தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
மாற்கு
1. காலையானதும் மூப்பர், மறைநூல் அறிஞர், மற்றத் தலைமைச் சங்கத்தார் இவர்களோடு தலைமைக்குருக்கள் கூடி ஆலோசனைசெய்து இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர்.
2. பிலாத்து, "நீ யூதரின் அரசனோ?" என்று அவரை வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.
3. தலைமைக்குருக்கள் பலவற்றைக் குறித்து, அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.
4. பிலாத்து மீண்டும் அவரிடம், "நீ மறுமொழி ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டு, "இதோ! உன்மேல் இத்தனை குற்றம் சாட்டுகிறார்களே" என்றார்.
5. இயேசுவோ அதன்பின் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. பிலாத்து அதைக் கண்டு வியப்புற்றார்.
6. திருவிழாதோறும் அவர்கள் கோரும் ஒரு கைதியை விடுதலைசெய்வதுண்டு.
7. அப்போது பரபாஸ் என்று கைதி ஒருவன் இருந்தான். ஒரு குழப்பத்தில் கொலை செய்த கலகக்காரருடன் பிடிபட்டவன் அவன்.
8. கூட்டம் வந்து, வழக்கம்போலத் தாங்கள் கோருவதைச் செய்யும்படி பிலாத்தைக் கேட்கத்தொடங்கியது.
9. அதற்கு அவர், "யூதர்களின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டார்.
10. ஏனெனில், தலைமைக்குருக்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்பது அவருக்குத் தெரியும்.
11. பரபாசையே விடுதலைசெய்ய வேண்டும் என்று சொல்லும்படி தலைமைக்குருக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டனர்.
12. பிலாத்து மீண்டும் அவர்களிடம், "அப்படியானால் நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டார்.
13. அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று மீண்டும் கூச்சலிட்டார்கள்.
14. அதற்குப் பிலாத்து, "இவன் செய்த தீங்கு என்ன?" என்று கேட்டார். அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டார்கள்.
15. பிலாத்து அவர்களைத் திருப்திசெய்ய விரும்பிப் பரபாசை விடுதலைசெய்து, இயேசுவைச் சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
16. படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநரின் மனைக்குள் நடத்திச் சென்று, அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர்.
17. பின்பு அவருக்குச் சிவப்பு ஆடை உடுத்தி முள்முடி ஒன்றைப் பின்னித் தலையில் சூட்டி,
18. "யூதரின் அரசே வாழி" என்று வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.
19. மேலும், அவரைத் தலையில் பிரம்பால் அடித்து, அவர்மேல் துப்பி, முழந்தாளிட்டு வணங்கினர்.
20. இப்படி அவரை எள்ளி நகையாடியபின். சிவப்பு ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை உடுத்தி அவரைச் சிலுவையில் அறைய வெளியே கூட்டிச் சென்றார்கள்.
21. சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவன் நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவன், அலெக்சாந்தர், ரூப்பு என்பவர்களுக்குத் தந்தை. அவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும் படி கட்டாயப்படுத்தினர்.
22. ' மண்டை ஓடு' எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
23. அங்கே அவர்கள் அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த இரசத்தைக் கொடுத்தனர். அவர் அதை ஏற்கவில்லை.
24. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். 'பின்னர், அவர் ஆடைகளில் எதெது யார் யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போட்டுப் பகிர்ந்துகொண்டார்கள்.
25. அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
26. அவர்மேல் சாட்டிய குற்றத்தைக் குறிக்கும் பலகையில், 'யூதரின் அரசன்' என்று எழுதியிருந்தது.
27. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர்.
28.
29. (28) அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி, "ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுபவனே,
30. (29) சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே காப்பாற்றிக்கொள்" என்று சொல்லி அவரைப் பழித்தனர்.
31. (30) அவ்வாறே தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞருடன் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, "பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
32. (31) இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.
33. (32) நண்பகல் தொடங்கி, மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
34. (33) மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லாமாசபக்தானி" என்று உரக்கக் கூவினார். இதற்கு, "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது பொருள்.
35. (34) அருகிலிருந்தவர்களுள் சிலர் இதைக் கேட்டு, "இதோ! இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
36. (35) ஒருவன் ஓடிப்போய்க் கடற்காளானைக் காடியில் தேய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து, "பொறுங்கள், எலியாஸ் இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்" என்றான்.
37. (36) இயேசு உரக்கக்கூவி உயிர் நீத்தார்.
38. (37) அப்போது ஆலயத்தின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.
39. (38) எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்தலைவன் இவ்வாறு இவர் உயிர்நீத்ததைக் கண்டு, "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்றான்.
40. (39) பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், சலோமேயும் இருந்தனர்.
41. (40) இயேசு கலிலேயாவிலிருந்தபொழுது இவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்தவர்கள். அவருடன் யெருசலேமுக்கு வந்திருந்த பெண்கள் வேறு பலரும் இருந்தனர்.
42. (41) இதற்குள் மாலைநேரம் ஆகிவிடவே, ஓய்வுநாளுக்கு முந்தின அந்நாள் ஆயத்தநாள்.
