1. காலையானதும் தலைமைக்குருக்கள், மக்களின் மூப்பர் எல்லாரும் இயேசுவைக் கொல்ல அவருக்கு எதிராக ஆலோசனை செய்தனர்.
|
3. அப்போது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் தண்டனைக்கு உள்ளானதைக் கண்டு, மனம் வருந்தி, முப்பது வெள்ளிக் காசுகளையும் தலைமைக்குருக்களிடமும் மூப்பரிடமும் கொண்டுவந்து,
|
4. "மாசற்ற இரத்தத்தைக் காட்டிக்கொடுத்துப் பாவம் செய்தேன்" என்றான். அவர்களோ, "எங்களுக்கென்ன ? அஃது உன் பாடு" என்றனர்.
|
6. தலைமைக்குருக்கள் வெள்ளிக்காசுகளை எடுத்து, "காணிக்கைப் பெட்டியில் இவற்றைப் போடக்கூடாது; ஏனெனில், இவை இரத்தத்தின் விலை" என்றனர்.
|
10. ஆண்டவர் எனக்குக் குறித்தபடியே குயவன் நிலத்திற்குக் கொடுத்தார்கள்" என்று எரேமியாஸ் இறைவாக்கினர் கூறியது அப்பொழுது நிறைவேறியது.
|
11. இயேசு ஆளுநர்முன் நின்றார். ஆளுநர் அவரை: "நீ யூதரின் அரசனோ ?" என்று வினவ, இயேசு, "நீர்தாம் சொல்கிறீர்" என்றார்.
|
13. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி, "உனக்கு எதிராக இத்தனைச் சான்றுகள் கூறுகிறார்களே; உன் காதில் விழவில்லையா ?" என்று கேட்டார்.
|
17. எனவே, மக்கள் ஒன்றுகூடினபோது, பிலாத்து, "நான் யாரை விடுதலைசெய்ய வேண்டும் என்கிறீர்கள் ? பரபாசையா, மெசியா என்னும் இயேசுவையா ?" என்று கேட்டார்.
|
19. அவர் நீதியிருக்கைமீது வீற்றிருந்தபொழுது அவர் மனைவி அவரிடம் ஆளனுப்பி, "அந்நீதிமானின் காரியத்தில் நீர் தலையிட வேண்டாம். ஏனெனில், அவர்பொருட்டு இன்று கனவில் மிகவும் துன்புற்றேன்" என்று கூறினாள்.
|
20. தலைமைக்குருக்களும் மூப்பரும் பரபாசை விடுவிக்கவும், இயேசுவைத் தொலைக்கவும் கேட்கும்படி மக்களை ஏவிவிட்டனர்.
|
21. ஆளுநர், "இவ்விருவரில் யாரை உங்களுக்கு நான் விடுதலையாக்க வேண்டும் என்கிறீர்கள் ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "பரபாசை" என்றனர்.
|
22. பிலாத்து, "அப்படியானால் மெசியா என்னும் இயேசுவை நான் என்ன செய்யட்டும் ?" என்றார். எல்லாரும், "அவன் சிலுவையில் அறையப்படட்டும்" என்றனர்.
|
23. ஆளுநர், "இவன் செய்த தீங்கு என்ன ?" என்று அவர்களைக் கேட்டார். அவர்களோ, "சிலுவையில் அறையப்படட்டும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டனர்.
|
24. பிலாத்து தம்மால் ஒன்றும் ஆகவில்லை என்றும், அதற்கு மாறாகக் கலகமே ஏற்படுகிறதென்றும் கண்டு, தண்ணீர் எடுத்து மக்கள்முன்னிலையில், "இவனுடைய இரத்தத்தின் மட்டில் நான் குற்றம் அற்றவன்; அது உங்கள் பாடு" எனக் கூறிக் கைகழுவினார்.
|
25. அதற்கு மக்கள் அனைவரும், "இவன் இரத்தம் எங்கள்மேலும், எங்கள் பிள்ளைகள்மேலும் இருக்கட்டும்" என்றனர்.
|
26. பின்னர், அவர்களுக்கு இசைந்து பரபாசை விடுதலைசெய்தார். இயேசுவையோ சாட்டையால் அடித்துச் சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
|
27. ஆளுநருடைய படைவீரர் இயேசுவை அரண்மனைக்கு நடத்திச் சென்று அங்கே இருந்த பட்டாளத்தினர் எல்லாரையும் அவர்முன் ஒன்றுசேர்த்தனர்.
