3. அவர்கள் உங்களுக்குச் சொல்லுவதெல்லாம் கடைப்பிடித்து நடங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோலச் செய்யாதீர்கள். ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள்; செய்வதில்லை.
|
4. பளுவான சுமையைக் கட்டி மக்களுடைய தோள்மேல் வைக்கிறார்கள்; தாங்களோ அதை ஒரு விரலாலும் அசைக்கமாட்டார்கள்.
|
5. தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டுமென்றே செய்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தம் சீட்டுப்பட்டங்களை அகலமாக்கிக் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள்.
|
8. நீங்களோ 'ராபி' என்று அழைக்கப்படவேண்டாம். ஏனெனில், உங்கள் போதகர் ஒருவரே; நீங்கள் அனைவரும் சகோதரர்.
|
14. ஏனெனில், மனிதர் விண்ணரசில் நுழைகையில் வாயிலை அடைத்துவிடுகிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை.
|
15. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், ஒருவனை மதத்தில் சேர்க்க நாடும் கடலும் சுற்றி அலைகிறீர்கள். அவன் சேர்ந்தபின் உங்களைவிட இரு மடங்கு அவனை நரகத்துக்கு உரியவனாக்குகிறீர்கள்.
|
16. குருட்டு வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடு! ஆலயத்தின்மீது ஒருவன் ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், ஆலயத்தின் பொன்மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்களே.
|
18. மேலும் ஒருவன் பீடத்தின்மீது ஆணையிட்டால் அது ஒன்றுமில்லை; ஆனால், பீடத்தின் மேலுள்ள காணிக்கையின் மீது ஆணையிட்டால் அவன் கடமைப்பட்டவன் என்கிறீர்கள்.
|
20. எனவே, பீடத்தின் மீது ஆணையிடுவோன் அதன் பெயராலும், அதன் மேலுள்ள அனைத்தின் பெயராலும் ஆணையிடுகிறான்.
|
21. ஆலயத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் அதன் பெயராலும், அதில் குடிகொண்டிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.
|
22. வானகத்தின் பெயரால் ஆணையிடுகிறவன் கடவுளுடைய அரியணையின் பெயராலும், அதன்மேல் வீற்றிருப்பவர் பெயராலும் ஆணையிடுகிறான்.
|
23. "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் புதினா, சதகுப்பி, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பகுதி செலுத்துகிறீர்கள். ஆனால், திருச்சட்டத்தில் முக்கிய படிப்பினைகளான நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றை விட்டுவிட்டீர்கள். இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; அவற்றையும் விடலாகாது.
|
25. "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் கிண்ணத்தையும் தட்டையும் வெளிப்புறத்தில் தூயதாக்குகிறீர்கள். ஆனால், உள்ளே கொள்ளையும் துர் இச்சையும் நிறைந்துள்ளன.
|
26. குருட்டுப் பரிசேயனே, கிண்ணத்தின் உட்புறத்தை முதலில் தூயதாக்கு; அப்பொழுது வெளிப்புறமும் தூயதாகும்.
|
27. வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை வெளியே மனிதருக்கு வனப்பாகத் தோன்றுகின்றன. உள்ளேயோ இறந்தோர் எலும்புகளும், எவ்வகை அசுத்தமும் நிறைந்துள்ளன.
|
28. அவ்வாறே நீங்களும் வெளியே மனிதருக்கு நீதிமான்களாகத் தோன்றுகிறீர்கள். உள்ளேயோ கள்ளத்தனத்தாலும் அக்கிரமத்தாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
|
29. "வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ கேடு! ஏனெனில், இறைவாக்கினர்களுக்குக் கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள்.
|
30. எங்கள் முன்னோர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், அவர்கள் இறைவாக்கினர்களின் இரத்தத்தைச் சிந்துவதற்கு உடந்தையாய் இருந்திருக்கமாட்டோம் என்கிறீர்கள்.
|
31. இவ்வாறு, இறைவாக்கினர்களைக் கொன்றவர்களுடைய மக்கள் நீங்கள் என்பதற்கு, நீங்களே உங்களுக்கு எதிர்சாட்சிகள்.
|
34. எனவே, இதோ! நான் இறைவாக்கினர்களையும் ஞானிகளையும் மறைநூல் அறிஞர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரைக் கொல்வீர்கள், சிலுவையில் அறைவீர்கள்; சிலரை உங்கள் செபக்கூடங்களில் சாட்டையால் அடிப்பீர்கள்; ஊர் ஊராய் விரட்டியடிப்பீர்கள்.
|
35. இவ்வாறு குற்றமற்ற ஆபேலுடைய இரத்தம்முதல், ஆலயத்திற்கும் பீடத்திற்கும் இடையே நீங்கள் கொன்றவரும், பரக்கியாவின் மகனுமான சக்கரியாசின் இரத்தம்வரை சிந்திய மாசற்ற இரத்தத்தின் பழி எல்லாம் உங்கள்மேல் வந்துவிழும்.
|
37. "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே! கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன். நீயோ உடன்படவில்லை.
|
39. ஏனெனில், ' ஆண்டவர் பெயரால் வருகிறவர் வாழி ' என்று நீங்கள் கூறும்வரை இனி என்னைக் காணமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
|