3. அந்நகரில் இருந்த கைம்பெண் ஒருத்தி, ' என் எதிராளியைக் கண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று அவனிடம் கேட்டுக்கொண்டே வந்தாள்.
|
4. அவனுக்கோ வெகுகாலம்வரை மனம் வரவில்லை. பின்னர் அவன், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மனிதனை மதிப்பதுமில்லை;
|
5. என்றாலும், இக்கைம்பெண் என்னைத் தொந்தரைசெய்வதால் நான் அவளுக்கு நீதி வழங்குவேன். இல்லாவிட்டால், எப்போதும் என் உயிரை வாங்கிக் கொண்டே யிருப்பாள்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்."
|
7. தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?
|
8. விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.
|
11. பரிசேயன் நின்றுகொண்டு, 'கடவுளே, கள்வர், அநீதர், விபசாரர் முதலான மற்ற மனிதரைப் போலவோ, இந்த ஆயக்காரனைப்போலவோ நான் இராததுபற்றி உமக்கு நன்றிசெலுத்துகிறேன்.
|
12. வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயிலெல்லாம் பத்திலொரு பகுதி கொடுக்கிறேன்' என்று தனக்குள்ளே செபித்தான்.
|
13. ஆயக்காரனோ தொலைவில் நின்று, வானத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லி மார்பில் அறைந்து கொண்டான்.
|
14. இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன் இவனே, அவனல்லன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
|
15. கைக்குழந்தைகளை அவர் தொட வேண்டுமென்று அவர்களையும் அவரிடம் கொண்டுவந்தனர். இதைக்கண்ட அவருடைய சீடர், அவர்களை அதட்டினர்.
|
16. இயேசுவோ அவர்களை அழைத்து, "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.
|
17. உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.
|
20. கட்டளைகள் உனக்குத் தெரியுமே: விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.
|
22. இதைக் கேட்டு இயேசு, "இன்னும் ஒன்று உனக்குக் குறைவாயிருக்கிறது. உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.
|
28. அப்போது இராயப்பர், "இதோ! எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்சென்றோமே" என்று சொல்ல,
|
29. அவர் அவர்களை நோக்கி, "தன் வீட்டையோ மனைவியையோ சகோதரரையோ பெற்றோரையோ மக்களையோ கடவுளின் அரசின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும்
|
30. இம்மையில் அதைவிட மிகுதியும், மறுமையில் முடிவில்லா வாழ்வும் பெறாமல் போகான் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
|
31. இயேசு பன்னிருவரையும் அழைத்து அவர்களிடம், "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகனைக்குறித்து இறைவாக்கினர்கள் எழுதியதெல்லாம் நிறைவேறும்.
|
33. அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்த பின் கொல்லுவார்கள். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்றார்.
|
34. இவற்றில் எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை. 'அவர் சொன்னதின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது. அவர் கூறியதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
|
35. அவர் யெரிக்கோவை நெருங்கியபொழுது குருடன் ஒருவன் வழியோரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
|
39. முன்னே சென்றவர்கள், பேசாதிருக்கும்படி அவனை அதட்டினர். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.
|
41. அவன் நெருங்கி வந்ததும், "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, அவன், "ஆண்டவரே, நான் பார்வை பெறவேண்டும்" என்றான்.
|
43. அவன் உடனே பார்வை பெற்று, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான். மக்கள் அனைவரும் இதைக்கண்டு கடவுளைப் புகழ்ந்தேத்தினர்.
|