தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மத்தேயு
1. தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது:
2. ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுக்கு யூதாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள்.
3. யூதாவுக்குப் பாரேசும் சாராவும் தாமாரிடம் பிறந்தார்கள். பாரேசுக்கு எஸ்ரோம் பிறந்தார். எஸ்ரோமுக்கு ஆராம் பிறந்தார்.
4. ஆராமுக்கு அம்மினதாப் பிறந்தார். அம்மினதாபுக்கு நசசோன் பிறந்தார். நகசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.
5. சல்மோனுக்கு ராகாபிடம் போவாஸ் பிறந்தார். போவாசுக்கு ரூத்திடம் ஓபேத் பிறந்தார். ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
6. ஈசாயுக்குத் தாவீது அரசர் பிறந்தார். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலொமோன் பிறந்தார்.
7. சாலொமோனுக்கு ரெகொபெயாம் பிறந்தார். ரெகொபெயாமுக்கு அபியா பிறந்தார் அபியாவுக்கு ஆசா பிறந்தார்.
8. ஆசாவுக்கு யோசபாத் பிறந்தார். யோசபாத்துக்கு யோராம் பிறந்தார். யோராமுக்கு உசியா பிறந்தார்.
9. உசியாவுக்கு யோதாம் பிறந்தார். யோதாமுக்கு ஆகாஸ் பிறந்தார். ஆகாசுக்கு எசேக்கியா பிறந்தார்.
10. எசேக்கியாவுக்கு மனாசே பிறந்தார். மனாசேயுக்கு ஆமோன் பிறந்தார். ஆமோனுக்கு யோசியா பிறந்தார்.
11. யோசியாவுக்கு எகொனியாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள். பாபிலோனுக்கு யூதர்கள் நாடுகடத்தப்பட்டது இக்காலத்தில்தான்.
12. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் எகொனியாவுக்கு சலாத்தியேல் பிறந்தார். சலாத்தியேலுக்கு சொரொபாபேல் பிறந்தார்.
13. சொரொபாபேலுக்கு அபியூத் பிறந்தார். அபியூத்துக்கு எலியாக்கீம் பிறந்தார். எலியாக்கீமுக்கு ஆசோர் பிறந்தார்.
14. ஆசோருக்கு சாதோக்கு பிறந்தார். சாதோக்குக்கு ஆகீம் பிறந்தார். ஆகீமுக்கு எலியூத் பிறந்தார்.
15. எலியூதுக்கு எலெயாசார் பிறந்தார். எலெயாசாருக்கு மாத்தான் பிறந்தார். மாத்தானுக்கு யாக்கோபு பிறந்தார்.
16. யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார். இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்.
17. ஆகமொத்தம்: ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறை பதினான்கு; தாவீதுமுதல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுவரை தலைமுறை பதினான்கு; பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுமுதல் கிறிஸ்துவரை தலைமுறை பதினான்கு.
18. இயேசு கிறிஸ்து தோன்றியது பின்வருமாறு: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசைக்கும் மண ஒப்பந்தம் ஆயிருக்க, அவர்கள் கூடிவாழுமுன் பரிசுத்த ஆவியினால் அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்தது.
19. அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.
20. இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.
21. அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
22. ' இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் ' என்று ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகக் கூறியது நிறைவேறும்படியே இவையனைத்தும் நிகழ்ந்தன.
23. இம்மானுவேல் என்றால், ' நம்மோடு கடவுள் ' என்பது பொருள்.
24. சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
25. அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார். அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 28 Chapters, Current Chapter 1 of Total Chapters 28
மத்தேயு 1:29
1. தாவீதின் மகனும், ஆபிரகாமின் மகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் தலைமுறை அட்டவணையாவது:
