1. ஓய்வுநாளுக்குப்பின், வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் மதலேன் மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தனர்.
|
2. இதோ! பெரிய நிலநடுக்கம் உண்டாயிற்று. ஆண்டவரின் தூதர் வானினின்று இறங்கி வந்து, கல்லைப் புரட்டி, அதன்மேல் அமர்ந்தார்.
|
5. வானதூதர் பெண்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையுண்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
|
6. அவர் இங்கே இல்லை; தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார். வாருங்கள், ஆண்டவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.
|
7. விரைந்து செல்லுங்கள். அவர் இறந்தோரிடமிருந்து உயிர்த்துவிட்டார் என்று அவர் சீடருக்குச் சொல்லுங்கள். இதோ! உங்களுக்குமுன் அவர் கலிலேயாவுக்குப் போகிறார். அங்கே அவரைக் காண்பீர்கள். இதோ! உங்களுக்குச் சொல்லிவிட்டேன்" என்று சொன்னார்.
|
8. அவர்களும் அச்சத்துடனும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் விரைவாகக் கல்லறையை விட்டு அகன்று, அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.
|
9. இதோ! இயேசு, அவர்களுக்கு எதிர்ப்பட்டு, "வாழ்க" என்றார். அவர்கள் அணுகி, அவர் பாதங்களைத் தழுவிக்கொண்டு அவரைப் பணிந்தனர்.
|
10. இயேசு அவர்களை நோக்கி, "அஞ்சாதீர்கள், நீங்கள் என் சகோதரரிடம் சென்று, கலிலேயாவுக்குப் போகச் சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்" என்று சொன்னார்.
|
11. அவர்கள் சென்றபின், இதோ! காவலருள் சிலர் நகருக்குள் வந்து நிகழ்ந்தவை அனைத்தையும் தலைமைக்குருக்களிடம் அறிவித்தனர்.
|
13. நாங்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது இரவில் அவருடைய சீடர் வந்து அவரைத் திருடிச் சென்றனர்' என மக்களுக்குச் சொல்லுங்கள்.
|
14. ஆளுநரின் காதுக்கு இது எட்டுமாயின் அவரிடம் சொல்லி உங்களுக்கு ஒரு தொந்தரவும் வராதபடி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றனர்.
|
15. அவர்களும் பணத்தை வாங்கிக்கொண்டு தங்களுக்குச் சொல்லிக்கொடுத்தபடி செய்தார்கள்; இந்நாள்வரை யூதரிடையே இக்கதை பரவியிருக்கிறது.
|
18. இயேசு அவர்களை அணுகிக் கூறியது: "விண்ணிலும் மண்ணிலும் எல்லா அதிகாரமும் எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
|
19. நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
|
20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."
|