1. காலையானதும் மூப்பர், மறைநூல் அறிஞர், மற்றத் தலைமைச் சங்கத்தார் இவர்களோடு தலைமைக்குருக்கள் கூடி ஆலோசனைசெய்து இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர்.
|
4. பிலாத்து மீண்டும் அவரிடம், "நீ மறுமொழி ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டு, "இதோ! உன்மேல் இத்தனை குற்றம் சாட்டுகிறார்களே" என்றார்.
|
7. அப்போது பரபாஸ் என்று கைதி ஒருவன் இருந்தான். ஒரு குழப்பத்தில் கொலை செய்த கலகக்காரருடன் பிடிபட்டவன் அவன்.
|
12. பிலாத்து மீண்டும் அவர்களிடம், "அப்படியானால் நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டார்.
|
14. அதற்குப் பிலாத்து, "இவன் செய்த தீங்கு என்ன?" என்று கேட்டார். அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டார்கள்.
|
15. பிலாத்து அவர்களைத் திருப்திசெய்ய விரும்பிப் பரபாசை விடுதலைசெய்து, இயேசுவைச் சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
|
16. படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநரின் மனைக்குள் நடத்திச் சென்று, அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர்.
|
20. இப்படி அவரை எள்ளி நகையாடியபின். சிவப்பு ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை உடுத்தி அவரைச் சிலுவையில் அறைய வெளியே கூட்டிச் சென்றார்கள்.
|
21. சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவன் நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவன், அலெக்சாந்தர், ரூப்பு என்பவர்களுக்குத் தந்தை. அவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும் படி கட்டாயப்படுத்தினர்.
|
24. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். 'பின்னர், அவர் ஆடைகளில் எதெது யார் யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போட்டுப் பகிர்ந்துகொண்டார்கள்.
|
27. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர்.
|
31. (30) அவ்வாறே தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞருடன் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, "பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
|
32. (31) இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.
|
34. (33) மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லாமாசபக்தானி" என்று உரக்கக் கூவினார். இதற்கு, "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது பொருள்.
|
36. (35) ஒருவன் ஓடிப்போய்க் கடற்காளானைக் காடியில் தேய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து, "பொறுங்கள், எலியாஸ் இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்" என்றான்.
|
39. (38) எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்தலைவன் இவ்வாறு இவர் உயிர்நீத்ததைக் கண்டு, "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்றான்.
|
40. (39) பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், சலோமேயும் இருந்தனர்.
|
41. (40) இயேசு கலிலேயாவிலிருந்தபொழுது இவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்தவர்கள். அவருடன் யெருசலேமுக்கு வந்திருந்த பெண்கள் வேறு பலரும் இருந்தனர்.
|
43. (42) ஆதலால், அரிமத்தியாவூர் சூசை துணிவுடன் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டார். இவர் தலைமைச்சங்கத்தின் செல்வாக்குடைய ஓர் உறுப்பினர். இருவரும் கடவுளின் அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
|
44. (43) இயேசு அதற்குள் இறந்துவிட்டதைப்பற்றிப் பிலாத்து வியப்புற்றார். நூற்றுவர்தலைவனை அழைத்து, "அவன் இதற்குள் இறந்துவிட்டானா?" என்று கேட்டார்.
|
46. (45) சூசை கோடித்துணி வாங்கிவந்து, இயேசுவை இறக்கி, துணியில் சுற்றி, பாறையில் குடைந்த கல்லறையில் வைத்து, அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
|