2. ஆபிரகாமுக்கு ஈசாக்கு பிறந்தார். ஈசாக்குக்கு யாக்கோபு பிறந்தார். யாக்கோபுக்கு யூதாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள்.
3. யூதாவுக்குப் பாரேசும் சாராவும் தாமாரிடம் பிறந்தார்கள். பாரேசுக்கு எஸ்ரோம் பிறந்தார். எஸ்ரோமுக்கு ஆராம் பிறந்தார்.
4. ஆராமுக்கு அம்மினதாப் பிறந்தார். அம்மினதாபுக்கு நசசோன் பிறந்தார். நகசோனுக்குச் சல்மோன் பிறந்தார்.
5. சல்மோனுக்கு ராகாபிடம் போவாஸ் பிறந்தார். போவாசுக்கு ரூத்திடம் ஓபேத் பிறந்தார். ஓபேதுக்கு ஈசாய் பிறந்தார்.
6. ஈசாயுக்குத் தாவீது அரசர் பிறந்தார். தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் சாலொமோன் பிறந்தார்.
7. சாலொமோனுக்கு ரெகொபெயாம் பிறந்தார். ரெகொபெயாமுக்கு அபியா பிறந்தார் அபியாவுக்கு ஆசா பிறந்தார்.
8. ஆசாவுக்கு யோசபாத் பிறந்தார். யோசபாத்துக்கு யோராம் பிறந்தார். யோராமுக்கு உசியா பிறந்தார்.
9. உசியாவுக்கு யோதாம் பிறந்தார். யோதாமுக்கு ஆகாஸ் பிறந்தார். ஆகாசுக்கு எசேக்கியா பிறந்தார்.
10. எசேக்கியாவுக்கு மனாசே பிறந்தார். மனாசேயுக்கு ஆமோன் பிறந்தார். ஆமோனுக்கு யோசியா பிறந்தார்.
11. யோசியாவுக்கு எகொனியாவும் அவருடைய சகோதரர்களும் பிறந்தார்கள். பாபிலோனுக்கு யூதர்கள் நாடுகடத்தப்பட்டது இக்காலத்தில்தான்.
12. பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின் எகொனியாவுக்கு சலாத்தியேல் பிறந்தார். சலாத்தியேலுக்கு சொரொபாபேல் பிறந்தார்.
13. சொரொபாபேலுக்கு அபியூத் பிறந்தார். அபியூத்துக்கு எலியாக்கீம் பிறந்தார். எலியாக்கீமுக்கு ஆசோர் பிறந்தார்.
14. ஆசோருக்கு சாதோக்கு பிறந்தார். சாதோக்குக்கு ஆகீம் பிறந்தார். ஆகீமுக்கு எலியூத் பிறந்தார்.
15. எலியூதுக்கு எலெயாசார் பிறந்தார். எலெயாசாருக்கு மாத்தான் பிறந்தார். மாத்தானுக்கு யாக்கோபு பிறந்தார்.
16. யாக்கோபுக்கு மரியாளின் கணவரான சூசை பிறந்தார். இவளிடம் கிறிஸ்து என்னும் இயேசு பிறந்தார்.
17. ஆகமொத்தம்: ஆபிரகாம்முதல் தாவீதுவரை தலைமுறை பதினான்கு; தாவீதுமுதல் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுவரை தலைமுறை பதினான்கு; பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதுமுதல் கிறிஸ்துவரை தலைமுறை பதினான்கு.
18. இயேசு கிறிஸ்து தோன்றியது பின்வருமாறு: அவருடைய தாய் மரியாளுக்கும் சூசைக்கும் மண ஒப்பந்தம் ஆயிருக்க, அவர்கள் கூடிவாழுமுன் பரிசுத்த ஆவியினால் அவள் கருத்தாங்கியிருப்பதாகத் தெரிந்தது.
19. அவள் கணவர் சூசை நீதிமானாயும், அவளைக் காட்டிக் கொடுக்க மனமில்லாதவராயும், இருந்ததால் அவளை மறைவாக விலக்கிவிட வேண்டும் என்றிருந்தார்.
20. இதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கையில், இதோ! ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "சூசையே, தாவீதின் மகனே, உம்முடைய மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில், அவள் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால்தான். அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்.
21. அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார்.
22. ' இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் ' என்று ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகக் கூறியது நிறைவேறும்படியே இவையனைத்தும் நிகழ்ந்தன.
23. இம்மானுவேல் என்றால், ' நம்மோடு கடவுள் ' என்பது பொருள்.
24. சூசை விழித்தெழுந்து, ஆண்டவரின் தூதர் தமக்குக் கட்டளையிட்டவாறு தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.
25. அவள் தன் தலைப்பேறான மகனைப் பெற்றெடுக்கும்வரை அவர் அவளை அறியாதிருந்தார். அவருக்கு இயேசு என்று பெயரிட்டார்.
Total 28 Chapters, Current Chapter 1 of Total Chapters 28
×

Alert

×

tamil Letters Keypad References