1. அந்நாளில் உலக முழுமையும் மக்கள் தொகையைக் கணக்கிடும்படி செசார் அகுஸ்துவிடமிருந்து கட்டளை பிறந்தது.
|
4. சூசையும் கருப்பவதியாயிருந்த மனைவி மரியாளோடு பெயரைப் பதிவுசெய்யக் கலிலேயா நாட்டு நாசரேத்தூரை விட்டு,
|
5. யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்ற தாவீதின் ஊருக்குச் சென்றார். ஏனெனில், அவர் தாவீதின் குலத்தவரும் குடும்பத்தவருமாக இருந்தார்.
|
7. அவள் தலைப்பேறான மகனை ஈன்றெடுத்து, துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தினாள். ஏனெனில், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
|
8. அதே பகுதியில் இடையர் வெட்டவெளியில் தங்கி இரவெல்லாம் தங்கள் கிடைக்குச் சாமக் காவல் காத்துக்கொண்டிருந்தனர்.
|
9. ஆண்டவருடைய தூதர் அவர்களுக்குத் தோன்ற, விண்ணொளி அவர்களைச் சூழ்ந்து சுடர்ந்தது. மிகுந்த அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
|
10. வானதூதர் அவர்களை நோக்கி, " அஞ்சாதீர், இதோ! மக்களுக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.
|
12. குழந்தை ஒன்றைத் துணிகளில் பொதிந்து முன்னிட்டியில் கிடத்தி இருப்பதைக் காண்பீர்கள். இதுவே உங்களுக்கு அறிகுறியாகும்" என்றார்.
|
14. " உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக. உலகிலே அவர் தயவுபெற்றவர்க்கு அமைதி ஆகுக! " என்று கடவுளைப் புகழ்ந்தது.
|
15. தூதர்கள் அவர்களை விட்டு வானகம் சென்றபின், இடையர் ஒருவரையொருவர் நோக்கி, " வாருங்கள், பெத்லெகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்த இந்நிகழ்ச்சியைக் காண்போம் " என்று சொல்லிக் கொண்டு,ஃ
|
20. இடையர் தாம் கண்டது கேட்டதெல்லாம் நினைத்துக் கடவுளை மகிமைப் படுத்திப் புகழ்ந்துகொண்டே திரும்பினார். அவர்களுக்குச் சொன்னபடியே எல்லாம் நிகழ்ந்திருந்தது.
|
21. எட்டாம் நாள் வந்தபோது, குழந்தைக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டியிருந்தது. தாய் கருத்தரிக்கும் முன்பே தூதர் குறிப்பிட்டிருந்த ' இயேசு ' என்னும் பெயரை அதற்கு இட்டார்கள்.
|
22. மோயீசன் சட்டப்படி அவர்களுக்குச் சுத்திகார நாள் வந்தபோது குழந்தையை யெருசலேமுக்குக் கொண்டுபோயினர்.
|
23. 'தலைப்பேறான எந்த ஆணும் ஆண்டவருடைய உரிமையாகக் கருதப்படும்' என்று ஆண்டவருடைய சட்டத்தில் எழுதியிருந்தபடி அதனை ஆண்டவர் திருமுன் நிறுத்தவும்,
|
24. அச்சட்டத்திலே கூறியுள்ளபடி ஒரு சோடி காட்டுப் புறாக்கள் அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைப் பலியாகக் கொடுக்கவும் வேண்டியிருந்தது.
|
25. அப்போது யெருசலேமிலே சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நீதிமான், கடவுள் பக்தர். இஸ்ராயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர் பார்த்திருந்தவர். பரிசுத்த ஆவி அவர்மீது இருந்தார்.
|
26. ஆண்டவருடைய மெசியாவைக் காண்பதற்குமுன் தாம் சாவதில்லை என்று பரிசுத்த ஆவியால் அறிவிக்கப்பெற்றிருந்தார்.
|
27. அவர் தேவ ஆவியின் ஏவுதலால் கோயிலுக்கு வந்தார். திருச்சட்ட முறைமைப்படி குழந்தைக்குச் செய்யவேண்டியதை நிறைவேற்றுவதற்குப் பாலன் இயேசுவைப் பெற்றோர் கொண்டு வந்தபோது,
|
34. சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாளைப் பார்த்து, "இதோ! இப்பாலன் இஸ்ராயேல் மக்கள் பலருக்கு வீழ்ச்சியாகவோ எழுச்சியாகவோ அமைந்துள்ளான்; எதிர்க்கப்படும் அறிகுறியாக இருப்பான்.
|
35. உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவும்-- இதனால் பலருடைய உள்ளங்களினின்று எண்ணங்கள் வெளிப்படும்" என்றார்.
|
36. அன்றியும், ஆசேர் குலத்தைச் சார்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்றொருத்தி இருந்தாள். அவள் இறைவாக்குரைப்பவள்.
|
37. வயதில் மிக முதிர்ந்தவள்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவனோடு வாழ்ந்தபின், கைம்பெண் ஆனாள். ஏறக்குறைய எண்பத்து நான்கு வயதானவள். கோயிலை விட்டு நீங்காமல் நோன்பாலும் செபத்தாலும் அல்லும் பகலும் பணிபுரிந்து வந்தாள்.
|
38. அவளும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து, யெருசலேமின் விடுதலையை எதிர்பார்த்திருந்த அனைவருக்கும் குழந்தையைப்பற்றி எடுத்துரைத்தாள்.
|
39. ஆண்டவருடைய சட்டப்படி எல்லாம் நிறைவேற்றியபின், அவர்கள் கலிலேயாவில் உள்ள தம் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப் போனார்கள்.
|
40. பாலனோ வளர்ந்து வலிமை பெற்றார்; ஞானம் நிறைந்தவராகவும் இருந்தார்; கடவுள் அருளும் அவர்மீது இருந்தது.
|
43. திருநாட்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது சிறுவன் இயேசு யெருசலேமிலேயே தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது.
|
44. யாத்திரிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று நினைத்துக்கொண்டு அவர்கள் ஒருநாள் வழிநடந்த பின்னர் உற்றார் உறவினரிடையே அவரைத் தேடினார்கள்.
|
46. மூன்று நாளுக்குப்பின் அவரைக் கோயிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பதும், அவர்களை வினவுவதுமாய் இருந்தார்.
|
48. அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு மலைத்துப்போயினர். அவருடைய தாய் அவரைப் பார்த்து, " மகனே, ஏன் எங்களுக்கு இப்படிச் செய்துவிட்டாய் ? இதோ! உன் தந்தையும் நானும் உன்னை ஏக்கத்தோடு தேடிக்கொண்டிருந்தோமே! " என்றாள்.
|
49. அதற்கு அவர், " ஏன் என்னைத் தேடினீர்கள் ? என் தந்தையின் இல்லத்தில் நான் இருக்கவேண்டுமென்பது உங்களுக்குத் தெரியாதா ?" என்றார்.
|
51. பின்பு அவர் அவர்களோடு புறப்பட்டு நாசரேத்துக்கு வந்து அவர்களுக்குப் பணிந்திருந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தன்னுள்ளத்தில் கொண்டிருந்தாள்.
|