1. மீண்டும் அவர் கடலோரத்தில் போதிக்கத் தொடங்கினார். மாபெரும் கூட்டமொன்று அவரை நெருக்கவே, அவர் படகிலேறிக் கடலிலிருக்க, கூட்டமனைத்தும் கடலோரமாய்க் கரையிலிருந்தது.
|
7. சில முட்செடிகன் நடுவில் விழுந்தன. முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெரித்துவிடவே அவை பலன் கொடுக்கவில்லை.
|
8. சில நல்ல நிலத்தில் விழுந்தன. அவை முளைத்து ஓங்கி வளர்ந்து ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன்கொடுத்தன."
|
11. அவர் அவர்களை நோக்கி: " கடவுளது அரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. புறத்தே இருப்பவர்களுக்கோ எல்லாம் உவமைகளாயிருக்கின்றன.
|
12. எதெற்கெனில், ஒருவேளை அவர்கள் மனந்திரும்பி மன்னிப்புப் பெறாதபடி, ' பார்த்துப் பார்த்தும் காணாமலும், கேட்டுக் கேட்டும் உணராமலும் இருக்கவே ' " என்றார்.
|
13. மேலும், அவர்களை நோக்கி, "இவ்வுவமை உங்களுக்கு விளங்கவில்லையா? பின் எப்படி எல்லா உவமைகளையும் புரிந்துகொள்வீர்கள்?
|
15. வழியோரமாய் விழுந்த வார்த்தை என்னும் விதைப்போலச் சிலர் உள்ளனர். அவர்கள் அதைக் கேட்டவுடனே அவர்களுடைய உள்ளத்தில் விதைக்கப்பட்ட வார்த்தையைச் சாத்தான் வந்து எடுத்துவிடுகிறான்.
|
16. அவ்வாறே பாறைநிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள் ஒருசிலர் உள்ளனர். இவர்கள் வார்த்தையைக் கேட்டவுடன் மகிழ்வோடு ஏற்றுக் கொள்ளுகின்றனர்.
|
17. ஆனால், இவர்கள் வேரற்றவர்கள், நிலையற்றவர்கள். பின்பு, வார்த்தையின் பொருட்டு வேதனையுற்றாலோ துன்புறுத்தப்பட்டாலோ உடனே இடறல்படுவர்.
|
19. ஆனால், உலகக் கவலையும் செல்வ மாயையும் மற்ற இச்சைகளும் நுழைந்து வார்த்தையை நெரிக்க அது பயனற்றுப் போகின்றது.
|
20. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைபோன்றவர்கள் சிலர். இவர்கள் வார்த்தையைக் கேட்டு ஏற்றுக்கொண்டு முப்பதும் அறுப்பதும் நூறுமாகப் பலன்கொடுக்கின்றனர்" என்றார்.
|
21. மேலும் அவர்களை நோக்கி, "விளக்கைக் கொண்டுவருவது எதற்கு? மரக்காலின் கீழோ கட்டிலின் கீழோ வைப்பதற்கா? விளக்குத் தண்டின்மேல் வைப்பதற்கு அன்றோ?
|
24. பின்னும் அவர் சொன்னதாவது: "நீங்கள் கேட்கும் வார்த்தைகளைக் கவனியுங்கள். எந்த அளவையால் அளப்பீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும், கூடவும் கொடுக்கப்படும்.
|
27. அவன் இரவில் தூங்கினாலோ பகலில் விழித்திருந்தாலோ, எவ்வாறென்று அவனுக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
|
30. பின்னும், "கடவுளரசை எதற்கு ஒப்பிடுவோம்? எந்த உவமையால் எடுத்துக்காட்டுவோம்? அது கடுகுமணியைப் போன்றது.
|
32. விதைத்தபின்போ, முளைத்தெழுந்து செடிகளிலெல்லாம் மிகப் பெரியதாகித் தன் நிழலில் வானத்துப் பறவைகள் வந்து தங்கக்கூடிய பெருங்கிளைகள் விடும்" எனறார்
|
33. அவர்கள் கேட்டறியும் திறனுக்கேற்ப இத்தகைய பல உவமைகளால் அவர்களுக்குத் தேவ வார்த்தையைச் சொல்லுவார்.
|
36. அவர்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு அவரை அப்படியே படகில் அழைத்துச் சென்றனர். அவருடன் வேறு படகுகளும் சென்றன.
|
37. அப்போது பெரிய பயுல் காற்று உண்டாயிற்று. அலைகள் படகின்மேல் மோத, படகு நீரால் நிரம்பும் தறுவாயிலிருந்தது.
|
38. அவர் பின்னணியத்தில் தலையணை மீது தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி, "போதகரே, மடிந்து போகிறோமே; உமக்கு அக்கறை இல்லையா?" என்றனர்.
|
39. அவர் எழுந்து, காற்றைக் கடிந்து கடலை நோக்கி, "இசையாதே, சும்மாயிரு" என்றனர். காற்று நின்றது, பேரமைதி உண்டாயிற்று.
|
41. அவர்கள் பெரிதும் அச்சமுற்று, "காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே, இவர் யாராயிருக்கலாம்?" என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.
|