43. (42) ஆதலால், அரிமத்தியாவூர் சூசை துணிவுடன் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டார். இவர் தலைமைச்சங்கத்தின் செல்வாக்குடைய ஓர் உறுப்பினர். இருவரும் கடவுளின் அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
44. (43) இயேசு அதற்குள் இறந்துவிட்டதைப்பற்றிப் பிலாத்து வியப்புற்றார். நூற்றுவர்தலைவனை அழைத்து, "அவன் இதற்குள் இறந்துவிட்டானா?" என்று கேட்டார்.
45. (44) நூற்றுவர் தலைவனிடமிருந்து செய்தியை அறிந்ததும், சடலத்தைச் சூசையிடம் அளித்தார்.
46. (45) சூசை கோடித்துணி வாங்கிவந்து, இயேசுவை இறக்கி, துணியில் சுற்றி, பாறையில் குடைந்த கல்லறையில் வைத்து, அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
47. (46) மதலேன்மரியாளும் யோசெத்தின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தை பார்த்துக்கொண்டனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 16 Chapters, Current Chapter 15 of Total Chapters 16
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16
மாற்கு 15:4
1. காலையானதும் மூப்பர், மறைநூல் அறிஞர், மற்றத் தலைமைச் சங்கத்தார் இவர்களோடு தலைமைக்குருக்கள் கூடி ஆலோசனைசெய்து இயேசுவைக் கட்டி நடத்திச் சென்று பிலாத்திடம் கையளித்தனர்.
2. பிலாத்து, "நீ யூதரின் அரசனோ?" என்று அவரை வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.
3. தலைமைக்குருக்கள் பலவற்றைக் குறித்து, அவர்மீது குற்றம் சாட்டினார்கள்.
4. பிலாத்து மீண்டும் அவரிடம், "நீ மறுமொழி ஒன்றும் சொல்வதற்கில்லையா?" என்று கேட்டு, "இதோ! உன்மேல் இத்தனை குற்றம் சாட்டுகிறார்களே" என்றார்.
5. இயேசுவோ அதன்பின் மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை. பிலாத்து அதைக் கண்டு வியப்புற்றார்.
6. திருவிழாதோறும் அவர்கள் கோரும் ஒரு கைதியை விடுதலைசெய்வதுண்டு.
7. அப்போது பரபாஸ் என்று கைதி ஒருவன் இருந்தான். ஒரு குழப்பத்தில் கொலை செய்த கலகக்காரருடன் பிடிபட்டவன் அவன்.
8. கூட்டம் வந்து, வழக்கம்போலத் தாங்கள் கோருவதைச் செய்யும்படி பிலாத்தைக் கேட்கத்தொடங்கியது.
9. அதற்கு அவர், "யூதர்களின் அரசனை நான் விடுதலைசெய்வது உங்களுக்கு விருப்பமா?" என்று கேட்டார்.
10. ஏனெனில், தலைமைக்குருக்கள் அவரைக் கையளித்தது பொறாமையால்தான் என்பது அவருக்குத் தெரியும்.
11. பரபாசையே விடுதலைசெய்ய வேண்டும் என்று சொல்லும்படி தலைமைக்குருக்கள் கூட்டத்தைத் தூண்டிவிட்டனர்.
12. பிலாத்து மீண்டும் அவர்களிடம், "அப்படியானால் நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்?" என்று கேட்டார்.
13. அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று மீண்டும் கூச்சலிட்டார்கள்.
14. அதற்குப் பிலாத்து, "இவன் செய்த தீங்கு என்ன?" என்று கேட்டார். அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும்" என்று இன்னும் உரக்கக் கூச்சலிட்டார்கள்.
15. பிலாத்து அவர்களைத் திருப்திசெய்ய விரும்பிப் பரபாசை விடுதலைசெய்து, இயேசுவைச் சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி கையளித்தார்.
16. படைவீரர் அவரை அரண்மனைக்குள், அதாவது ஆளுநரின் மனைக்குள் நடத்திச் சென்று, அங்கேயிருந்த பட்டாளத்தினரை எல்லாம் கூட்டினர்.
17. பின்பு அவருக்குச் சிவப்பு ஆடை உடுத்தி முள்முடி ஒன்றைப் பின்னித் தலையில் சூட்டி,
18. "யூதரின் அரசே வாழி" என்று வணக்கம் செலுத்தத் தொடங்கினர்.
19. மேலும், அவரைத் தலையில் பிரம்பால் அடித்து, அவர்மேல் துப்பி, முழந்தாளிட்டு வணங்கினர்.
20. இப்படி அவரை எள்ளி நகையாடியபின். சிவப்பு ஆடையைக் கழற்றிவிட்டு, அவருடைய ஆடைகளை உடுத்தி அவரைச் சிலுவையில் அறைய வெளியே கூட்டிச் சென்றார்கள்.
