3. கூட்டம் அனைத்தும் கரையில் இருந்தது. அவர், அவர்களுக்கு உவமைகளால் பற்பல எடுத்துரைத்தார். "இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.
|
8. சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவற்றுள் ஒரு சில நூறு மடங்கு, வேறு சில அறுபது மடங்கு, இன்னும் சில முப்பது மடங்கு பலன் கொடுத்தன.
|
11. அவர் அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: "விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது. அவர்களுக்கோ கொடுத்துவைக்கவில்லை.
|
12. ஏனெனில், உள்ளவனுக்குக் கொடுக்கப்படும்; அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
|
13. ஏன் அவர்களிடம் உவமைகளில் பேசுகிறேனெனில், அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் கேட்பதில்லை; உணர்வதுமில்லை.
|
14. இசையாஸ் கூறியுள்ள இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: 'கேட்டுக் கேட்டும் நீங்கள் உணர்வதில்லை, பார்த்துப் பார்த்தும் நீங்கள் காண்பதில்லை.
|
15. அவர்கள் கண்ணால் காணாமலும் காதால் கேட்காமலும் உளத்தால் உணராமலும் அவர்கள் மனந்திரும்பாமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி இம்மக்களின் உள்ளம் மழுங்கிவிட்டது; இவர்கள் காது மந்தமாகிவிட்டது; கண்ணை மூடிக்கொண்டனர். '
|
16. உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன. காதுகளும் பேறுபெற்றவை; ஏனெனில் அவை கேட்கின்றன.
|
17. நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், நீதிமான்கள் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை.
|
19. விண்ணரசைப்பற்றிய வார்த்தையை ஒருவன் கேட்டும் உணராவிட்டால், அவன் உள்ளத்தில் விதைத்ததைத் தீயவன் வந்து பறித்துக்கொள்வான். வழியோரம் விதைக்கப்பட்டவன் இவனே.
|
21. ஆனால், அவன் தன்னில் வேரற்றவன்; நிலையற்றவன். வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றதும் அல்லது துன்புறுத்தப்பட்டதும் இடறல்படுவான்.
|
22. முட்செடிகள் நடுவில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு, இவ்வுலகக் கவலையும் செல்வமாயையும் வார்த்தையை நெரிக்க, பயனற்றுப் போகிறவனே.
|
23. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவன் யாரெனில், வார்த்தையைக் கேட்டு உணர்ந்துகொள்ளுகிறவனே. இவன் நூறு மடங்கோ அறுபது மடங்கோ முப்பது மடங்கோ பலன் கொடுப்பான்."
|
24. இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, தன் வயலில் நல்ல விதை விதைத்தவனுக்கு ஒப்பாகும்.
|
27. வீட்டுத்தலைவனிடம் ஊழியர் வந்து, 'ஐயா, உம் வயலில் நல்ல விதையல்லவா விதைத்தீர்? பின் அதில் களைகள் வந்தது எப்படி?' என்று கேட்டனர்.
|
28. அதற்கு அவன், ' இது பகைவன் செய்த வேலை ' என்றான். ஊழியரோ, 'நாங்கள் போய் அவற்றைப் பிடுங்கிச் சேர்க்க வேண்டுமா ? ' என்றனர்.
|
29. அவன், 'வேண்டாம்; களைகளைச் சேர்க்கும்போது ஒருவேளை கோதுமைப் பயிரையும் அவற்றுடன் பிடுங்கிவிடக்கூடும்.
|
30. அறுவடைவரை இரண்டையும் வளரவிடுங்கள். அறுவடைக்காலத்தில் அறுப்போரிடம், முதலில் களைகளை ஒன்றுசேர்த்து, எரிப்பதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்று சொல்வேன் ' என்றான்."
|
31. இன்னுமோர் உவமையை அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு, கடுகு மணிக்கு ஒப்பாகும். அதை ஒருவன் எடுத்துத் தன் வயலில் விதைக்கிறான்.
|
32. அது விதைகளிலெல்லாம் மிகச் சிறியதாயினும், வளர்ந்ததும் செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகி வானத்துப் பறவைகள் வந்து அதன் கிளைகளில் தங்கக்கூடிய மரமாகும்."
|
33. இன்னுமோர் உவமையும் அவர்களுக்கு எடுத்துச்சொன்னார்: "விண்ணரசு புளிப்பு மாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்து வைக்கிறாள். மாவு முழுதும் புளிப்பேறுகிறது."
|
34. இவையெல்லாம் இயேசு மக்கட்கூட்டத்திற்கு உவமைகளால் சொன்னார். உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் ஒன்றும் பேசியதில்லை.
|
35. 'உவமைகளில் பேசுவேன்; உலகம் தோன்றியதுமுதல் மறைந்துள்ளதை வெளியாக்குவேன்' என்று இறைவாக்கினர் கூறியது இவ்வாறு நிறைவேற வேண்டியிருந்தது.
|
36. பின்பு அவர் கூட்டத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்பொழுது அவருடைய சீடர் அவரை அணுகி, "வயலில் விதைத்த களைகளின் உவமையை எங்களுக்கு விளக்கிக்கூறும்" என்றனர்.
|
41. மனுமகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய அரசில் இடறலாய் உள்ள யாவற்றையும் நெறிகெட்டவர்களையும் ஒன்று சேர்த்து, ஃ தீச்சூளையில் தள்ளுவார்கள்.
|
43. அப்பொழுது நீதிமான்கள் தம் தந்தையின் அரசில் கதிரோனைப்போல் ஒளிர்வர். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்.
|
44. "விண்ணரசு, நிலத்தில் மறைந்துள்ள புதையலுக்கு ஒப்பாகும். அதைக் கண்டுபிடித்தவன் அதை மறைத்துவிட்டு, அதைக் கண்ட மகிழ்ச்சியில் போய்த் தனக்குள்ளதெல்லாம் விற்று அந்நிலத்தை வாங்கிக்கொள்கிறான்.
|
48. வலை நிறைந்ததும் அதை வெளியில் இழுத்து, கரையில் அமர்ந்து, நல்லவற்றைப் பொறுக்கிக் கூடைகளில் வைத்துக்கொண்டு தீயவற்றை வெளியே எறிந்துவிடுகின்றனர்.
|
52. அவர், "ஆகையால், விண்ணரசில் சீடனான மறைநூல் அறிஞன் எவனும், தன் கருவூலத்தினின்று புதியனவும் பழையனவும் எடுக்கிற வீட்டுத்தலைவனுக்கு ஒப்பாவான்" என்றார்.
|
54. தம் சொந்த ஊருக்கு வந்து அவர்களது செபக்கூடத்தில் போதிக்கலானார். அவர்கள் மலைத்துப்போய், "இந்த ஞானமும் புதுமைகளும் இவருக்கு எங்கிருந்து வந்தன ?
|
55. இவர் தச்சன்மகன் அல்லரோ ? இவருடைய தாய், மரியாள் என்பவள் அல்லளோ ? இவருடைய சகோதரர்: யாகப்பன், சூசை, சீமோன், யூதா அல்லரோ?
|
56. இவருடைய சகோதரிகள் யாவரும் நம்மிடையே இல்லையா ? பின் இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது ?" என்று சொல்லி, அவரைப்பற்றி இடறல்பட்டனர்.
|
57. இயேசு அவர்களை நோக்கி, "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர, மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
|