4. பின் அவர்களிடம் "ஓய்வுநாளில் எது செய்வது முறை? நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா?" என்று கேட்டார்.
|
5. அவர்களோ பேசாதிருந்தனர். அவர் சினத்தோடு அவர்களைச் சுற்றிப் பார்த்து, அவர்களது மனக் கடினத்தைக் கண்டு வருந்தி, அவனை நோக்கி, "கையை நீட்டு" என்றார். நீட்டினான்; கை குணமாயிற்று.
|
6. பரிசேயரோ வெளியே போய், ஏரோதியரோடு சேர்ந்து அவரை எப்படித் தொலைக்கலாமென்று அவருக்கெதிராக உடனே ஆலோசனை செய்தனர்.
|
8. கலிலேயாவிலிருந்து பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் செய்ததெல்லாம் கேள்வியுற்று யூதேயா, யெருசலேம், இதுமேயா, யோர்தான் அக்கரைப்பகுதி, தீர், சீதோன் வட்டாரம் ஆகிய இடங்களிலிருந்தும் திரளான மக்கள் அவரிடம் வந்தனர்.
|
9. கூட்டமாயிருக்கவே, அவர்கள் தம்மை நெருக்காதபடி தமக்குப் படகு ஒன்றைத் தயாராக வைத்திருக்குமாறு சீடருக்குச் சொன்னார்.
|
10. ஏனெனில், பலரை அவர் குணமாக்கியதால் நோயாளிகளெல்லாரும் அவரைத் தொடவேண்டுமென்று அவர்மேல் வந்து விழுந்தனர்.
|
15. பேய்களை ஓட்டும் அதிகாரத்தோடு தூது அறிவிக்கத் தாம் அனுப்புவதற்குமெனப் பன்னிருவரை ஏற்படுத்தினார். இவ்வாறு பன்னிருவரை ஏற்படுத்தினார்.
|
17. செபெதேயுவின் மகன் யாகப்பர், யாகப்பருடைய சகோதரர் அருளப்பர் - இவர்களுக்கு இடியின் மக்கள் எனப் பொருள்படும் போவனேர்கெஸ் எனப் பெயரிட்டார்.
|
18. பெலவேந்திரர், பிலிப்பு, பாத்தொலொமேயு, மத்தேயு, தோமையார், அல்பேயுவின் மகன் யாகப்பர், ததேயு, கனானேய சீமோன்,
|
21. அவருடைய உறவினர் இதைக் கேட்டு அவரைப் பிடித்துக்கொண்டுவரப் புறப்பட்டார்கள். ஏனெனில், அவர் மதிமயங்கிவிட்டார். என்று மக்கள் சொல்லிக்கொண்டிருந்தனர்.
|
22. யெருசலேமிலிருந்து வந்த மறைநூல் அறிஞர், இவரைப் பெயல்செபூல் பிடித்திருக்கிறதென்றும், பேய்த்தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்றும் சொல்லி வந்தனர்.
|
23. ஆதலால் அவர் அவர்களை அழைத்து அவர்களுக்கு உவமையாகச் சொன்னதாவது: "சாத்தான் சாத்தானை எப்படி ஓட்ட முடியும்?
|
27. முதலில் வலியவனைக் கட்டினாலன்றி அவ்வலியவனுடைய வீட்டினுள் நுழைந்து அவனுடைய பொருள்களைக் கொள்ளையிட எவனாலும் முடியாது. கட்டின பின்புதான் அவனுடைய வீட்டைக் கொள்ளையிடுவான்.
|
28. "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: மக்களுக்கு எல்லாம் மன்னிக்கப்படும். பாவங்களும் அவர்கள் சொல்லும் தேவ தூஷணங்களும் மன்னிக்கப்படும்.
|
29. ஆனால், பரிசுத்த ஆவியைத் தூஷிப்பவன் எவனும் ஒருபோதும் மன்னிப்புப் பெறான், என்றென்றும் தீராத பாவத்திற்கு ஆளாவான்."
|
32. அவரைச் சுற்றி மக்கள் கூட்டமாய் உட்கார்ந்திருந்தனர். 'இதோ! உம் தாயும் சகோதரரும் உம்மைத் தேடிக்கொண்டுவந்து வெளியே இருக்கின்றனர்" என்று அவரிடம் சொன்னார்கள்.
|