2. ஓய்வுநாளன்று செபக்கூடத்தில் போதிக்கத் தொடங்கினார். கேட்டவர் பலர் மலைத்துப்போய், "இதெல்லாம் இவருக்கு எங்கிருந்து வந்தது? என்னே இவர் பெற்ற ஞானம்! என்னே இவர் கையால் ஆகும் புதுமைகள்!
|
3. இவர் தச்சன் அல்லரோ? மரியாளின் மகன் தானே! யாகப்பன், சூசை, யூதா, சீமோன் இவர்களுடைய சகோதரர்தானே! இவர் சகோதரிகளும் இங்கு நம்மோடு இல்லையா ?' என்று சொல்லி அவர்மட்டில் இடறல்பட்டனர்.
|
4. இயேசு அவர்களை நோக்கி, "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினருக்கு மதிப்பு உண்டு" என்றார்.
|
5. அங்கே பிணியாளர் ஒருசிலர்மீது கைகளை வைத்துக் குணமாக்கியது தவிர வேறு ஒரு புதுமையும் செய்ய முடியவில்லை.
|
6. அவர்களுக்கு விசுவாசமில்லாததைக் கண்டு அவர் வியப்புற்றார். சுற்றிலுமுள்ள ஊர்களில் போதித்துக் கொண்டு வந்தார்.
|
7. பன்னிருவரையும் அழைத்து இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார். அவர்களுக்கு அசுத்த அவிகளின்மேல் அதிகாரம் அளித்தார்.
|
8. மேலும் பயணத்துக்கு ஒரு கோல் தவிர, பையோ உணவோ, மடியில் காசோ கொண்டுபோக வேண்டாம் என்று கட்டளையிட்டார்.
|
10. பின்னும் அவர்களுக்குக் கூறியது: " நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால் அவ்விடத்திலிருந்து போகும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
|
11. எந்த ஊராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுக்குச் செவி சாய்க்காமலும் இருந்தால், நீங்கள் அங்கிருந்து வெளியேறி அவர்களுக்கு எதிர்சாட்சியாக உங்கள் காலிலிருக்கும் தூசியைத் தட்டிவிடுங்கள்."
|
14. ஏரோது அரசன் அவரைப்பற்றிக் கேள்வியுற்றான். ஏனெனில், அவர் பெயர் எங்கும் விளங்கிற்று. மக்களும், "ஸ்நாபக அருளப்பர் இறந்தோரிடமிருந்து உயிர்த்திருக்கிறார். ஆதலால் புதுமை செய்யும் வல்லமை இவரிடம் செயலாற்றுகிறது". என்றனர்.
|
15. "இவர் எலியாஸ்" என்றனர் சிலர். "இறைவாக்கினர்களைப்போல் இருவரும் ஓர் இறைவாக்கினர்" என்றனர் வேறு சிலர்.
|
16. இதைக் கேட்ட ஏரோது, "இவர் அருளப்பர்தாம். அவர்தலையை நான் வெட்டினேன். ஆனால் அவர் உயிர்த்திருக்கிறார்" என்றான்.
|
17. இந்த ஏரோது தன் சகோதரன் பிலிப்புவின் மனைவி ஏரோதியாளின் பொருட்டு, ஆள்விட்டு, அருளப்பரைப் பிடித்துச் சிறையில் விலங்கிட்டிருந்தான். ஏனெனில், அவளைத் தன் மனைவியாக்கிருந்தான்.
|
20. ஏனெனில், அருளப்பர் நீதிமானும் புனிதரும் என்றறிந்த ஏரோது அவருக்கு அஞ்சி, அவரைப் பாதுகாத்து வந்தான். அவர் சொல்லைக் கேட்கும்போது மிகக் கலக்கமுறுவான். ஆயினும் அவருக்கு மனமுவந்து செவிசாய்ப்பான்.
|
21. ஒருநாள் ஏரோதியாளுக்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது. ஏரோது, தன் பிறப்பு விழாவில் பெருங்குடி மக்களுக்கும் படைத்தலைவர்க்கும் கலிலேயாவின் பெரியோர்க்கும் விருந்து செய்தான்.
