1. அந்நாட்களில் மீண்டும் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது. அவர்கள் உண்ண ஒன்றும் இல்லை. அப்போது, அவர் சீடரை அழைத்து,
|
2. "இக்கூட்டத்தின்மீது நான் மனமிரங்குகிறேன். ஏனெனில், இவர்கள் விடாமல் இம்மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். இவர்களுக்கு உணவு ஒன்றுமில்லையே!
|
3. இவர்களை வீட்டுக்குப் பட்டினியாக நான் அனுப்பினால் வழியில் சோர்ந்து விழுவர். இவர்களில் சிலர் தொலைவிலிருந்து வந்துள்ளனர்" என்றார்.
|
6. தரையில் பந்தியமரக் கூட்டத்துக்குக் கட்டளையிட்டார். பின்பு ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றிகூறி, பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். அவர்கள் கூட்டத்துக்குப் பரிமாறினர்.
|
7. அவர்களிடம் சிறு மீன்கள் சிலவும் இருந்தன. அவற்றையும் அவர் எடுத்து இறைபுகழ் கூறி, பரிமாறச் சொன்னார்.
|
11. பரிசேயர் வந்து அவரோடு தர்க்கிக்கத் தொடங்கி, வானிலிருந்து அருங்குறி ஒன்றைக் காட்டும்படி கேட்டு அவரைச் சோதித்தனர்.
|
12. அவர் பெருமூச்சுவிட்டு, "இத்தலைமுறை அருங்குறி கேட்பானேன்? உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: இத்தலைமுறைக்கு அருங்குறி எதுவும் அளிக்கப்படாது" என்றார்.
|
15. பரிசேயருடைய புளிப்பு மாவையும், ஏரோதுடைய புளிப்பு மாவையும் குறித்து விழிப்பாயிருங்கள், எச்சரிக்கை" என்று அவர் அறிவுரை கூறினார்.
|
17. இதையறிந்த இயேசு அவர்களை நோக்கி, "உங்களிடம் அப்பம் இல்லை என்று பேசிக்கொள்வானேன்? இன்னுமா உணரவில்லை? இன்னுமா விளங்கவில்லை?
|
18. உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் காண்பதில்லையா? காதிருந்தும் கேட்பதில்லையா? உங்களுக்கு நினைவில்லையா?
|
19. ஐயாயிரம் பேருக்கு ஐந்து அப்பத்தை நான் பகிர்ந்தபோது, மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?" என்று கேட்க, "பன்னிரண்டு" என்றனர்.
|
20. ஏழு அப்பத்தை நாலாயிரம் பேருக்கு நான் பகிர்ந்தபோது மீதித்துண்டுகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?" என, "ஏழு" என்றனர்.
|
22. அவர்கள் பெத்சாய்தாவுக்கு வந்தனர். குருடன் ஒருவனை மக்கள் அவரிடம் கொண்டு வந்து, அவனைத் தொடும்படி வேண்டினர்.
|
23. அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனை ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் விழிகளில் உமிழ்ந்து, கைகளை அவன்மேல் வைத்து, "ஏதாவது தெரிகிறதா?" என்று கேட்டார்.
|
24. அவன் பார்வை பெறத்தொடங்கி, "மக்களைப் பார்க்கிறேன், மரங்கள் போலிருக்கின்றனர்; ஆனால் நடக்கின்றனர்" என்றான்.
|
25. பின்பு அவர் தம் கைகளை அவன் கண்களில் மீண்டும் வைக்கவே, அவன் பார்வை பெற்றுக் குணமடைந்து, அனைத்தையும் தெளிவாகக் காணலானான்.
|
27. இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த ஊர்களுக்குப் புறப்பட்டுப் போனார். வழியில் தம் சீடரை நோக்கி, "மக்கள், என்னை யாரென்று சொல்லுகிறார்கள்?" எனக்கேட்டார்.
|
28. அதற்கு அவர்கள், "சிலர் ஸ்நாபக அருளப்பர் என்றும், சிலர் எலியாஸ் என்றும், சிலர் இறைவாக்கினர்களுள் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்" என்றனர்.
|
29. பின் அவர், "நீங்களோ என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" என்று அவர்களைக் கேட்டார். இராயப்பர் மறுமொழியாக, "நீர் மெசியா" என்றார்.
|
31. மேலும் மனுமகன் பாடுகள் பல படவும் மூப்பராலும், தலைமைக்குருக்களாலும், மறைநூல் அறிஞராலும் புறக்கணிக்கப்பட்டுக் கொலையுண்டு, மூன்று நாளுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டுமென அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்.
|
33. அவர் தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து, "போ பின்னாலே, சாத்தானே, ஏனெனில், உன் கருத்துகள் கடவுளுடைய கருத்துகள் அல்ல, மனிதனுடைய கருத்துகளே" என்று இராயப்பரைக் கடிந்துகொண்டார்.
|
34. பின் தம் சீடரையும் கூட்டத்தையும் அழைத்து, "என்னைப் பின்செல்ல விரும்புகிறவன் தன்னையே மறுத்துத் தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும்.
|
35. ஏனெனில், தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.
|
36. ஒருவன் தன் ஆன்மாவிற்குக் கேடு விளைவித்து, உலகமெல்லாம் தனதாக்கிக்கொள்வதனால் அவனுக்கு வரும் பயனென்ன?
|
38. விபசாரமும் பாவமும் உள்ள இத்தலைமுறையில் எண்னைப்பற்றியும், என் வார்த்தைகளைப்பற்றியும் வெட்கப்படுகிறவன் எவனோ, அவனைப்பற்றி மனுமகன் தம் தந்தையின் மாட்சிமையில் பரிசுத்த வானதூதரோடு வரும்போது வெட்கப்படுவார்" என்றார்.
|