2. தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் இயேசுவை எப்படித் தொலைக்கலாமென்று வழிதேடிக்கொண்டிருந்தனர். ஆனால், பொதுமக்களுக்கு அஞ்சினர்.
|
4. தலைமக்குருக்களிடமும் காவல்தலைவர்களிடமும் சென்று, தான் இயேசுவை அவர்களுக்கு எப்படிக் காட்டிக்கொடுக்கலாம் என்பதைப்பற்றிக் கலந்துபேசினான்.
|
8. "நாம் பாஸ்காப் பலியுணவை உண்பதற்கு நீங்கள் போய் ஏற்பாடுசெய்யுங்கள்" என்று இயேசு இராய்பபரையும் அருளப் பரையும் அனுப்பினார்.
|
10. "நீங்கள் நகருக்குள் போகும்போது, ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்துகொண்டு உங்களுக்கு எதிரே வருவான். அவன் நுழையும் வீட்டிற்கு அவன்பின்னே சென்று,
|
11. அந்த வீட்டுத் தலைவனிடம், ' நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே என்று போதகர் உம்மைக் கேட்கிறார் ' எனச் சொல்லுங்கள்.
|
12. இருக்கை முதலியன அமைந்துள்ள ஒரு பெரிய மாடி அறையை அவன் உங்களுக்குக் காட்டுவான். அங்கே ஏற்பாடுசெய்யுங்கள் " என்றார்.
|
13. அவர்கள் போய், தங்களிடம் அவர் சொல்லியவாறே நிகழ்ந்ததைக் கண்டு, பாஸ்கா உணவுக்கு ஏற்பாடுசெய்தார்கள்.
|
16. ஏனெனில், கடவுளுடைய அரசில் இது நிறைவேறுமளவும், இதை இனி உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
|
18. ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசு வரும்வரை திராட்சைப்பழ இரசத்தைக் குடிக்கமாட்டேன் " என்றார்.
|
19. மேலும் அப்பத்தை எடுத்து, நன்றிகூறி, பிட்டு, அவர்களுக்கு அளித்து, " இது உங்களுக்காக அளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் " என்றார்.
|
20. அவ்வாறே, உணவு அருந்தியபின் கிண்ணத்தை எடுத்து, "இக்கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படும் என் இரத்தத்தினாலாகும் புதிய உடன்படிக்கை.
|
22. மனுமகன் தேவ ஏற்பாட்டின்படி போகத்தான் போகிறார். ஆனால் அவரைக் காட்டிக்கொடுப்பவனுக்கு ஜயோ கேடு! " என்றார்.
|
23. "அப்படியானால் நம்முள் யார் இதைச் செய்யப்போகிறவன்?" என்று அவர்கள் தஙகளுக்குள்ளே வினவத்தொடங்கினர்.
|
25. அதற்கு அவர், "புறவினத்தாரின் அரசர்கள் அவர்கள்மீது அதிகாரம் செலுத்துகின்றார்கள். அப்படி அதிகாரம் செலுத்துவோர் 'நன்மை புரிவோர்' எனப்படுகின்றனர்.
|
26. நீங்களோ அப்படி இருத்தல் ஆகாது. ஆனால், உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும்.
|
27. யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? பந்தியில் அமர்பவன் அன்றோ? நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப் போல் இருக்கிறேன்.
|
30. எனவே, என் அரசில் என்னுடன் பந்தியில் உண்பீர்கள், குடிப்பீர்கள். இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களுக்கும் நடுவராக அரியணையில் வீற்றிருப்பீர்கள்.
|
32. ஆனால் உன் விசுவாசம் தவறாதபடி உனக்காக மன்றாடினேன். நீ திருந்தியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து" என்றார்.
|
33. அதற்கு இராயப்பர், "ஆண்டவரே, உம்மோடு சிறைக்கும் சாவுக்கும் உள்ளாக ஆயத்தமாய் இருக்கிறேன்" என்றார்.
|
34. இயேசுவோ, "இராயப்பா, 'நான் அவரை அறியேன்' என்று நீ மும்முறை மறுதலிக்குமுன், இன்று கோழி கூவாது என் உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
|
35. பின்பு அவர்களை நோக்கி, "பணப்பை, கைப்பை, மிதியடி எதுவுமில்லாமல் உங்களை நான் அனுப்பியபோது உங்களுக்கு ஏதாவது குறைவாய் இருந்ததா?" என்று வினவினார்.
