1. "விண்ணரசு, தன் திராட்சைத் தோட்டத்திற்கு வேலையாட்களை அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்ற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாகும்.
|
2. நாள் ஒன்றுக்கு ஒரு வெள்ளிக்காசு என்று வேலையாட்களுடன் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சைத் தோட்டத்திற்கு அனுப்பினான்.
|
4. அவர்களிடம், 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள். நியாயமானதை உங்களுக்குக் கொடுப்பேன்' என்றான்.
|
5. அவர்கள் போனார்கள். மீண்டும் ஏறக்குறைய பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் மூன்று மணிக்கும் அப்படியே செய்தான்.
|
6. ஐந்து மணிக்கும் வெளியே சென்று வேறு சிலர் நிற்பதைக் கண்டான். அவர்களிடம், 'நாள் முழுவதும் நீங்கள் ஏன் இங்கு வாளாவிருக்கிறீர்கள்?' என்றான்.
|
7. அவர்களோ, 'எங்களை எவரும் வேலைக்கு அமர்த்தவில்லை' என்றனர். அவனோ, 'நீங்களும் என் திராட்சைத் தோட்டத்திற்குச் செல்லுங்கள்' என்று அவர்களுக்குச் சொன்னான்.
|
8. மாலையானதும் திராட்சைத் தோட்டத் தலைவன் தன் காரியத்தலைவனிடம், 'வேலையாட்களைக் கூப்பிட்டுக் கடைசி ஆள் தொடங்கி முதல் ஆள்வரை கூலிகொடு' என்றான்.
|
10. முதலில் அமர்த்தப்பட்டவர்கள் வந்தபோது தங்களுக்குக் கூடுதலாய்க் கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால், அவர்களுக்கும் தலைக்கொரு வெள்ளிக்காசுதான் கிடைத்தது.
|
12. பகலின் உழைப்பையும் வெயிலின் கொடுமையையும் தாங்கிய எங்களோடு இவர்களைச் சமமாக்கினீரே' என்று வீட்டுத்தலைவனுக்கு எதிராக முணுமுணுத்தனர்.
|
13. அவனோ மறுமொழியாக அவர்களுள் ஒருவனிடம், 'நண்பா, உனக்கு நான் அநீதி செய்யவில்லையே; ஒரு வெள்ளிக்காசு என்று என்னிடம் நீ கூலி பேசவில்லையா?
|
14. உனக்குரியதை வாங்கிக்கொண்டு போ. உனக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவனுக்கும் கொடுப்பது என் விருப்பம்.
|
15. என் விருப்பம்போலச் செய்ய எனக்கு உரிமையில்லையா? நான் நல்லவனாய் இருக்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையோ?' என்றான்.
|
18. "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு,
|
19. அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொன்னார்.
|
21. "என்ன வேண்டும்" என்று அவர் அவளைக் கேட்டார். "என் மக்கள் இவ்விருவரும் உம் அரசில், ஒருவன் உமது வலப்பக்கமும், மற்றவன் உமது இடப்பக்கமும் அமரச் செய்வீர் என வாக்களியும்" என்றாள்.
|
22. அதற்கு இயேசு, "நீங்கள் கேட்பது என்னவென்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிக்கமுடியுமா ?" என்று கேட்டார். அவர்களோ, "முடியும்" என்றனர்.
|
23. அதற்கு அவர், "ஆம், நான் குடிக்கப்போகும் கிண்ணத்தில் நீங்களும் குடிப்பீர்கள்; ஆனால் என் வலப்பக்கமோ, என் இடப்பக்கமோ அமர அருளுவது என்னுடையதன்று. யாருக்கு என் தந்தை ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அது கிடைக்கும்" என்றார்.
|
25. இயேசு அவர்களைத் தம்மிடம் அழைத்துக் கூறியது: "புறவினத்தாரின் தலைவர்கள் அவர்களை அடக்கி ஆளுகின்றனர்; பெரியவர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றனர்; இஃது உங்களுக்குத் தெரியும்.
|
26. உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. எவன் உங்களுக்குள் பெரியவனாக விரும்புகிறானோ அவன் உங்கள் பணியாளனாய் இருக்கட்டும்.
|
28. இவ்வாறே, மனுமகன் பணிவிடை பெறுவதற்கன்று, பணிவிடை புரியவும், பலருடைய மீட்புக்கு விலையாகத் தம் உயிரை அளிக்கவும் வந்தார்."
|
30. இதோ! வழியோரத்தில் உட்கார்ந்திருந்த குருடர் இருவர், இயேசு அவ்வழியே செல்லுகிறார் என்பதைக் கேள்வியுற்று, "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மீது இரக்கம்வையும்" என்று கூவினர்.
|
31. கூட்டமோ அவர்களைப் பேசாதிருக்கும்படி அதட்டிற்று. ஆனால் அவர்கள், "ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்கள்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாகக் கூவினர்.
|