|
22. அந்த எரோதியாளின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும் விருந்தினரையும் மகிழ்வித்தாள். அரசன் சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்" என்றான்.
|
24. அவள் வெளியே சென்று, "என்ன கேட்கலாம்?" என்று தன் தாயை வினவினாள். அவளோ, ஸ்நாபக அருளப்பரின் தலையைக் கேள்" என்றாள். உடனே அவள் அரசனிடம் விரைந்து வந்து,
|
26. அரசன் மிக வருத்தமுற்றான். ஆனால், தன் ஆணையின் பொருட்டும் விருந்தினர் பொருட்டும் அவளுக்கு மறுத்துச் சொல்ல விரும்பவில்லை.
|
28. அவன் போய்ச் சிறையில் அவருடைய தலையை வெட்டினான். அதைத் தட்டில் கொண்டுவந்து சிறுமியிடம் கொடுக்க, அவளும் தன் தாயிடம் கொடுத்தாள்.
|
31. அவர் அவர்களைப் பார்த்து, "நீங்கள் தனிமையான இடத்துக்கு ஒதுக்கமாக வந்து சற்றே இளைப்பாறுங்கள்" என்றார். ஏனெனில், பலர் வருவதும் போவதுமாயிருந்தனர். உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
|
33. அவர்கள் போவதை மக்கள் கண்டார்கள். இதைப் பலர் தெரிந்து கொண்டு எல்லா ஊர்களிலிருந்தும் கால்நடையாகக் கூட்டமாய் ஓடி அவர்களுக்குமுன் அங்குவந்து சேர்ந்தார்கள்.
|
34. இயேசு கரையில் இறங்கியபோது பெருங்கூட்டத்தைக் கண்டார். ஆயனில்லா ஆடுகள்போல் இருந்ததால் அவர்கள்மீது மனமிரங்கி நெடுநேரம் போதிக்கலானார்.
|
36. சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று உண்பதற்கு ஏதாவது வாங்கிக் கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடும்" என்றனர்.
|
37. அதற்கு அவர், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என, "அவர்களுக்கு உணவு கொடுக்க, நாங்கள் இருநூறு வெள்ளிக் காசுக்கு அப்பம் வாங்கிவர வேண்டுமா?' என்றனர்.
|
38. அவர் அவர்களை நோக்கி, "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்" என்று கூறினார். அவர்களும் பார்த்துவந்து, "ஐந்து அப்பங்கள் இருக்கின்றன. இரண்டு மீனும் உண்டு" என்றனர்.
|
41. ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, அப்பங்களைப் பிட்டு, சீடருக்கு அளித்துப் பரிமாறச் சொன்னார். இரண்டு மீனையும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார்.
|
45. தாம் மக்களை அனுப்பிக்கொண்டிருக்கையில், சீடர்கள் உடனே படகேறிக் கடலைக் கடந்து முன்னதாகப் பெத்சாயிதாவை நோக்கிப் போகும்படி இயேசு வற்புறுத்தினார்.
|
48. எதிர்காற்று அடித்தால் அவர்கள் தண்டுவலிக்க வருந்துவதைக் கண்டு, ஏறக்குறைய நான்காம் சாமத்தில் அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்துவந்து அவர்களைக் கடந்து செல்ல இருந்தார்.
|
50. அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்று சொன்னார்.
|
51. அவர்களை அணுகிப் படகில் ஏறினார். காற்று ஓய்ந்தது. அவர்கள் தங்களுக்குள் மிகமிகத் திகைத்துப்போயினர்.
|
52. ஏனெனில், அப்பங்களின் புதுமையைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது.
|
55. அந்நாடெங்கும் விரைந்துபோய், அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம் நேயாளிகளைப் படுக்கைகளில் கொண்டுவரத் தொடங்கினர்.
|
56. அவர் ஊரோ நகரோ பட்டியோ, எங்குச் சென்றாலும், பொதுவிடங்களில் நோயாளிகளைக் கிடத்தி அவருடைய போர்வையின் விளிம்பையாகிலும் தொடவிடும்படி அவரை வேண்டுவர். அவரைத் தொட்ட அனைவரும் குணம் பெறுவர்.
|