21. சீரேனே ஊரானாகிய சீமோன் என்னும் ஒருவன் நாட்டுப்புறத்திலிருந்து அவ்வழியே வந்துகொண்டிருந்தான். அவன், அலெக்சாந்தர், ரூப்பு என்பவர்களுக்குத் தந்தை. அவனை அவருடைய சிலுவையைச் சுமக்கும் படி கட்டாயப்படுத்தினர்.
22. ' மண்டை ஓடு' எனப் பொருள்படும் கொல்கொத்தா என்னும் இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர்.
23. அங்கே அவர்கள் அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த இரசத்தைக் கொடுத்தனர். அவர் அதை ஏற்கவில்லை.
24. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். 'பின்னர், அவர் ஆடைகளில் எதெது யார் யாருக்கு என்று பார்க்கச் சீட்டுப் போட்டுப் பகிர்ந்துகொண்டார்கள்.
25. அவரைச் சிலுவையில் அறையும்போது காலை ஒன்பது மணி.
26. அவர்மேல் சாட்டிய குற்றத்தைக் குறிக்கும் பலகையில், 'யூதரின் அரசன்' என்று எழுதியிருந்தது.
27. அவருக்கு வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் ஒருவனுமாகக் கள்வர் இருவரை அவருடன் சிலுவையில் அறைந்தனர்.
29. (28) அவ்வழியே சென்றவர்கள் தலையை ஆட்டி, "ஆலயத்தை இடித்து மூன்று நாளில் கட்டுபவனே,
30. (29) சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே காப்பாற்றிக்கொள்" என்று சொல்லி அவரைப் பழித்தனர்.
31. (30) அவ்வாறே தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞருடன் சேர்ந்து அவரை எள்ளி நகையாடி, "பிறரைக் காப்பாற்றிய இவன் தன்னையே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.
32. (31) இஸ்ராயேலின் அரசனாகிய மெசியா இப்பொழுது சிலுவையினின்று இறங்கட்டும்; கண்டு நம்புவோம்" என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டனர். அவருடன் அறையுண்டவர்களும் அவர்மேல் வசைகூறினர்.
33. (32) நண்பகல் தொடங்கி, மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
34. (33) மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லாமாசபக்தானி" என்று உரக்கக் கூவினார். இதற்கு, "என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது பொருள்.
35. (34) அருகிலிருந்தவர்களுள் சிலர் இதைக் கேட்டு, "இதோ! இவன் எலியாசைக் கூப்பிடுகிறான்" என்றனர்.
36. (35) ஒருவன் ஓடிப்போய்க் கடற்காளானைக் காடியில் தேய்த்து, ஒரு கோலில் மாட்டி அவருக்குக் குடிக்கக் கொடுத்து, "பொறுங்கள், எலியாஸ் இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்" என்றான்.
37. (36) இயேசு உரக்கக்கூவி உயிர் நீத்தார்.
38. (37) அப்போது ஆலயத்தின் திரை, மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.
39. (38) எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்தலைவன் இவ்வாறு இவர் உயிர்நீத்ததைக் கண்டு, "உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாக இருந்தார்" என்றான்.
40. (39) பெண்கள் சிலரும் அங்கு இருந்தனர். தொலைவில் நின்றே பார்த்துக்கொண்டு இருந்தனர். அவர்களுள் மதலேன் மரியாளும், சின்ன யாகப்பருக்கும் யோசெத்துக்கும் தாயான மரியாளும், சலோமேயும் இருந்தனர்.
41. (40) இயேசு கலிலேயாவிலிருந்தபொழுது இவர்கள் அவரைப் பின்தொடர்ந்து அவருக்குப் பணிவிடை புரிந்தவர்கள். அவருடன் யெருசலேமுக்கு வந்திருந்த பெண்கள் வேறு பலரும் இருந்தனர்.
42. (41) இதற்குள் மாலைநேரம் ஆகிவிடவே, ஓய்வுநாளுக்கு முந்தின அந்நாள் ஆயத்தநாள்.
43. (42) ஆதலால், அரிமத்தியாவூர் சூசை துணிவுடன் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டார். இவர் தலைமைச்சங்கத்தின் செல்வாக்குடைய ஓர் உறுப்பினர். இருவரும் கடவுளின் அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
44. (43) இயேசு அதற்குள் இறந்துவிட்டதைப்பற்றிப் பிலாத்து வியப்புற்றார். நூற்றுவர்தலைவனை அழைத்து, "அவன் இதற்குள் இறந்துவிட்டானா?" என்று கேட்டார்.
45. (44) நூற்றுவர் தலைவனிடமிருந்து செய்தியை அறிந்ததும், சடலத்தைச் சூசையிடம் அளித்தார்.
46. (45) சூசை கோடித்துணி வாங்கிவந்து, இயேசுவை இறக்கி, துணியில் சுற்றி, பாறையில் குடைந்த கல்லறையில் வைத்து, அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.
47. (46) மதலேன்மரியாளும் யோசெத்தின் தாயாகிய மரியாளும் அவரை வைத்த இடத்தை பார்த்துக்கொண்டனர்.
Total 16 Chapters, Current Chapter 15 of Total Chapters 16
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13 14 15 16
×

Alert

×

tamil Letters Keypad References