1. வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் பெண்கள் தாங்கள் ஆயத்தப்படுத்தியிருந்த வாசனைப்பொருள்களை எடுத்துக்கொண்டு கல்லறைக்கு சென்றனர்.
|
5. பெண்களோ அச்சங்கொண்டு, முகம் கவிழ்ந்து நின்றனர். தூதர்கள் அவர்களைப் பார்த்து, "உயிருள்ளவரை இறந்தோரிடையே தேடுவானேன்?
|
7. மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்பட்டுச் சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டுமென்று, அவர் கலிலேயாவில் இருக்கும்போதே உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள்" என்றனர்.
|
9. கல்லறையை விட்டுத் திரும்பிவந்த பெண்கள் பதினொருவருக்கும், மற்றெல்லாருக்கும் இதெல்லாம் அறிவித்தனர்.
|
10. அப்பெண்கள்: மதலேன்மரியாளும் அருளம்மாளும் இயாகப்பரின் தாய் மரியாளும் ஆவர். அவர்களோடு சேர்த்து மற்றப் பெண்களும் இதை அப்போஸ்தலர்களுக்குக் கூறினர்.
|
12. இராயப்பரோ எழுந்து கல்லறைக்கு ஓடினார். குனிந்து பார்க்கையில் துணிகள் மட்டும் கிடக்கக் கண்டார். நிகழ்ந்ததைக் குறித்து வியந்து கொண்டே வீடு திரும்பினார்.
|
13. அன்றே இதோ! அவர்களுள் இருவர் யெருசலேமிலிருந்து ஏழு கல் தொலைவிலிருந்த எம்மாவுஸ் என்ற ஊருக்குப் போய்க் கொண்டிருந்தனர்.
|
17. எதைப்பற்றி நீங்கள் உரையாடிக்கொண்டு செல்லுகிறீர்கள்?" என்று அவர் அவர்களைக் கேட்டார். அவர்களோ வாடிய முகத்தோடு நின்றனர்.
|
18. அவர்களுள் ஒருவரான கிலேயோப்பா என்பவர் அவருக்கு மறுமொழியாக, "யெருசலேமில் உள்ளவர்களுள் நீர் ஒருவர்தாம் இந்நாட்களிலே நடந்ததை அறியாதவர் போலும்!" என்றார்.
|
19. அதற்கு அவர், "என்ன நடந்தது?" என்று கேட்டார். அவர்களோ, "நாசரேத்தூர் இயேசுவைப்பற்றிய செய்திதான். அவர் கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராயிருந்தார்.
|
20. தலைமைக்குருக்களும் தலைவர்களும் அவரை மரணதண்டனைக்கு உள்ளாகும்படி கையளித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
|
21. இஸ்ராயேலுக்கு விடுதலை அளிப்பவர் அவரே என நாங்கள் நம்பியிருந்தோம். அதுமட்டுமன்று. இதெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள் ஆகின்றது.
|
22. மேலும், எங்களைச் சார்ந்த பெண்கள் சிலர் எங்களைத் திகைக்கச்செய்தனர். அவர்கள் விடியற்காலையில் கல்லறைக்குச் சென்று,
|
23. அவரது உடலைக் காணாது திரும்பிவந்து, வானதூதர்களைக் காட்சியில் கண்டதாகவும், இயேசு உயிரோடு இருக்கிறார் என்று அவர்கள் கூறினதாகவும் சொல்லுகிறார்கள்.
|
24. எங்கள் தோழருள் சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னபடியே இருக்கக் கண்டனர். அவரையோ காணவில்லை" என்றனர்.
|
25. அவர் அவர்களை நோக்கி, "அறிவில்லாதவர்களே, இறைவாக்கினர்கள் கூறியதெல்லாம் விசுவசிப்பதற்கு மந்த புத்தியுள்ளவர்களே, '
|
27. மோயீசன்முதல் இறைவாக்கினர்கள் அனைவரும் எழுதிவைத்த வாக்குகளிலிருந்து தொடங்கி தம்மைக்குறித்த மறைநூல் பகுதிகளுக்கெல்லாம் விளக்கம் தந்தார்.
|
28. அவர்கள் தாங்கள் போகும் ஊரை நெருங்கினர். அவர் இன்னும் வழி நடக்க வேண்டியவர்போலக் காட்டிக்கொண்டார்.
|
29. அவர்களோ, "எங்களோடே தங்கும். மாலை நேரமாகிறது, பொழுதும் சாய்கிறது" என்று சொல்லி, அவரைக் கட்டாயப்படுத்தினர். அவரும் அவர்களோடு தங்குவதற்குச் சென்றார்.
|
30. அங்கு அவர்களுடன் பந்தியமர்ந்திருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, இறைபுகழ் கூறி, பிட்டு, அவர்களோடு அளித்தார்.
|
32. அப்போது அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி, " வழியில் அவர் நம்மோடு உரையாடி மறைநூலைத் தெளிவாக்குகையில், நம் உள்ளம் உருகவில்லையா! " என்றனர்.
|
33. அந்நேரமே, எழுந்து யெருசலேமுக்குத் திரும்பிச்சென்று, பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும் கூடியிருக்கக் கண்டனர்.
|
34. கூடியிருந்தவர்கள், "உண்மையாகவே ஆண்டவர் உயிர்த்தார், சீமோனுக்குக் காட்சி அளித்தார்" எனப் பேசிக்கொண்டிருந்தனர்.
|
35. அவ்விரு சீடர் வழியில் நடந்ததையும், அப்பத்தைப் பிட்கையில் அவரைக் கண்டுகொண்டதையும் அவர்களுக்கு விவரித்தனர்.
|
38. அப்போது அவர் அவர்களை நோக்கி, "ஏன் இந்தக் கலக்கம்? உங்கள் உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் எழுவானேன்?
|
39. என் கைகளையும் கால்களையும் பாருங்கள். நானேதான்; தொட்டுப்பாருங்கள். நீங்கள் என்னிடம் காணும் எலும்பும் தசையும் ஆவிக்குக் கிடையாது" என்றார்.
|
41. அவர்களோ மகிழ்ச்சி மிகுதியால் இன்னும் நம்பாமல் வியந்துகொண்டிருக்கும்பொழுது, "உண்பதற்கு இங்கு ஏதாவது உங்களிடம் உண்டா?" என்றார்.
|
44. அவர் அவர்களைப் பார்த்து, "மோயீசனின் சட்டத்திலும் இறைவாக்குளிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியுள்ளதெல்லாம் நிறைவேண்டும் என்று, நான் உங்களோடு இருந்தபோதே சொன்னேனே; இப்போது நடப்பது அதுதான்" என்றார்.
|
46. பின்னர், அவர்களை நோக்கி, "மறைநூலில் எழுதியுள்ளது இதுதான்: மெசியா பாடுபட்டு, இறந்தோரிடமிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்;
|
47. பாவமன்னிப்படைய மனந்திரும்ப வேண்டுமென்று யெருசலேமில் தொடங்கி, புறவினத்தார் அனைவருக்கும் அவர்பெயரால் அறிவிக்கப்படும்.
|
49. இதோ! என் தந்தை வாக்களித்ததை நான் உங்களுக்கு அனுப்பப்போகிறேன். உன்னைதத்திலிருந்து வரும் வல்லமையை நீங்கள் அணிந்துகொள்ளும்வரை நகரிலேயே தங்கி இருங்கள்" என்றார்.
|