1. இயேசு பரிசுத்த ஆவியால் நிறைந்தவராய் யோர்தான் ஆற்றங்கரையினின்று திரும்பியபின், பாலைவனத்தில் தங்குமாறு ஆவியானவரால் நடத்தப்பெற்றார்.
|
2. அங்கு நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் உண்ணவில்லை. அந்த நாட்கள் கழிந்ததும், அவருக்குப் பசியெடுத்தது.
|
3. அப்பொழுது அலகை அவரை நோக்கி, "நீர் கடவுளின் மகனானால் அப்பமாக மாறும்படி இந்தக் கல்லுக்குச் சொல்லும்" என்றது.
|
6. "இவற்றின்மேல் முழு அதிகாரத்தையும், இவற்றின் மகிமையையும் உமக்குக் கொடுப்பேன். ஏனெனில், இவை யாவும் என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளன. 'என் விருப்பம்போல் எவருக்கும் இவற்றைக் கொடுக்கமுடியும்.
|
8. அதற்கு இயேசு, " உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவரைமட்டுமே ஆராதிப்பாயாக ' என எழுதியிருக்கின்றதே " என்றார்.
|
9. பின்னர் அலகை அவரை யெருசலேமுக்குக் கூட்டிச் சென்று, கோயிலில் முகட்டில் நிறுத்தி, " நீர் கடவுளின் மகனனானால் இங்கிருந்து கீழேகுதியும்.
|
11. 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்' என்று எழுதியுள்ளது" என்றது.
|
13. இவ்வாறு, அலகை எல்லா விதத்திலும் இயேசுவைச் சோதித்தபின், குறித்த காலம் வரும்வரைக்கும் அவரை விட்டுச் சென்றது.
|
14. பின்னர், ஆவியானவரின் வல்லமை பூண்டவராய் இயேசு கலிலேயாவுக்குத் திரும்பினார். அவரைப்பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது.
|
16. அவர் தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்திற்கு வந்தார். வழக்கப்படி ஓய்வுநாளன்று செபக்கூடத்திற்கு வந்து வாசிக்க எழுந்தார்.
|
17. இசையாஸ் எழுதிய இறைவாக்குகளின் ஏட்டுச் சுருளை அவரிடம் கொடுத்தனர். அதை விரித்ததும் பின்வரும் பகுதியைக் கண்டார்.
|
18. 'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,
|
20. பின்னர் ஏட்டைச் சுருட்டிப் பணிவிடைக் காரனிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். செபக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே நோக்கியவண்ணமாயிருந்தன.
|
22. யாவரும் அவரைப் பாராட்டி, அவர் வாயினின்று எழுந்த அருள்மொழிகளை வியந்து, " இவர் சூசையின் மகனன்றோ ?" என்றனர்.
|
23. பின் அவர் அவர்களை நோக்கி, "' மருத்துவனே, உன்னையே குணமாக்கிக்கொள் ' என்ற பழமொழியை எனக்கே சொல்லிக்காட்டி, ' கப்பர்நகூம் ஊரில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதெல்லாம், உம் சொந்த ஊராகிய இங்கேயும் செய்யும் ' எனக் கண்டிப்பாக நீங்கள் கூறுவீர்கள் " என்றார்.
|
24. மேலும், அவர், " உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்கப்படுவதில்லை.
|
25. உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: எலியாசின் காலத்தில் மூன்று ஆண்டுகள் ஆறு மாதங்களாக வானம் வறண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டானபோது, இஸ்ராயேல் நாட்டில் கைம்பெண்கள் பலர் இருந்தனர்.
|
26. ஆயினும் சீதோன் நாட்டின் சரெப்தா ஊர்க் கைம்பெண் ஒருத்தியிடமின்றி வேறு எவரிடமும் எலியாஸ் அனுப்பப்படவில்லை.
|
27. இறைவாக்கினரான எலிசேயுவின் காலத்திலும் இஸ்ராயேல் நாட்டில் தொழுநோயாளர் பலர் இருந்தனர். ஆயினும் சீரியா நாட்டு நாமானைத் தவிர வேறு எவரும் குணமாக்கப்படவில்லை " என்றார்.
|
29. அவரை ஊருக்கு வெளியே தள்ளி, அவ்வூர் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடக் கொண்டுசென்றனர்.
|
31. பின் கலிலேயா நாட்டுக் கப்பர்நகூம் ஊருக்கு வந்து, அங்கே மக்களுக்கு ஓய்வு நாளில் போதித்து வந்தார்.
|
34. அவன், " ஐயோ! நாசரேத்தூர் இயேசுவே, எங்கள் காரியத்தில் ஏன் தலையிடுகிறீர் ? எங்களைத் தொலைக்க வந்தீரோ ? நீர் யாரென்று எனக்குத் தெரியும். நீர் கடவுளின் பரிசுத்தர் " என்று உரக்கக் கத்தினான்.
|
35. அப்போது இயேசுவா, " பேசாதே, இவனை விட்டுப் போ " என்று அதட்டினார். அப்பொழுது, அப்பேய் அவனை அவர்கள்நடுவே வீழ்த்தி, அவனுக்கு ஒரு தீங்குமிழைக்காமல் அவனை விட்டு அகன்றது.
|
36. அதனால் திகில் எல்லாரையும் ஆட்கொள்ள, " இவர் வார்த்தை எத்தகையதோ ? அதிகாரத்தோடும் வல்லமையோடும் இவர் அசுத்தப் பேய்களுக்கும் கட்டளையிடுகிறார், அவை போய்விடுகின்றனவே! " என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டனர்.
|
38. பின்னர், அவர் செபக்கூடத்தை விட்டு, சீமோன் வீட்டிற்கு வந்தார். சீமோனுடைய மாமியார் கடுஙகாய்ச்சலால் துன்பப்பட்டுக் கொண்டிருந்ததால் அவளுக்காக அவரிடம் வேண்டினர்.
|
39. அவர் அவளருகில் நின்று காய்ச்சலைக் கடிந்துகொண்டார். காய்ச்சல் அவளை விட்டு அகல, அவள் உடனே எழுந்து அவர்களுக்குப் பணிவிடை புரிந்தாள்.
|
40. பொழுது சாயும்வேளையில் யாவரும் தங்களிடையே இருந்த பற்பல பிணியாளரை அவரிடம் கொண்டுவந்தனர். ஒவ்வொருவர்மேலும் தம் கைகளை வைத்துக் குணமாக்கினார்.
|
41. பேய்கள், "நீரே கடவுளின் மகன்" என்று கூவிக்கொண்டு பலரிடமிருந்து வெளியேறின. அவர் மெசியா என்று அவை அறிந்திருந்ததால், இயேசு அவற்றை அதட்டிப் பேச விடவில்லை.
|
42. பொழுது புலரவே, அவர் புறப்பட்டுத் தனிமையானதோர் இடத்திற்குச் சென்றார். திரளான மக்கள் அவரைத் தேடினர். அவரிடம் வந்ததும் தங்களை விட்டு அகலாதபடி அவரை நிறுத்தப்பார்த்தனர்.
|
43. அவரோ, " நான் மற்ற ஊர்களுக்கும் கடவுளுடைய அரசைப்பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும். இதற்காகவே அனுப்பப்பட்டேன் " என்று அவர்களிடம் கூறினார்.
|