தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மீகா
1. தங்கள் படுக்கைகளில் தீமையைத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் அதைச் செய்து முடிக்கிறார்கள், அவர்கள் கைகளும் அந்தத் திறமையைக் கொண்டுள்ளன!
2. நிலங்கள் மேல் ஆசை கொண்டு வலுவந்தமாய்ப் பிடுங்குகிறார்கள், வீடுகளை விரும்பி வஞ்சகமாய்க் கவர்கிறார்கள்; ஆளையும் வீட்டையும் பறிமுதல் செய்து, ஒடுக்கிச் சொந்தக்காரனையும் சொத்தையும் கவர்ந்து கொள்ளுகிறார்கள்.
3. ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ, இந்த இனத்தார்க்கும் எதிராய் நாமே தீமை செய்யத் திட்டமிடுகிறோம்; அதினின்று உங்கள் தலையை உங்களால் விடுவிக்க இயலாது; நீங்கள் இறுமாந்து நடக்கமாட்டீர்கள், ஏனெனில் காலம் பொல்லாததாய் இருக்கும்.
4. அந்நாளில் மக்கள் உங்கள்மேல் வசைப்பாடல் புனைந்து, "நாங்கள் முற்றிலும் பாழாய்ப்போனோம், என் மக்களின் உரிமைச் சொத்து பறிபோயிற்று. ஐயோ, என்னிடமிருந்து அது பறிக்கப்படுகிறதே! கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதே!" என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
5. ஆகையால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் ஆண்டவரின் சபையில் ஒருவனும் இரான்.
6. பிதற்றாதீர்கள்" என்று அவர்கள் பிதற்றுகிறார்கள்; "இப்படியெல்லாம் பிதற்றல் வேண்டா, எந்த வகையான அவமானமும் நேரிடாது;
7. யாக்கோபின் வீடு சாபத்திற்குள்ளாகுமோ? ஆண்டவர் பொறுமையை இழந்துவிட்டாரோ? அவரது செயல்முறை இதுதானோ? தம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அவர் பேசுவதெல்லாம் பரிவுள்ள சொற்களல்லவோ?" என்கிறார்கள்.
8. ஆனால் நீங்கள் தான் நம் மக்களுக்கு விரோதமாய்ப் பகைவனைப் போல் எழும்புகிறீர்கள்; மாசற்றவனிடமிருந்து மேலாடையைப் பறிக்கிறீர்கள், அமைதியாய் இருப்பவன் மேல் போர் தொடுக்கிறீர்கள்.
9. எம் மக்களின் பெண்களை நீங்கள் அவர்களுடைய இனிமையான வீடுகளிலிருந்து விரட்டுகிறீர்கள்; அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடமிருந்து என்றென்றைக்கும் நம் மகிமையை எடுத்து விடுகிறீர்கள்.
10. எழுந்து போய்விடுங்கள், இது இளைப்பாறும் இடமன்று; நாடு தீட்டுப்பட்டுவிட்டது, பேரழிவுக்கு உள்ளாகப் போகிறது.
11. திராட்சை இரசத்தையும் மதுவையும் உங்களுக்கு நான் பொழிவேன்" என்று வீண் சொற்களையும் பொய்களையும் ஒருவன் பிதற்றினால், அவனே இந்த மக்களுக்குகந்த தீர்க்கதரிசி.
12. யாக்கோபே, உங்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம், இஸ்ராயேலில் எஞ்சினோரை ஒன்று கூட்டுவோம்; ஆடுகளைக் கிடையில் மடக்குவதுபோலும், மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலும் ஒன்றாக உங்களைக் கூட்டிச் சேர்ப்போம்; வருகின்ற கூட்டத்தின் ஆரவாரம் மிகுதியாய் இருக்கும்.
13. வழியைத் திறப்பவர் அவர்கள் முன்னால் நடப்பார், அவர் முன்னால் நடக்க, அவர்கள் உள்ளே போய் வெளியே வருவார்கள்; அவர்களுடைய அரசர் அவர்களுக்கு முன்னால் செல்வார், ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 7 Chapters, Current Chapter 2 of Total Chapters 7