|
36. இல்லை" என்றனர்.'"இப்பொழுதோ பணப்பை உள்ளவன் அதை எடுத்துக்கொள்ளட்டும். கைப்பை உள்ளவனும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவன், தன் மேலாடையை விற்றுவிட்டு வாள் ஒன்று வாங்கிக் கொள்ளட்டும்.
|
37. ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: 'நெறிகெட்டவர்களோடு ஒன்றாக எண்ணப்பட்டார்' என்று எழுதியுள்ளது என்மட்டில் நிறைவேறவேண்டும். என்னைப் பற்றியதெல்லாம் நிறைவுபெறுகின்றது" என்றார்.
|
39. அங்கிருந்து வெளியே புறப்பட்டுச் சென்று வழக்கப்படி ஒலிவமலைக்கு வந்தார். அவருடைய சீடர் அவரைப் பின்தொடர்ந்தனர்.
|
42. "தந்தையே, உமக்கு விருப்பமானால், இத் துன்பகலத்தை என்னிடமிருந்து அகற்றியருளும்; எனினும், என் விருப்பம் அன்று, உம் விருப்பமே நிறைவேறட்டும்" என்று செபித்தார்.
|
44. கொடிய வேதனைக்குள்ளாகவே, மேலும் உருக்கமாய்ச் செபித்தார். அவருடைய வியர்வை பெரும் இரத்தத் துளிகளாக நிலத்தில் விழுந்தது.
|
46. அவர்களை நேக்கி, "ஏன் உறங்குகிறீர்கள்? எழுந்திருங்கள், சோதனைக்கு உட்படாதபடி செபியுங்கள்" என்றார்.
|
47. அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே, இதோ! ஒரு கூட்டம் வந்தது. பன்னிருவருள் ஒருவனாகிய யூதாஸ் என்பவன் அவர்களுக்கு முன்சென்று இயேசுவை முத்தமிட அணுகினான்.
|
52. இயேசு தம்மைப் பிடிக்க வந்திருந்த தலைமைக்குருக்களையும், கோயிலின் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி, "நீங்கள் கள்வனிடம் வருவதுபோல வாளோடும் தடியோடும் வந்தீர்களோ?
|
53. நாள்தோறும் கோயிலில் நான் உங்களோடு இருந்தும் நீங்கள் என்மேல் கைவைக்கவில்லை. ஆனால் இது உங்கள் நேரம்; இருள் ஆட்சிபுரியும் நேரம்" என்றார்.
|
54. பின்னர், அவர்கள் அவரைப் பிடித்து, தலைமைக்குருவின் இல்லத்திற்குக் கூட்டிச்சென்றனர். இராயப்பரோ தொலைவிலே பின்தொடர்ந்தார்.
|
55. முற்றத்தின் நடுவில் அவர்கள் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி உட்கார்ந்தனர். இராயப்பரும் அவர்களோடு போய் உட்கார்ந்துகொண்டார்.
|
56. ஊழியக்காரி ஒருத்தி, அவர் அனல் அருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனுடன் இருந்தான்" என்றாள்.
|
58. சற்று நேரத்திற்குப்பின் மற்றொருவன் அவரைக் கண்டு, "நீயும் அவர்களுள் ஒருவன்தான்" என, இராயப்பரோ, 'இல்லையப்பா" என்றார்.
|
59. ஏறக்குறைய ஒருமணிநேரம் கழித்து இன்னொருவன், "உண்மையாகவே, இவனும் அவனோடு இருந்தான்; ஏனெனில் இவன் கலிலேயன்தான்" என்று அழுத்தமாய்க் கூறினான்.
|
60. இராயப்பரோ, "நீ சொல்வது எனக்குத் தெரியதப்பா" என்றார். உடனே, அவர் பேசிக்கொண்டிருக்கையிலேயே கோழி கூவிற்று.
|
61. ஆண்டவர் திரும்பி இராயப்பரை உற்றுநோக்கவே, "இன்று கோழி கூவுமுன்னர் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்" என்று ஆண்டவர் கூறிய வார்த்தையை அவர் நினைவுகூர்ந்து,
|
66. பொழுது விடிந்ததும் மூப்பர் சபையினரும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞரும் ஒன்றுகூடித் தங்கள் நீதிமன்றத்திற்கு அவரைக் கூட்டிப்போய், "நீ மெசியாவானால், எங்களுக்குச் சொல்" என்றனர்.
|
70. அதற்கு அனைவரும், "அப்படியானால் நீ கடவுளின் மகனா?" என, அதற்கு அவர், "நான் கடவுளின் மகன் என்று நீங்களே சொல்லுகிறீர்கள்" என்றார்.
|