1. இயேசு கோயிலை விட்டுப் போய்க்கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து கோயில் கட்டடங்களை அவருக்குக் காட்டினார்கள்.
|
2. அவர் அவர்களுக்கு, "இவையெல்லாம் பார்க்கிறீர்களே, உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இங்கே கல்லின்மேல் கல் இராதபடி எல்லாம் இடிபடும்" என்று மறுமொழி கூறினார்.
|
3. அவர் ஒலிவமலைமீது அமர்ந்தபின் அவருடைய சீடர் அவரை அணுகி, "இவை எப்பொழுது நிகழும் ? உமது வருகைக்கும் உலக முடிவுக்கும் அறிகுறி என்ன ? எங்களுக்குச் சொல்லும்" என்று தனியாகக் கேட்டனர்.
|
5. ஏனெனில், பலர் வந்து என் பெயரை வைத்துக்கொண்டு, ' நான்தான் மெசியா ' என்று சொல்லிப் பலரை ஏமாற்றுவர்.
|
6. போர் முழக்கங்களையும் போர்ப் பேச்சுகளையும் கேட்கப்போகிறீர்கள். எச்சரிக்கையாயிருங்கள்; கலங்கவேண்டாம். ஏனெனில், இவை எல்லாம் நிகழத்தான் வேண்டும்.
|
7. ஆனால், இன்னும் இது முடிவன்று. நாடு நாட்டையும், அரசு அரசையும் எதிர்த்து எழும். பற்பல இடங்களில் கொள்ளைநோய்களும் பஞ்சமும் நிலநடுக்கமும் உண்டாகும்.
|
9. அப்பொழுது உங்களை வேதனைக்குக் கையளிப்பார்கள்; கொலைசெய்வார்கள்; என் பெயருக்காக எல்லா மக்களும் உங்களை வெறுப்பார்கள்.
|
10. அப்பொழுது பலர் இடறல்படுவார்கள்; ஒருவரையொருவர் காட்டிக்கொடுப்பார்கள்; ஒருவரையொருவர் வெறுப்பார்கள்.
|
14. இறையரசைப்பற்றிய இந்நற்செய்தி எல்லா இனங்களுக்கும் சான்றாக உலக முழுவதும் அறிவிக்கப்படும். பின்னர்தான் முடிவு வரும்.
|
15. "தானியேல் இறைவாக்கினர் குறிப்பிட்ட ' பாழாக்கும் அருவருப்பு ' பரிசுத்த இடத்தில் நிற்கக் காணும்பொழுது - இதைப் படிப்பவன் உணர்ந்துகொள்ளட்டும் -
|
21. அப்பொழுது பெரிய வேதனை உண்டாகும். இத்தகைய வேதனை உலகத் தொடக்கமுதல் இதுவரை இருந்ததுமில்லை; இனி இருக்கப்போவதுமில்லை.
|
22. அந்நாட்கள் குறைக்கப்படாவிடில் எவ்வுயிரும் தப்பித்துக்கொள்ளாது. தேர்ந்துகொண்டவர்களின் பொருட்டு அந்நாட்கள் குறைக்கப்படும்.
|
23. அப்போது எவனாவது உங்களிடம், ' இதோ! மெசியா இங்கே இருக்கிறார் அல்லது அங்கே இருக்கிறார் ' என்று சொன்னால் நம்பாதீர்கள்.
|
24. போலி மெசியாக்களும் போலித் தீர்க்கதரிசிகளும் தோன்றி, கூடுமானால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களையும் ஏமாற்றக்கூடிய பெரும் அருங்குறிகளும் அற்புதங்களும் செய்துகாட்டுவார்கள்.
|
26. "எனவே, யாராவது உங்களிடம் ' இதோ! அவர் பாலைவனத்தில் இருக்கிறார் ' என்று கூறினால், அங்கே சொல்லாதீர்கள். ' இதோ! உள்ளறையில் இருக்கிறார் ' என்றால், நம்பாதீர்கள்.
|
29. "அந்நாட்களின் வேதனைக்குப் பின், உடனே, கதிரவன் இருண்டுவிடுவான்; நிலா தன் ஒளி கொடாது; விண்மீன்கள் வானத்தினின்று விழும்; வானத்தின் படைகள் அசைக்கப்படும்.
|
30. அப்போது வானத்தில் மனுமகனின் அறிகுறி தோன்றும்; மண்ணுலகின் குலத்தார் எல்லாரும் புலம்பி அழுவர். மனுமகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சிமையோடும் வானமேகங்களின்மீது வருவதைக் காண்பார்கள்.
|
31. எக்காளம் முழங்க அவர் தம் தூதரை அனுப்புவார். அவர்கள் உலகின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை நாற்றிசையிலுமிருந்து அவரால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைத் திரட்டுவார்கள்.
|
32. "அத்தி மரத்திலிருந்து இந்த உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் கிளைகள் மென்மையாகித் தளிர்விடும்போது கோடைக்காலம் அண்மையில் உள்ளது என்று உங்களுக்குத் தெரியும்.
|
33. அவ்வாறே, நீங்களும் இவையெல்லாம் நடைபெறுவதைக் காணும்போது அவர் அண்மையில் இருக்கிறார், வாசலிலேயே இருக்கிறார் என்று அறிந்துகொள்ளுங்கள்.
|
36. அந்நாளோ நாழிகையோ ஒருவனுக்கும் தெரியாது; தந்தைக்குத் தெரியுமேயன்றி, வானதூதருக்கும் மகனுக்குங்கூடத் தெரியாது.
|
38. பெரும் வெள்ளத்திற்கு முந்தின காலத்தில் நோவா பெட்டகத்தில் நுழைந்த நாள்வரை அவர்கள் உண்டும் குடித்தும், பெண் கொண்டும் கொடுத்தும் வந்தனர்.
|
39. பெரும் வெள்ளம் வந்து அனைவரையும் வாரிச்செல்லும்வரை அவர்கள் ஒன்றையும் உணரவில்லை. அப்படியே மனுமகன் வருகையும் இருக்கும்.
|
43. திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால் அவன் விழிப்பாயிருந்து வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டான் அன்றோ ?
|
45. "தக்க காலத்தில் தன் வீட்டாருக்கு உணவளிக்கும்படி தலைவன் ஏற்படுத்திய, நம்பிக்கையும் விவேகமும் உள்ள ஊழியன் யார் ?
|
48. ஆனால், அவ்வூழியன் தீயவனாய் இருந்து, ' என் தலைவர் காலம் தாழ்த்துகிறார் ' என்று தனக்குள் சொல்லிக்கொண்டு
|