2. இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.
|
4. அப்போது, பிலாத்து தலைமைக்குருக்களையும் மக்களையும் நோக்கி, "இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்" என்றார்.
|
5. அவர்கள், " கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று வற்புறுத்திக்கூறினார்கள்.
|
7. அவர் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்ததும், அந்நாட்களிலே யெருசலேமில் தங்கியிருந்த எரோதிடம் அவரை அனுப்பினார்.
|
8. ஏரோது இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான். ஏனெனில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, அவர் அருஞ்செயல் எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.
|
11. ஏரோது தன் படையோடு சோர்ந்து அவரை அவமானப்படுத்தி, எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.
|
14. அவர்களை நோக்கி, "மக்களிடையே குழப்பம் உண்டாக்குபவன் என்று இவனை என்னிடம் கொண்டுவந்தீர்களே. இதோ! உங்கள் முன்னிலையில் ஓன்றும் இவனிடம் நான் காணவில்லை.
|
18. மக்களோ ஒருவாய்ப்பட, "இவனை ஒழித்துவிடும்; பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யும்" என்று உரக்கக் கத்தினர்-
|
22. மூன்றாம் முறையாக அவர்களை நோக்கி, " இவன் செய்த தீங்கு என்ன? சாவுக்குரிய குற்றமொன்றும் இவனிடம் காணோம். ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன் " என்றார்.
|
23. அவர்களோ அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டனர். அவர்கள் கூச்சலே வெற்றிகண்டது.
|
25. குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததற்காகச் சிறைப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலைசெய்தார். இயேசுவையோ அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.
|
26. அவரைக் கூட்டிச்செல்லும்போது வயலிலிருந்து வந்து கொண்டிருந்த சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனைப் பிடித்து, அவன்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின்னால் அதைச் சுமந்துபோகச் செய்தனர்.
|
27. திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக்கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
|
28. இயேசு அப்பெண்கள்பக்கம் திரும்பி, "யெருசலேம் மகளிரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.
|
29. ஒருநாள் வரும்: அன்று, 'மலடிகள் பேறுபெற்றவர்கள்; பிள்ளைப்பேறற்ற வயிறுகளும் பாலூட்டாத கொங்கைகளும் பேறுபெற்றவை' என்பார்கள்.
|
30. அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள்.
|
33. மண்டை ஒடு' எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.
|
34. இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொள்ளச் சீட்டுப்போட்டனர்.
|
35. மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். தலைவர்களும், "மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்!" என்று அவரை ஏளனம்செய்தனர்.
|
39. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று!" என்று அவரைப் பழித்தான்.
|
41. நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான்.
|
43. அவனுக்கு இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
|
44. அப்போது ஏறக்குறைய நண்பகல் வேளை. மூன்று மணிவரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
|
46. தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார்.
|
47. நிகழ்ததைக் கண்ட நூற்றுவர்தலைவன் "உள்ளபடியே, இவர் நீதிமான்தான்" என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான்.
|
49. அவருக்கு அறிமுனமானவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்களும் தொலைவில் நின்று இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
|
51. அவர்களுடைய திட்டத்திற்கும் செயலுக்கும் அவர் இணங்கவில்லை. யூதர்களுடைய ஊராகிய அரிமத்தியாவைச் சார்ந்தவர்; கடவுளுடைய அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
|
53. அதைச் சிலுவையிலிருந்து இறக்கி, கோடித் துணியில் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அதுவரை யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
|
55. கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்களும் சூசையுடன் கூடவேயிருந்து கல்லறையையும் உடலை அங்கு வைத்த வகையையும் கவனித்தனர்.
|
56. திரும்பிச் சென்று வாசனைப்பொருளையும் பரிமளத் தைலங்களையும் ஆயத்தப்படுத்தினர். கட்டளைப்படி ஓய்வுநாள் அனுசரித்தனர்.
|