தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
1. அவர்கள் எல்லாரும் கூட்டமாக எழுந்து, பிலாத்திடம் அவரைக் கூட்டிச்சென்றனர்.
2. இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.
3. நீ, யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.
4. அப்போது, பிலாத்து தலைமைக்குருக்களையும் மக்களையும் நோக்கி, "இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்" என்றார்.
5. அவர்கள், " கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று வற்புறுத்திக்கூறினார்கள்.
6. இதைக் கேட்டதும், பிலாத்து, " இவன் கலிலேயனா ? " என்று வினவினார்.
7. அவர் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்ததும், அந்நாட்களிலே யெருசலேமில் தங்கியிருந்த எரோதிடம் அவரை அனுப்பினார்.
8. ஏரோது இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான். ஏனெனில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, அவர் அருஞ்செயல் எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.
9. பற்பல கேள்விகளை அவரிடம் கேட்டான். அவரோ அவனுக்கு மறுமொழியே கூறவில்லை.
10. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர்.
11. ஏரோது தன் படையோடு சோர்ந்து அவரை அவமானப்படுத்தி, எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.
12. அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர்.
13. பிலாத்து தலைமைக்குருக்களையும் தலைவர்களையும் மக்களையும் ஒன்று கூட்டி,
14. அவர்களை நோக்கி, "மக்களிடையே குழப்பம் உண்டாக்குபவன் என்று இவனை என்னிடம் கொண்டுவந்தீர்களே. இதோ! உங்கள் முன்னிலையில் ஓன்றும் இவனிடம் நான் காணவில்லை.
15. ஏரோதும் காணவில்லை. அவர் இவனை என்னிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.
16. சாவுக்குரியதொன்றும் இவன் செய்யவில்லை.
17. ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார்.
18. மக்களோ ஒருவாய்ப்பட, "இவனை ஒழித்துவிடும்; பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யும்" என்று உரக்கக் கத்தினர்-
19. பரபாசோ நகரிலே நடந்த ஒரு குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததாகச் சிறைப்பட்டவன்.
20. பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களிடம் பேசினார்.
21. அவர்களோ, "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினர்.
22. மூன்றாம் முறையாக அவர்களை நோக்கி, " இவன் செய்த தீங்கு என்ன? சாவுக்குரிய குற்றமொன்றும் இவனிடம் காணோம். ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன் " என்றார்.
23. அவர்களோ அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டனர். அவர்கள் கூச்சலே வெற்றிகண்டது.
24. அவர்கள் கேட்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்பளித்தார்.
25. குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததற்காகச் சிறைப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலைசெய்தார். இயேசுவையோ அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.
26. அவரைக் கூட்டிச்செல்லும்போது வயலிலிருந்து வந்து கொண்டிருந்த சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனைப் பிடித்து, அவன்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின்னால் அதைச் சுமந்துபோகச் செய்தனர்.
27. திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக்கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
28. இயேசு அப்பெண்கள்பக்கம் திரும்பி, "யெருசலேம் மகளிரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.
29. ஒருநாள் வரும்: அன்று, 'மலடிகள் பேறுபெற்றவர்கள்; பிள்ளைப்பேறற்ற வயிறுகளும் பாலூட்டாத கொங்கைகளும் பேறுபெற்றவை' என்பார்கள்.
30. அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ?" என்றார்.
32. மரணதண்டனைக்காக இரு குற்றவாளிகளையும் அவரோடே கூட்டிச்சென்றனர்.
33. மண்டை ஒடு' எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.
34. இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொள்ளச் சீட்டுப்போட்டனர்.
35. மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். தலைவர்களும், "மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்!" என்று அவரை ஏளனம்செய்தனர்.
36. படைவீரர்களும் அணுகி அவருக்குக் காடியைக் கொடுத்து,
37. நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.
38. 'இவன் யூதரின் அரசன்' என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்திருந்தனர்.
39. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று!" என்று அவரைப் பழித்தான்.
