4. மீண்டும் வேறு ஊழியரை அனுப்பி, ' இதோ! விருந்து ஏற்பாடு செய்துள்ளேன்; காளைகளும் கொழுத்த மிருகங்களும் அடித்து எல்லாம் ஏற்பாடாயிற்று. திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பெற்றவருக்குச் சொல்லுங்கள் ' என்றான்.
|
5. அழைக்கப்பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை; ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.
|
7. அதைக் கேட்ட அரசன் சினந்து, தன் படையை அனுப்பிக் கொலைகாரர்களைத் தொலைத்து அவர்கள் நகரையும் தீக்கிரையாக்கினான்.
|
8. பின்னர், தன் ஊழியரிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகிவிட்டது. அழைக்கப்பெற்றவர்களோ தகுதியற்றவர்களாயினர்.
|
10. அவன் ஊழியரும் வீதிகளுக்குச் சென்று தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்த்தனர். மன்றம் நிரம்ப அவர்கள் பந்தி அமர்ந்தனர்.
|
12. அவனை நோக்கி, 'நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?' என்று கேட்க, அவன் பேசாதிருந்தான்.
|
13. பின்னர் அரசன் பணியாளரை நோக்கி, ' கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் ' என்று சொன்னான்.
|
16. தங்கள் சீடரை ஏரோதியரோடு அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மை உள்ளவர்; கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர். நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
|
17. எனவே, எங்களுக்குச் சொல்லும்: செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?" என்றனர்.
|
21. "செசாருடையவை" என்றனர். அப்பொழுது அவர்களை நோக்கி, "ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்றார்.
|
24. "போதகரே, ' ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவன் சகோதரன் அவனுடைய மனைவியை மணந்து, தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் ' என்று மோயீசன் சொல்லியிருக்கிறார்.
|
25. எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் மணம்முடித்து மகப்பேறின்றித் தன் மனைவியைச் சகோதரனுக்கு விட்டு இறந்தான்.
|
28. ஆகவே, உயிர்த்தெழும்போது அவள் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாக இருப்பாள் ? எல்லாரும் அவளை மணம்செய்திருந்தனரே" என்று கேட்டனர்.
|
30. ஏனெனில், உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானகத்தில் கடவுளின் தூதரைப்போல் இருப்பார்கள்.
|
31. இறந்தோர் உயிர்த்தெழுவதுபற்றிக் கடவுள், ' நாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று உங்களுக்குக் கூறினதை நீங்கள் படித்ததில்லையா ?
|
37. இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக.
|
42. "மெசியாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அவர் யாருடைய மகன் ?" என்று வினவினார். "தாவீதின் மகன்" என்றார்கள்.
|
44. அவரை ஆண்டவர் என்று அழைப்பது எப்படி ? ஏனெனில், ' ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும் ' எனச் சொல்லியிருக்கிறாரே.
|
45. ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாக மட்டும் இருப்பது எப்படி ?" என்றார்.
|
46. அதற்கு ஒருவனும் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்ல முடியவில்லை. அன்றுமுதல் அவரிடம் மேலும் கேள்வி கேட்க ஒருவனும் துணியவில்லை.
|