2. எந்தத் தீர்ப்பு இடுகிறீர்களோ அந்தத் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.
|
4. உன் சகோதரனை நோக்கி, ' உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுக்க விடு ' என்று நீ எப்படிச் சொல்லலாம் ? இதோ! உன் கண்ணிலே விட்டம் இருக்கிறதே.
|
5. வெளிவேடக்காரனே, முதலில் உன் கண்ணிலிருந்து விட்டத்தை எடுத்து எறி; பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க நன்றாகக் கண் தெரியும்.
|
6. பரிசுத்தமானதை நாய்களுக்குப் போடவேண்டாம். உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் எறியவும் வேண்டாம்; எறிந்தால், அவை அவற்றைக் காலால் மிதித்து உங்களை எதிர்த்துப் பீறிவிடலாம்.
|
7. "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.
|
11. ஆகவே தீயோராகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிவீர்களானால், வானகத்திலுள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்பவர்களுக்கு எவ்வளவோ அதிகமாய் நன்மை செய்வார்!
|
12. "ஆகையால் உங்களுக்குப் பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அவற்றையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் இதுவே.
|
13. `இடுக்கான வாயில்வழியே நுழையுங்கள். ஏனெனில், அழிவுக்குச் செல்லும் வாயில் அகன்றது; வழி பரந்தது; அதன் வழியே நுழைபவரும் பலர்.
|
14. வாழ்வுக்குச் செல்லும் வாயில் எவ்வளவோ ஒடுக்கமானது; வழி எவ்வளவோ இடுக்கானது. இதைக் கண்டுபிடிப்பவரும் சிலரே.
|
15. `போலித் தீர்க்கதரிசிகள்மட்டில் எச்சரிக்கையாயிருங்கள். இவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடம் வருகிறார்கள்; உள்ளுக்கோ பறித்துச் செல்லும் ஓநாய்கள்.
|
16. அவர்கள் கனிகளைக் கொண்டே அவர்களை அறிந்துகொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்புதர்களில் அத்திப் பழங்களையோ பறிப்பாருண்டோ ?
|
21. `என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' என்று சொல்பவனெல்லாம் விண்ணரசு சேரமாட்டான். வானகத்திலுள்ள என் தந்தையின் விருப்பப்படி நடப்பவனே சேருவான். அந்நாளில் பலர் என்னை நோக்கி,
|
22. 'ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் தீர்க்கதரிசனம் கூறவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் புதுமை பல செய்யவில்லையா?' என்பர்.
|
23. அதற்கு, 'உங்களை நான் அறிந்ததேயில்லை. நெறிகெட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள்' என்று அவர்களுக்கு நான் வெளிப்படையாகச் சொல்லுவேன்.
|
24. `ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்.
|
25. மழை பெய்தது, வெள்ளம் வந்தது, புயலடித்து அவ்வீட்டின்மேல் மோதியது. ஆனால், அது விழவில்லை. ஏனென்றால், கற்பாறையின்மேல் ஊன்றியிருந்தது.
|
26. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடக்காதவன் எவனும் மணல்மீது தன் வீட்டைக் கட்டிய மூடனுக்கு ஒப்பாவான்.
|
27. மழை பெய்தது, வெள்ளம் வந்தது, புயலடித்து அவ்வீட்டின்மேல் மோதியது. அது விழுந்தது. பெரிது அதன் அழிவு! `
|