40. மற்றவனோ, "கடவுள்மட்டில் உனக்கு அச்சமே இல்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாயிருக்கிறாய்.
41. நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான்.
42. பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" என்றான்.
43. அவனுக்கு இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
44. அப்போது ஏறக்குறைய நண்பகல் வேளை. மூன்று மணிவரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
45. ஆலயத்தின் திரை நடுவில் கிழிந்தது.
46. தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார்.
47. நிகழ்ததைக் கண்ட நூற்றுவர்தலைவன் "உள்ளபடியே, இவர் நீதிமான்தான்" என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான்.
48. வேடிக்கை பார்க்கவந்த மக்கட்கூட்டம் நிகழ்ந்ததைக் கண்டு மார்பில் அறைந்துகொண்டு திரும்பியது.
49. அவருக்கு அறிமுனமானவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்களும் தொலைவில் நின்று இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
50. சூசை என்ற ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர். நல்லவர், நீதிமான்.
51. அவர்களுடைய திட்டத்திற்கும் செயலுக்கும் அவர் இணங்கவில்லை. யூதர்களுடைய ஊராகிய அரிமத்தியாவைச் சார்ந்தவர்; கடவுளுடைய அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
52. அவர் பிலாத்துவை அணுகி இயேசுவின் உடலைக் கேட்டார்.
53. அதைச் சிலுவையிலிருந்து இறக்கி, கோடித் துணியில் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அதுவரை யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
54. அன்று ஆயத்த நாள். ஓய்வுநாள் தொடங்கும் வேளை.
55. கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்களும் சூசையுடன் கூடவேயிருந்து கல்லறையையும் உடலை அங்கு வைத்த வகையையும் கவனித்தனர்.
56. திரும்பிச் சென்று வாசனைப்பொருளையும் பரிமளத் தைலங்களையும் ஆயத்தப்படுத்தினர். கட்டளைப்படி ஓய்வுநாள் அனுசரித்தனர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 23 of Total Chapters 24
லூக்கா 23:28
1. அவர்கள் எல்லாரும் கூட்டமாக எழுந்து, பிலாத்திடம் அவரைக் கூட்டிச்சென்றனர்.
2. இவன் நம் மக்களிடையே குழப்பம் உண்டாக்குகிறன். செசாருக்கு வரிசெலுத்தக் கூடாதென்கிறான். 'தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக்கொள்ளுகிறான். இப்படியெல்லாம் இவன் செய்யக்கண்டோம்" என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினர்.
3. நீ, யூதரின் அரசனோ?" என்று பிலாத்து வினவ, அவர் மறுமொழியாக, "நீர்தாம் சொல்லுகிறீர்" என்றார்.
4. அப்போது, பிலாத்து தலைமைக்குருக்களையும் மக்களையும் நோக்கி, "இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்" என்றார்.
5. அவர்கள், " கலிலேயா தொடங்கி இவ்விடம்வரை, யூதேயா எங்கும் இவ்ன போதித்து மக்கிளிடையே கிளர்ச்சிசெய்கிறான் " என்று வற்புறுத்திக்கூறினார்கள்.
6. இதைக் கேட்டதும், பிலாத்து, " இவன் கலிலேயனா ? " என்று வினவினார்.
7. அவர் ஏரோதின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அறிந்ததும், அந்நாட்களிலே யெருசலேமில் தங்கியிருந்த எரோதிடம் அவரை அனுப்பினார்.
8. ஏரோது இயேசுவைக் கண்டபொழுது மிக்க மகிழ்ச்சியுற்றான். ஏனெனில், அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஆகவே, அவர் அருஞ்செயல் எதாவது செய்யக் காணலாம் என்று நம்பி அவரைப் பார்க்க நெடுநாளாக ஆவலாயிருந்தான்.
9. பற்பல கேள்விகளை அவரிடம் கேட்டான். அவரோ அவனுக்கு மறுமொழியே கூறவில்லை.
10. தலைமைக்குருக்களும், மறைநூல் அறிஞரும் அவர்மீது மும்முரமாகக் குற்றஞ்சாட்டியவண்ணம் நின்றனர்.
