2. அவன் தன் ஊழியரிடம், "இவர் ஸ்நாபக அருளப்பர். இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால்தான் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது" என்று சொன்னான்.
|
3. அந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாள்பொருட்டு அருளப்பரைப் பிடித்து விலங்கிட்டுச் சிறையிலடைத்திருந்தான்.
|
5. அவனோ அவரைக் கொன்றுவிட நினைத்தான். ஆனால், மக்கள் அவரை இறைவாக்கினராகக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்.
|
8. அவளோ தன் தாய் தூண்டிவிட்டபடி, "ஸ்நாபக அருளப்பரின் தலையை ஒரு தட்டில் இப்போதே எனக்குக் கொடும்" என்றாள்.
|
9. அரசன் வருந்தினான். ஆனால் தன் ஆணையின் பொருட்டும், விருந்தினர்பொருட்டும் அதைக் கொடுக்கக் கட்டளையிட்டான்.
|
13. இதைக் கேட்டதும் இயேசு அங்கிருந்து படகேறித் தனிமையாகப் பாழ்வெளி சென்றார். இதைக் கேட்டு மக்கட்கூட்டம் ஊர்களிலிருந்து கால்நடையாக அவரைப் பின்தொடர்ந்தது.
|
14. அவர் கரையில் இறங்கியபோது பெரும் கூட்டத்தைக் கண்டு அவர்கள்மீது மனமிரங்கி அவர்களுள் பிணியாளிகளைக் குணமாக்கினார்.
|
15. மாலையானதும் அவருடைய சீடர் அவரிடம் வந்து, "இது பாழ்வெளி ஆயிற்றே; நேரமும் ஆகிவிட்டது; ஊர்களுக்குச் சென்று உணவு வாங்கிக்கொள்ளும்படி கூட்டத்தை அனுப்பிவிடும்" என்றனர்.
|
19. கூட்டம் பசும்புல் தரையில் அமரும்படி கட்டளையிட்டு, ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பத்தைப் பிட்டுச் சீடருக்கு அளித்தார்; சீடர் கூட்டத்திற்கு அளித்தனர்.
|
22. தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகிலேறிக் கடலைக் கடந்து தமக்குமுன் அக்கரைக்குப்போகும்படி இயேசு வற்புறுத்தினார்.
|
28. அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, நீர்தாம் என்றால், நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வரக் கட்டளையிடும்" என்றார்.
|
30. காற்று பலமாயிருப்பதைக் கண்டு அஞ்சி மூழ்கப்போகையில், "ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்" என்று அலறினார்.
|
35. அவ்விடத்து மக்கள் அவரை அறிந்துகொண்டதும், சுற்றுப்புறமெங்கும் ஆள் அனுப்பி நோயாளிகள் அனைவரையும் அவரிடம் கொண்டுவந்து,
|