1. இயேசு தம் பன்னிரு சீடருக்கும் கட்டளை கொடுத்து முடிந்ததும், பக்கத்து ஊர்களில் போதிக்கவும் தூது உரைக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.
|
3. "வரப்போகிறவர் நீர்தாமோ? வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமோ?" என்று தம் சீடர்வழியாகக் கேட்டு அனுப்பினார்.
|
5. குருடர் பார்க்கின்றனர், முடவர் நடக்கின்றனர், தொழுநோயாளர் குணமடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர், இறந்தவர் உயிர்க்கின்றனர், எளியவர்க்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
|
7. அவர்கள் போகும்போது இயேசு அருளப்பரைப்பற்றி மக்கட்கூட்டத்திற்குச் சொன்னதாவது: "எதைப் பார்க்கப் பாலைவனத்திற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலையோ?
|
8. பின் எதைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த மனிதனையோ? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசர் மாளிகையில் இருக்கின்றனர்.
|
9. பின் எதைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினருக்கும் மேலானவரைத்தான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
|
10. இவரைப்பற்றித்தான்: 'இதோ! என் தூதரை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று எழுதியுள்ளது.
|
11. நான் உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: "பெண்களிடம் பிறந்தவர்களுள் ஸ்நாபக அருளப்பருக்கு மேலான எவரும் தோன்றவில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவன் அவரினும் பெரியவன்.
|
12. ஸ்நாபக அருளப்பர் நாள்முதல் இதுவரை, விண்ணரசு பலவந்தத்திற்கு உள்ளாகிவருகிறது; பலவந்தம் செய்வோர் அதைக் கைப்பற்றுகின்றனர்.
|
17. 'நாங்கள் குழல் ஊதினோம், நீங்கள் ஆடவில்லை; நாங்கள் புலம்பினோம் நீங்கள் மாரடிக்கவில்லை' என்று கூறும் சிறுவரைப்போன்றது.
|
18. ஏனெனில், அருளப்பர் வந்தபோது உண்ணா நோன்பிருந்தார். குடிக்கவுமில்லை. அவரைப் பேய்பிடித்தவன் என்று சொல்லுகிறார்கள்.
|
19. மனுமகன் வந்தபோதோ உண்டார், குடித்தார்; அவரை ' இதோ! போசனப்பிரியன், குடிகாரன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் நண்பன்', என்கிறார்கள். ஆனால், தேவஞானம் சரியென்று அதன் செயலால் விளங்கிற்று."
|
21. "கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.
|
22. எனினும், தீர்வைநாளில் தீர், சீதோனுக்கு நேரிடுவது உங்களுக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
|
23. கப்பர் நகூமே, வானளாவ உயர்வாயோ? பாதாளம்வரை தாழ்ந்திடுவாய். ஏனெனில், உன்னிடம் செய்த புதுமைகள் சோதோமில் செய்யப்பட்டிருப்பின், இந்நாள்வரை அது நிலைத்திருக்குமே.
|
24. எனினும், தீர்வைநாளில் சோதோம் நாட்டுக்கு நேரிடுவது உனக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாய் இராது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்."
|
25. அவ்வேளையில் இயேசு கூறியதாவது: "தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன்.
|
27. என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று, தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்.
|
29. உங்கள்மேல் என் நுகத்தை ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன். உங்கள் ஆன்மாவிற்கு இளைப்பாற்றி கிடைக்கும்.
|