11. ஏரோது தன் படையோடு சோர்ந்து அவரை அவமானப்படுத்தி, எள்ளி நகையாடி, அவருக்குப் பகட்டான உடை அணிவித்துப்பிலாத்திடம் திருப்பியனுப்பினான்.
12. அதுவரை ஒருவரோடொருவர் பகைமைகொண்டிருந்த ஏரோதும் பிலாத்தும் அன்றே நண்பராயினர்.
13. பிலாத்து தலைமைக்குருக்களையும் தலைவர்களையும் மக்களையும் ஒன்று கூட்டி,
14. அவர்களை நோக்கி, "மக்களிடையே குழப்பம் உண்டாக்குபவன் என்று இவனை என்னிடம் கொண்டுவந்தீர்களே. இதோ! உங்கள் முன்னிலையில் ஓன்றும் இவனிடம் நான் காணவில்லை.
15. ஏரோதும் காணவில்லை. அவர் இவனை என்னிடம் திருப்பி அனுப்பிவிட்டார்.
16. சாவுக்குரியதொன்றும் இவன் செய்யவில்லை.
17. ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன்" என்றார்.
18. மக்களோ ஒருவாய்ப்பட, "இவனை ஒழித்துவிடும்; பரபாசை எங்களுக்கு விடுதலை செய்யும்" என்று உரக்கக் கத்தினர்-
19. பரபாசோ நகரிலே நடந்த ஒரு குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததாகச் சிறைப்பட்டவன்.
20. பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களிடம் பேசினார்.
21. அவர்களோ, "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினர்.
22. மூன்றாம் முறையாக அவர்களை நோக்கி, " இவன் செய்த தீங்கு என்ன? சாவுக்குரிய குற்றமொன்றும் இவனிடம் காணோம். ஆகவே, இவனைத் தண்டித்து விடுதலைசெய்வேன் " என்றார்.
23. அவர்களோ அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டனர். அவர்கள் கூச்சலே வெற்றிகண்டது.
24. அவர்கள் கேட்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்பளித்தார்.
25. குழப்பத்தில் கலந்து கொலைசெய்ததற்காகச் சிறைப்பட்டவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலைசெய்தார். இயேசுவையோ அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டார்.
26. அவரைக் கூட்டிச்செல்லும்போது வயலிலிருந்து வந்து கொண்டிருந்த சீரேனே ஊரானாகிய சீமோன் என்பவனைப் பிடித்து, அவன்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின்னால் அதைச் சுமந்துபோகச் செய்தனர்.
27. திரளான மக்களும், அவருக்காக மாரடித்துக்கொண்டு புலம்பும் பெண்களும் கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்தனர்.
28. இயேசு அப்பெண்கள்பக்கம் திரும்பி, "யெருசலேம் மகளிரே, எனக்காக அழாதீர்கள். உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவுமே அழுங்கள்.
29. ஒருநாள் வரும்: அன்று, 'மலடிகள் பேறுபெற்றவர்கள்; பிள்ளைப்பேறற்ற வயிறுகளும் பாலூட்டாத கொங்கைகளும் பேறுபெற்றவை' என்பார்கள்.
30. அபபொழுது மலைகளைப் பார்த்து, 'எங்கள்மேல் விழுங்கள்; 'குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிவிடுங்கள். என்று சொல்லத் தொடங்குவார்கள்.
31. பச்சைமரத்திற்கே இப்படிச் செய்கிறார்கள் என்றால், பட்டமரத்திற்கு என்ன நேருமோ?" என்றார்.
32. மரணதண்டனைக்காக இரு குற்றவாளிகளையும் அவரோடே கூட்டிச்சென்றனர்.
33. மண்டை ஒடு' எனப்படும் இடத்திற்கு வந்தபின் அவரையும், அவரது வலப்பக்கத்தில் ஒருவனும், இடப்பக்கத்தில் மற்றவனுமாக அக்குற்றவாளிகளையும் சிலுவையில் அறைந்தனர்.
34. இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும்; ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார். அவர்கள் அவருடைய ஆடைகளைப் பகிர்ந்துகொள்ளச் சீட்டுப்போட்டனர்.
35. மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றனர். தலைவர்களும், "மற்றவர்களைக் காப்பாற்றினான். இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பெற்றவருமானால் தன்னையே காப்பாற்றிக்கொள்ளட்டும்!" என்று அவரை ஏளனம்செய்தனர்.
36. படைவீரர்களும் அணுகி அவருக்குக் காடியைக் கொடுத்து,
37. நீ யூதரின் அரசனானால் உன்னையே காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர்.
38. 'இவன் யூதரின் அரசன்' என்று எழுதியிருந்த பலகையை அவர் தலைக்கு மேல் வைத்திருந்தனர்.
39. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியா அல்லவா? உன்னையும் எங்களையும் காப்பாற்று!" என்று அவரைப் பழித்தான்.
40. மற்றவனோ, "கடவுள்மட்டில் உனக்கு அச்சமே இல்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாயிருக்கிறாய்.
41. நாம் தண்டிக்கப்படுவது முறையே. ஏனெனில், நம் செயல்களுக்குத்தக்க பலனைப் பெறுகிறோம். இவரோ ஒரு குற்றமும் செய்யவில்லை" என்று அவனைக் கடிந்துகொண்டான்.
42. பின்பு அவன், "இயேசுவே, நீர் அரசுரிமையோடு வரும்போது, என்னை நினைவுகூரும்" என்றான்.
43. அவனுக்கு இயேசு, "இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
44. அப்போது ஏறக்குறைய நண்பகல் வேளை. மூன்று மணிவரை கதிரோன் மறைந்திருக்க, நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
45. ஆலயத்தின் திரை நடுவில் கிழிந்தது.
46. தந்தையே, உமது கையில் என் ஆவியை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரக்கக் கூவினார். இதைச் சொன்னதும் உயிர்நீத்தார்.
47. நிகழ்ததைக் கண்ட நூற்றுவர்தலைவன் "உள்ளபடியே, இவர் நீதிமான்தான்" என்று சொல்லி, கடவுளை மகிமைப்படுத்தினான்.
48. வேடிக்கை பார்க்கவந்த மக்கட்கூட்டம் நிகழ்ந்ததைக் கண்டு மார்பில் அறைந்துகொண்டு திரும்பியது.
49. அவருக்கு அறிமுனமானவர்களும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்தொடர்ந்த பெண்களும் தொலைவில் நின்று இதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
50. சூசை என்ற ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்கத்தின் உறுப்பினர். நல்லவர், நீதிமான்.
51. அவர்களுடைய திட்டத்திற்கும் செயலுக்கும் அவர் இணங்கவில்லை. யூதர்களுடைய ஊராகிய அரிமத்தியாவைச் சார்ந்தவர்; கடவுளுடைய அரசை எதிர்ப்பார்த்திருந்தவர்.
52. அவர் பிலாத்துவை அணுகி இயேசுவின் உடலைக் கேட்டார்.
53. அதைச் சிலுவையிலிருந்து இறக்கி, கோடித் துணியில் சுற்றி, பாறையில் குடைந்திருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அதுவரை யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை.
54. அன்று ஆயத்த நாள். ஓய்வுநாள் தொடங்கும் வேளை.
55. கலிலேயாவிலிருந்து இயேசுவோடு வந்திருந்த பெண்களும் சூசையுடன் கூடவேயிருந்து கல்லறையையும் உடலை அங்கு வைத்த வகையையும் கவனித்தனர்.
56. திரும்பிச் சென்று வாசனைப்பொருளையும் பரிமளத் தைலங்களையும் ஆயத்தப்படுத்தினர். கட்டளைப்படி ஓய்வுநாள் அனுசரித்தனர்.
Total 24 Chapters, Current Chapter 23 of Total Chapters 24
×

Alert

×

tamil Letters Keypad References