தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மாற்கு
1. மீண்டும் அவர் கடலோரத்தில் போதிக்கத் தொடங்கினார். மாபெரும் கூட்டமொன்று அவரை நெருக்கவே, அவர் படகிலேறிக் கடலிலிருக்க, கூட்டமனைத்தும் கடலோரமாய்க் கரையிலிருந்தது.
2. அவர் அவர்களுக்கு உவமைகளால் பற்பல போதிக்கலானார். போதிக்கையில் சொன்னதாவது:
3. "கேளுங்கள்: இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.
4. விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழவே, பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.
5. சில அதிக மண்ணில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அடி மண்ணில்லாததால் உடனே முளைத்தன.
6. வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்து போயின.
7. சில முட்செடிகன் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெரித்துவிடவே அவை பலன் கொடுக்கவில்லை.
8. சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து ஓங்கி வளர்ந்து ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுத்தன."
9. மேலும், "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
10. அவர் தனித்திருக்கையில் பன்னிருவரும், அவரைச் சூழ இருந்தவர்களும் உவமைகளைப் பற்றி வினவினர்.
11. அவர் அவர்களை நோக்கி: " கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.
12. எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, ' பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே ' " என்றார்.
13. மேலும், அவர்களை நோக்கி, "இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா? பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்?
14. விதைப்பவன் விதைப்பது தேவ வார்த்தை.
15. வழியோரமாய் விழுந்த வார்த்தை என்னும் விதைப்போலச் சிலர் உள்ளனர். அவர்கள் அதைக் கேட்டவுடனே அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைச் சாத்தான் வந்து எடுத்துவிடுகிறான்.
16. அவ்வாறே பாறைநிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒருசிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
17. ஆனால், இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு, வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல்படுவர்.
18. முட்செடிகள் நடுவில் விழுந்த விதை போன்றவர்கள் வேறு சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்கின்றனர்.
19. ஆனால், உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தையை நெரிக்க அது பயனற்றுப் போகின்றது.
20. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைபோன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும் அறுப்பதும் நூறுமாகப் பலன்கொடுக்கின்றனர்" என்றார்.
21. மேலும் அவர்களை நோக்கி, "விளக்கைக் கொண்டுவருவது எதற்கு? மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா? விளக்குத் தண்டின்மேல் வைப்பதற்கு அன்றோ?
22. "வெளிப்படாதபடி ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாதபடி மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை.
23. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
24. பின்னும் அவர் சொன்னதாவது: "நீங்கள் கேட்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், கூடவும் கொடுக்கப்படும்.
25. ஏனெனில் உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
26. "கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.
27. அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
28. நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி.
29. பயிர் விளைந்ததும் அவன் அரிவாளை எடுக்கிறான். ஏனெனில், அறுவடை வந்துவிட்டது" என்றார்.
30. பின்னும், "கடவுளரசை எதற்கு ஒப்பிடுவோம்? எந்த உவமையால் எடுத்துக்காட்டுவோம்? அது கடுகுமணியைப் போன்றது.
31. இது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள விதைகளிலெல்லாம் மிகச் சிறியது.
32. விதைத்தபின்போ, முளைத்தெழுந்து செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகித் தன் நிழலில் வானத்துப் பறவைகள் வந்து தங்கக்கூடிய பெருங்கிளைகள் விடும்" எனறார்
33. அவர்கள் கேட்டறியும் திறனுக்கேற்ப இத்தகைய பல உவமைகளால் அவர்களுக்குத் தேவ வார்த்தையைச் சொல்லுவார்.
34. உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் பேசியதில்லை. தம் சீடருக்கோ தனியாக அனைத்தையும் விளக்குவார்.
35. அன்று மாலை அவர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.
36. அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர். அவருடன் வேறு படகுகளும் சென்றன.
37. அப்போது பெரிய பயுல் காற்று உண்டாயிற்று. அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.
38. அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே; உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.
39. அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றனர். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.
40. பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.
41. அவர்கள் பெரிதும் அச்சமுற்று, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 4 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
மாற்கு 4:43
1. மீண்டும் அவர் கடலோரத்தில் போதிக்கத் தொடங்கினார். மாபெரும் கூட்டமொன்று அவரை நெருக்கவே, அவர் படகிலேறிக் கடலிலிருக்க, கூட்டமனைத்தும் கடலோரமாய்க் கரையிலிருந்தது.
2. அவர் அவர்களுக்கு உவமைகளால் பற்பல போதிக்கலானார். போதிக்கையில் சொன்னதாவது:
3. "கேளுங்கள்: இதோ, விதைப்பவன் விதைக்கச் சென்றான்.