|
29. முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்தனர்; வலக்கையில் ஒரு பிரம்பைக் கொடுத்தனர். அவர்முன் முழந்தாளிட்டு, "யூதரின் அரசே, வாழி" என்று எள்ளி நகையாடினர்.
|
31. அவரை எள்ளி நகையாடியபின் அப்போர்வையைக் கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து, அவரைச் சிலுவையில் அறையக் கூட்டிச் சென்றனர்.
|
32. வெளியே செல்லுகையில் சீரேனே ஊரானாகிய சீமோன் என்ற ஒருவனைக் கண்டனர். அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைக் கட்டாயப்படுத்தினர்.
|
34. கசப்புக் கலந்த திராட்சை இரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தனர். அவரோ அதைச் சுவைத்தபின் குடிக்க விரும்பவில்லை.
|
35. அவரைச் சிலுவையில் அறைந்த பின்னர், சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர்.
|
37. அவருடைய தலைக்கு மேல் அவரைப் பற்றிய குற்ற அறிக்கையை வைத்தனர். அதில், "இவன் யூதரின் அரசன் இயேசு" என்று எழுதியிருந்தது.
|
38. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தார்கள்.
|
40. "ஆலயத்தை இடித்து மூன்று நாட்களில் கட்டுவோனே, உன்னையே காப்பாற்றிக்கொள். நீ கடவுள்மகனாய் இருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா" என்று அவரைப் பழித்தனர்.
|
42. பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை. இவன் இஸ்ராயேலின் அரசனாம்! இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும், இவனை நம்புவோம்.
|
43. கடவுளை நம்பியிருந்தான்; அவருக்கு இவன்மேல் பிரியமிருந்தால் இப்பொழுது விடுவிக்கட்டும். 'நான் கடவுள்மகன்' என்றானே" எனக் கூறினர்.
|
46. ஏறக்குறைய மூன்று மணிக்கு இயேசு, "ஏலி, ஏலி, லெமா சபக்தானி" - அதாவது "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர் ?" - என்று உரக்கக் கூவினார்.
|
48. உடனே அவர்களுள் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்துக் காடியில் தோய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்தான்.
|
54. நூற்றுவர்தலைவனும் அவனுடன் இயேசுவைக் காவல் காத்துக்கொண்டிருந்தோரும் நிலநடுக்கத்தையும் நடந்தது அனைத்தையும் கண்டு மிகவும் அஞ்சி, "உண்மையில் இவர் கடவுளின் மகனாயிருந்தார்" என்றனர்.
|
55. கலிலேயாவிலிருந்து இயேசுவைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்த பெண்கள் பலர் அங்கே இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர்.
|
56. அவர்களுள் மதலென் மரியாளும், யாகப்பர், சூசை ஆகியவர்களின் தாயான மரியாளும், செபெதேயுவின் மக்களின் தாயும் இருந்தனர்.
|
58. அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். பிலாத்தும் அதை அவருக்கு அளித்துவிடக் கட்டளையிட்டார்.
|
60. தமக்கெனப் பாறையில் குடைந்திருந்த ஒரு புதுக் கல்லறையில் வைத்தார்; ஒரு பெரிய கல்லைப் புரட்டி, கல்லறையின் வாயிலில் வைத்துவிட்டுப் போனார்.
|
62. மறுநாள், அதாவது, ஆயத்த நாளுக்கு அடுத்த நாள், தலைமைக்குருக்களும் பரிசேயரும் பிலாத்திடம் கூடிவந்து,
|
63. "ஐயா, அந்த வஞ்சகன் உயிருடன் இருந்தபொழுது ' மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழுவேன் ' என்று சொன்னது எங்களுக்கு நினைவிலிருக்கிறது.
|
64. ஒருவேளை அவனுடைய சீடர் வந்து அவன் உடலைத் திருடிக்கொண்டு போய்விட்டு, ' இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் ' என்று மக்களிடம் சொல்லக்கூடும். அப்பொழுது முந்தின வஞ்சனையைவிடப் பிந்தினது மோசமாயிருக்கும். இது நிகழாதபடி கல்லறையை மூன்றாம் நாள்வரை பத்திரப்படுத்தக் கட்டளையிடும்" என்றனர்.
|
65. பிலாத்தோ அவர்களை நோக்கி, "உங்களிடம் காவல்காரர் உண்டே, போய் உங்களுக்குத் தெரிந்தபடி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்" என்றார்.
|