2. இஸ்ராயேல் மக்கள் அவரவருடைய அணி வகுப்பு, விருது, கொடி, இனத்தாருடைய வீடு (முதலிய) ஒழுங்குப்படி தங்கள் தங்கள் கூடாரங்களை அடித்து சாட்சியக் கூடாரத்துக்குச் சுற்றிலும் பாளைய மிறங்குவார்கள்.
|
3. (எப்படியென்றால்) யூதா தன் படையின் அணிவகுப்புக் கீழ்ப்புறத்திலே கூடாரம் அடிக்கக் கடவான். அமினதாபுடைய புதல்வன் நகஸோன் யூதா கோத்திரத்தாருக்குத் தலைவனாய் இருப்பான்.
|
5. இவனருகில் சூவார் புதல்வனான நத்தானியேலைத் தலைவனாகக் கொண்டிருக்கும் இசாக்கார் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.
|
9. யூதாவின் பாளையத்தில் எண்ணப்பட்டவர்கள் ஒரிலட்சத்து எண்பத்தாறாயிரத்து நானூறு பேர். புறப்படும்போது இவர்களே தங்கள் அணிகளின் ஒழுங்குப்படி முதலில் போகக்கடவார்கள்.
|
10. ரூபன் கோத்திரத்தார் தென்புறத்திலே பாளையமிறங்குவார்கள். செதெயூர் புதல்வனாகிய எலிசூர் அவர்களுக்குத் தலைவனாய் இருப்பான்.
|
12. இவனருகில் சுரிஸதையின் புதல்வன் சலமியேலைத் தலைவனாய்க் கொண்டிருக்கும் சிமையோனின் கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள்.
|
16. ரூபனின் பளையத்தில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஒரிலட்சத்து ஐம்பத்தோராயிரத்து நானூற்றைம்பது பேர். பயணத்தின் போது இவர்களே தங்கள் தங்கள் அணிவகுப்பின் ஒழுங்குப்படி இரண்டாவதாய்ச் செல்லக்கடவார்கள்.
|
17. பின்பு சாட்சியக் கூடாரம் லேவியராலும் அவர்களைச் சேர்ந்தவர்களாலும் எடுத்துச் செல்லப்படும். அது எப்படிக் கட்டி நிறுவப்பட்டதோ அப்படியே பிரிக்கப்படும். அவர்கள் தத்தம் இடத்தில் வரிசைப்படி நடந்து செல்லக்கடவார்கள்.
|
18. எபிராயீம் புதல்வருடைய பாளையம் மேற்புறத்தில் இருக்கும். அமியூதின் புதல்வன் எலிஸமா அவர்களுக்குத் தலைவன்.
|
20. அவனருகே பதசூரின் புதல்வனாகிய கமலியேலைத் தலைவனாகக் கொண்ட மனாசேயின் புதல்வராகிய கோத்திரத்தார் (பாளையம் இறங்குவார்கள்).
|
24. எபிராயீம் பாளையத்திலே தங்கள் அணிவகுப்புப்படி எண்ணப்பட்ட வீரர்கள் ஒரிலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர். இவர்கள் மூன்றாவதாய்ச் செல்வார்கள்.
|
25. தானின் புதல்வர்கள் வடக்கே பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு அமிசதாயின் புதல்வனான ஐயேசர் தலைவன்.
|
27. அவனருகே ஆசேருடைய கோத்திரத்தார் பாளையம் இறங்குவார்கள். அவர்களுக்கு ஒக்கிரான் புதல்வன் பெகியேல் தலைவன்.
|
31. தானின் பாளையத்திலே எண்ணப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரிலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறு. இவர்கள் கடைசியாய்ச் செல்வார்கள் என்றார்.
|
32. தங்கள் தங்கள் இனத்தாரின் வீடுகளின் படியும், படைப்பிரிவுகளின் அணிவகுப்பின் படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களின் தொகை ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
|
34. ஆண்டவர் கட்டளையிட்டபடி இஸ்ராயேல் மக்கள் எல்லாவற்றையும் செய்து வந்தார்கள். அவர்கள் தங்கள் தங்கள் அணிவகுப்பின்படி பாளையம் இறங்கி, தங்கள் வம்ச, குடும்பங்களின் ஒழுங்குப்படி புறப்பட்டனர்.
|