4. விதைக்கும்பொழுது சில விதைகள் வழியோரமாய் விழவே, பறவைகள் வந்து அவற்றைத் தின்று விட்டன.
5. சில அதிக மண்ணில்லாத பாறை நிலத்தில் விழுந்தன. அடி மண்ணில்லாததால் உடனே முளைத்தன.
6. வெயில் ஏறியதும் தீய்ந்து, வேரில்லாமையால் காய்ந்து போயின.
7. சில முட்செடிகன் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெரித்துவிடவே அவை பலன் கொடுக்கவில்லை.
8. சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து ஓங்கி வளர்ந்து ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுத்தன."
9. மேலும், "கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
10. அவர் தனித்திருக்கையில் பன்னிருவரும், அவரைச் சூழ இருந்தவர்களும் உவமைகளைப் பற்றி வினவினர்.
11. அவர் அவர்களை நோக்கி: " கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.
12. எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, ' பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே ' " என்றார்.
13. மேலும், அவர்களை நோக்கி, "இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா? பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்?
14. விதைப்பவன் விதைப்பது தேவ வார்த்தை.
15. வழியோரமாய் விழுந்த வார்த்தை என்னும் விதைப்போலச் சிலர் உள்ளனர். அவர்கள் அதைக் கேட்டவுடனே அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைச் சாத்தான் வந்து எடுத்துவிடுகிறான்.
16. அவ்வாறே பாறைநிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒருசிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
17. ஆனால், இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு, வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல்படுவர்.
18. முட்செடிகள் நடுவில் விழுந்த விதை போன்றவர்கள் வேறு சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்கின்றனர்.
19. ஆனால், உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தையை நெரிக்க அது பயனற்றுப் போகின்றது.
20. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைபோன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும் அறுப்பதும் நூறுமாகப் பலன்கொடுக்கின்றனர்" என்றார்.
21. மேலும் அவர்களை நோக்கி, "விளக்கைக் கொண்டுவருவது எதற்கு? மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா? விளக்குத் தண்டின்மேல் வைப்பதற்கு அன்றோ?
22. "வெளிப்படாதபடி ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை. வெளியாகாதபடி மறைந்திருப்பதும் ஒன்றுமில்லை.
23. கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்" என்றார்.
24. பின்னும் அவர் சொன்னதாவது: "நீங்கள் கேட்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், கூடவும் கொடுக்கப்படும்.
25. ஏனெனில் உள்ளவனுக்குக் கொடுக்கப்படும், இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
26. "கடவுளரசு நிலத்தில் விதையைப் போட்ட ஒருவனுக்கு ஒப்பாயிருக்கிறது.
27. அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
28. நிலம் தானாகவே பலன் அளிக்கிறது: முதலில் பயிர், பின், கதிர், அதன்பின் கதிர்நிறைய மணி.
29. பயிர் விளைந்ததும் அவன் அரிவாளை எடுக்கிறான். ஏனெனில், அறுவடை வந்துவிட்டது" என்றார்.
30. பின்னும், "கடவுளரசை எதற்கு ஒப்பிடுவோம்? எந்த உவமையால் எடுத்துக்காட்டுவோம்? அது கடுகுமணியைப் போன்றது.
31. இது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள விதைகளிலெல்லாம் மிகச் சிறியது.
32. விதைத்தபின்போ, முளைத்தெழுந்து செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகித் தன் நிழலில் வானத்துப் பறவைகள் வந்து தங்கக்கூடிய பெருங்கிளைகள் விடும்" எனறார்
33. அவர்கள் கேட்டறியும் திறனுக்கேற்ப இத்தகைய பல உவமைகளால் அவர்களுக்குத் தேவ வார்த்தையைச் சொல்லுவார்.
34. உவமைகளால் அன்றி அவர் அவர்களிடம் பேசியதில்லை. தம் சீடருக்கோ தனியாக அனைத்தையும் விளக்குவார்.
35. அன்று மாலை அவர்களிடம், "அக்கரைக்குச் செல்வோம்" என்றார்.
36. அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர். அவருடன் வேறு படகுகளும் சென்றன.
37. அப்போது பெரிய பயுல் காற்று உண்டாயிற்று. அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.
38. அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே; உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.
39. அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றனர். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.
40. பின், அவர் அவர்களை நோக்கி, "ஏன் இவ்வளவு பயம்? இன்னும் உங்களுக்கு விசுவாசமில்லையா?" என்றார்.
41. அவர்கள் பெரிதும் அச்சமுற்று, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
Total 16 Chapters, Current Chapter 4 of Total Chapters 16
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

tamil Letters Keypad References