1 2 3 4 5 6 7
மீகா 2:1
1. தங்கள் படுக்கைகளில் தீமையைத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் அதைச் செய்து முடிக்கிறார்கள், அவர்கள் கைகளும் அந்தத் திறமையைக் கொண்டுள்ளன!
2. நிலங்கள் மேல் ஆசை கொண்டு வலுவந்தமாய்ப் பிடுங்குகிறார்கள், வீடுகளை விரும்பி வஞ்சகமாய்க் கவர்கிறார்கள்; ஆளையும் வீட்டையும் பறிமுதல் செய்து, ஒடுக்கிச் சொந்தக்காரனையும் சொத்தையும் கவர்ந்து கொள்ளுகிறார்கள்.
3. ஆதலால் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இதோ, இந்த இனத்தார்க்கும் எதிராய் நாமே தீமை செய்யத் திட்டமிடுகிறோம்; அதினின்று உங்கள் தலையை உங்களால் விடுவிக்க இயலாது; நீங்கள் இறுமாந்து நடக்கமாட்டீர்கள், ஏனெனில் காலம் பொல்லாததாய் இருக்கும்.
4. அந்நாளில் மக்கள் உங்கள்மேல் வசைப்பாடல் புனைந்து, "நாங்கள் முற்றிலும் பாழாய்ப்போனோம், என் மக்களின் உரிமைச் சொத்து பறிபோயிற்று. ஐயோ, என்னிடமிருந்து அது பறிக்கப்படுகிறதே! கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுகிறதே!" என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள்.
5. ஆகையால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் ஆண்டவரின் சபையில் ஒருவனும் இரான்.
6. பிதற்றாதீர்கள்" என்று அவர்கள் பிதற்றுகிறார்கள்; "இப்படியெல்லாம் பிதற்றல் வேண்டா, எந்த வகையான அவமானமும் நேரிடாது;
7. யாக்கோபின் வீடு சாபத்திற்குள்ளாகுமோ? ஆண்டவர் பொறுமையை இழந்துவிட்டாரோ? அவரது செயல்முறை இதுதானோ? தம் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அவர் பேசுவதெல்லாம் பரிவுள்ள சொற்களல்லவோ?" என்கிறார்கள்.
8. ஆனால் நீங்கள் தான் நம் மக்களுக்கு விரோதமாய்ப் பகைவனைப் போல் எழும்புகிறீர்கள்; மாசற்றவனிடமிருந்து மேலாடையைப் பறிக்கிறீர்கள், அமைதியாய் இருப்பவன் மேல் போர் தொடுக்கிறீர்கள்.
9. எம் மக்களின் பெண்களை நீங்கள் அவர்களுடைய இனிமையான வீடுகளிலிருந்து விரட்டுகிறீர்கள்; அவர்களுடைய பச்சிளம் குழந்தைகளிடமிருந்து என்றென்றைக்கும் நம் மகிமையை எடுத்து விடுகிறீர்கள்.
10. எழுந்து போய்விடுங்கள், இது இளைப்பாறும் இடமன்று; நாடு தீட்டுப்பட்டுவிட்டது, பேரழிவுக்கு உள்ளாகப் போகிறது.
11. திராட்சை இரசத்தையும் மதுவையும் உங்களுக்கு நான் பொழிவேன்" என்று வீண் சொற்களையும் பொய்களையும் ஒருவன் பிதற்றினால், அவனே இந்த மக்களுக்குகந்த தீர்க்கதரிசி.
12. யாக்கோபே, உங்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்ப்போம், இஸ்ராயேலில் எஞ்சினோரை ஒன்று கூட்டுவோம்; ஆடுகளைக் கிடையில் மடக்குவதுபோலும், மந்தையை மேய்ச்சல் நிலத்தில் வளைப்பது போலும் ஒன்றாக உங்களைக் கூட்டிச் சேர்ப்போம்; வருகின்ற கூட்டத்தின் ஆரவாரம் மிகுதியாய் இருக்கும்.
13. வழியைத் திறப்பவர் அவர்கள் முன்னால் நடப்பார், அவர் முன்னால் நடக்க, அவர்கள் உள்ளே போய் வெளியே வருவார்கள்; அவர்களுடைய அரசர் அவர்களுக்கு முன்னால் செல்வார், ஆண்டவரே அவர்களை வழிநடத்திப் போவார்.
Total 7 Chapters, Current Chapter 2 of Total Chapters 7
1 2 3 4 5 6 7
×

Alert

×

tamil Letters Keypad References