் பிறப்புக்குச் செலுத்தவேண்டிய முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த போசனப்பலியையும், அன்றாட முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த வழக்கமான பானப்பலியையும் ஒப்புக்கொடுப்பதுமன்றி, சாதாரண முறைக்கு ஏற்றபடி நறுமணமுள்ள ஒரு முழுத்தகனப்பலியையும் ஆண்டவருக்குச் செலுத்தக்கடவீர்கள்.
7. இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாளும் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதிலே நீங்கள் உங்களை வருத்துவது மட்டுமன்றி, அன்று யாதொரு சாதாரண வேலையும் செய்யாதிருத்தலும் வேண்டும்.
8. அன்று ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத்தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங்காளையும், ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்துவீர்கள்.
9. அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
10. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்குமாகப் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும், பாவத்துக்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்துவதுமன்றி,
11. பாவ நிவர்த்தியைப்பற்றியும் அன்றாட முழுத் தகனப்பலியைப்பற்றியும் வழக்கமாய்க் கொடுக்கப்படுகிற காணிக்கைகளையும், அந்தந்தப் பலிக்கடுத்த போசன பானப்பலிகளையும் (படைக்கவேண்டும்).
12. ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதில் நீங்கள் சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாது. அன்று தொடங்கி ஏழுநாள் ஆண்டவருடைய பண்டிகையைக் கொண்டாடக்கடவீர்.
13. முதல் நாளாகிய அந்நாளிலே ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று இளங்களைகளையும் இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒருவயதான மாசற்ற பதினாலு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
14. அவைகளுக்கடுத்த பான போசனக் காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்காகவும், பத்தில் மூன்று பங்கையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் இரண்டு பங்கையும்,
15. பதினாலு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்காகவும் பத்துப்பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
16. அன்றாடத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
17. இரண்டாம் நாளிலே மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
18. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
19. அன்றாட முழுத் தகனப்பலியும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
20. மூன்றாம் நாளிலே பதினொரு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒருவயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
21. சடங்கு முறைப்படி காளை, ஆட்டுக்கிடாய், ஆட்டுக்குட்டி இவை ஒவ்வொன்றுக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
22. அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
23. நான்காம் நாளிலே பத்து இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
24. சடங்கு முறைப்படி ஒவ்வொரு ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
25. அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
26. ஐந்தாம் நாளிலே ஒன்பது இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வர வேண்டும்.
27. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
28. அன்றாட முழுத் தகனப்பலியையும், அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவ நிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
29. ஆறாம் நாளிலே எட்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், கொண்டு வரரேண்டும்.
30. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
31. அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவப்பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.
32. ஏழாம் நாளிலே ஏழு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
33. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
34. அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றி, பாவ பரிகாரப்பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
35. மிகுந்த சிறப்புள்ள எட்டாம் நாளிலே எந்தக் கூலி வேலையையும் செய்யாமல்,
36. ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலிக்கு ஓர் இளங்காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
37. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கையையும் ஒப்புக்கொடுத்து,
38. அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
39. நீங்கள் உங்கள் திருவிழாக்களில் செலுத்த வேண்டிய பலிகள் இவையேயாம். அன்றியும் நீங்கள் நேர்ச்சைகளையும், தகனப்பலிக்காகக் கொண்டு வரும் மனமொத்த காணிக்கைகளையும், மற்றுமுள்ள பான போசனப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம்பற்றினார்.
40. (30:1) மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டயாவையும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கலானார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 36 Chapters, Current Chapter 29 of Total Chapters 36
எண்ணாகமம் 29:15
1. அப்படியே ஏழாம் மாதம் முதல் நாள் உங்களுக்குப் புனிதமும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அது எக்காளம் முழங்கும் நாளாகையால், அன்று எந்தச் சாதாரண வேலையையும் செய்யாதிருப்பீர்கள்.
2. அப்பொழுது நீங்கள் ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங் காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
3. அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
4. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் ஒரு பங்கையும்,
5. மக்களின் பாவத்துக்குப் பரிகாரப்பலியாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக் கொடுப்பீர்கள்.
6. அன்றியும், மாதப் பிறப்புக்குச் செலுத்தவேண்டிய முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த போசனப்பலியையும், அன்றாட முழுத்தகனப் பலியையும், அதற்கடுத்த வழக்கமான பானப்பலியையும் ஒப்புக்கொடுப்பதுமன்றி, சாதாரண முறைக்கு ஏற்றபடி நறுமணமுள்ள ஒரு முழுத்தகனப்பலியையும் ஆண்டவருக்குச் செலுத்தக்கடவீர்கள்.
7. இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாளும் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதிலே நீங்கள் உங்களை வருத்துவது மட்டுமன்றி, அன்று யாதொரு சாதாரண வேலையும் செய்யாதிருத்தலும் வேண்டும்.
8. அன்று ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத்தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட ஓர் இளங்காளையும், ஓர் ஆட்டுக் கிடாயையும், ஒரு வயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்துவீர்கள்.
9. அந்தந்தப் பலிகளுடன் எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஒவ்வோர் ஆட்டுக் கிடாய்க்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
10. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றுக்குமாகப் பத்துப் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும், பாவத்துக்குப் பரிகாரமாக ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்துவதுமன்றி,
11. பாவ நிவர்த்தியைப்பற்றியும் அன்றாட முழுத் தகனப்பலியைப்பற்றியும் வழக்கமாய்க் கொடுக்கப்படுகிற காணிக்கைகளையும், அந்தந்தப் பலிக்கடுத்த போசன பானப்பலிகளையும் (படைக்கவேண்டும்).
12. ஏழாம் மாதம் பதினைந்தாம் நாள் உங்களுக்குப் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாளாய் இருக்கும். அதில் நீங்கள் சாதாரண வேலை ஒன்றும் செய்யலாகாது. அன்று தொடங்கி ஏழுநாள் ஆண்டவருடைய பண்டிகையைக் கொண்டாடக்கடவீர்.
13. முதல் நாளாகிய அந்நாளிலே ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலியாக மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பதின்மூன்று இளங்களைகளையும் இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒருவயதான மாசற்ற பதினாலு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.
14. அவைகளுக்கடுத்த பான போசனக் காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுக்காகவும், பத்தில் மூன்று பங்கையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களில் ஒவ்வொன்றுக்காகவும் பத்தில் இரண்டு பங்கையும்,
15. பதினாலு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்காகவும் பத்துப்பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,
16. அன்றாடத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுக்க வேண்டும்.
17. இரண்டாம் நாளிலே மந்தையில் தெரிந்தெடுக்கப்பட்ட பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
18. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனப் பலிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
19. அன்றாட முழுத் தகனப்பலியும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
20. மூன்றாம் நாளிலே பதினொரு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒருவயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
21. சடங்கு முறைப்படி காளை, ஆட்டுக்கிடாய், ஆட்டுக்குட்டி இவை ஒவ்வொன்றுக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
22. அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
23. நான்காம் நாளிலே பத்து இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும் ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
24. சடங்கு முறைப்படி ஒவ்வொரு ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
25. அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பானபோசனக் காணிக்கையையுமன்றி, பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
26. ஐந்தாம் நாளிலே ஒன்பது இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வர வேண்டும்.
27. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
28. அன்றாட முழுத் தகனப்பலியையும், அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவ நிவாரணப் பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
29. ஆறாம் நாளிலே எட்டு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக்கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், கொண்டு வரரேண்டும்.
30. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
31. அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனக் காணிக்கையையுமன்றி, பாவப்பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக் கிடாயையும் செலுத்தக் கடவீர்கள்.
32. ஏழாம் நாளிலே ஏழு இளங்காளைகளையும், இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு வயதான மாசற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும் கொண்டு வரவேண்டும்.
33. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கைகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,
34. அன்றாட முழுத் தகனப்பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றி, பாவ பரிகாரப்பலிக்கு ஒரு வெள்ளாட்டு கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
35. மிகுந்த சிறப்புள்ள எட்டாம் நாளிலே எந்தக் கூலி வேலையையும் செய்யாமல்,
36. ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள முழுத் தகனப்பலிக்கு ஓர் இளங்காளையையும், ஓர் ஆட்டுக்கிடாயையும், ஒருவயதான மாசற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் ஒப்புக்கொடுப்பதோடு,
37. சடங்கு முறைப்படி ஒவ்வொரு காளைக்கும் ஆட்டுக்கிடாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் அடுத்த பான போசனக் காணிக்கையையும் ஒப்புக்கொடுத்து,
38. அன்றாட முழுத் தகனப் பலியையும் அதற்கடுத்த பான போசனப் பலிகளையுமன்றிப் பாவப் பரிகாரப் பலிக்கு ஒரு வெள்ளாட்டுக்கிடாயையும் செலுத்தக்கடவீர்கள்.
39. நீங்கள் உங்கள் திருவிழாக்களில் செலுத்த வேண்டிய பலிகள் இவையேயாம். அன்றியும் நீங்கள் நேர்ச்சைகளையும், தகனப்பலிக்காகக் கொண்டு வரும் மனமொத்த காணிக்கைகளையும், மற்றுமுள்ள பான போசனப் பலிகளையும் (வழக்கப்படி) செலுத்துவீர்கள் என்று திருவுளம்பற்றினார்.
40. (30:1) மோயீசன் ஆண்டவர் கட்டளையிட்டயாவையும் இஸ்ராயேல் மக்களுக்கு அறிவிக்கலானார்.
Total 36 Chapters, Current Chapter 29 of Total Chapters 36
×

Alert

×

tamil Letters Keypad References