1. ஓய்வுநாள் கழிந்ததும் மதலேன்மரியாளும் யாகப்பரின் தாய் மரியாளும் சலோமேயும் இயேசுவின் உடலில் பூசுவதற்காகப் பரிமளப் பொருட்கள் வாங்கினர்.
|
3. "கல்லறை வாயிலிலிருந்து, யார் நமக்குக் கல்லைப் புரட்டிவிடுவார்?" என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
|
5. அவர்கள் கல்லறைக்குள் நுழைந்தபொழுது, வெண்ணாடை அணிந்து வலப்பக்கத்தில் அமர்ந்திருந்த ஓர் இளைஞனைக் கண்டு திகிலுற்றனர். அவன் அவர்களை நோக்கி, "திகிலுறவேண்டாம்.
|
6. சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். இங்கே இல்லை. இதோ! அவரை வைத்த இடம்.
|
7. நீங்கள் போய் அவருடைய சீடர்களிடமும் இராயப்பரிடமும், "உங்களுக்குமுன் அவர் கலிலேயாவிற்குப் போகிறார். அவர் உங்களுக்குக் கூறியவாறு நீங்கள் அவரை அங்கே காண்பீர்கள்' என்று சொல்லுங்கள்" என்றான்.
|
8. அவர்கள் வெளியே வந்து கல்லறையை விட்டு ஓடினார்கள். ஏனெனில், திகைப்பும் நடுக்கமும் அவர்களை ஆட்கொணடது. அச்சம் மேலிட அவர்கள் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லவில்லை.
|
9. வாரத்தின் முதல்நாள் காலையில், அவர் உயிர்த்தெழுந்து முதலில் மதலேன்மரியாளுக்குத் தேன்றினார். இவளிடமிருந்துதான் அவர் ஏழு பேய்களைத் துரத்தியிருந்தார்.
|
10. முன்பு இயேசுவோடு இருந்தவர்களிடம் அவள் போய் இதை அறிவித்தாள். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தனர்.
|
12. அதன்பின் அவர்களுள் இருவர் நாட்டுப்புறத்திற்கு நடந்துபோகையில், அவர்களுக்கு வேற்றுருவில் தோன்றினார்.
|
14. இறுதியாக, பதினொருவரும் உண்ணும்பொழுது அவர் தோன்றி, உயிர்த்தெழுந்த தம்மைக் கண்டவர்கள் சொன்னதை நம்பாத அவர்களுடைய விசுவாசமின்மையும் பிடிவாதத்தையும் கடிந்துகொண்டார்.
|
17. விசுவசிப்பவர்களிடம் இவ்வருங்குறிகள் காணப்படும்; என் பெயரால் பேய்களை ஓட்டுவர், புதிய மொழிகளைப் பேசுவர்,
|
18. பாம்புகளைக் கையால் பிடிப்பர். 'கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது. பிணியாளிகள் மேல் கைகளை வைப்பர், அவர்களும் நலமடைவர்" என்றுரைத்தார்.
|
19. இவ்வாறு அவர்களோடு பேசி முடித்தபின், ஆண்டவர் இயேசு விண்ணேற்படைந்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்தார்.
|
20. அவர்கள் புறப்பட்டுப் போய் எங்கும் தூதுரைத்தனர். ஆண்டவரும் அவர்களோடு செயல்புரிந்து, உடனிகழ்ந்த அருங்குறிகளால் தேவ வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
|