தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லூக்கா
1. மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்பதற்கு அவர் ஓர் உவமை சொன்னார்:
2. " ஒரு நகரில் நடுவன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை, மனிதனையும் மதிப்பதில்லை.
3. அந்நகரில் இருந்த கைம்பெண் ஒருத்தி, ' என் எதிராளியைக் கண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று அவனிடம் கேட்டுக்கொண்டே வந்தாள்.
4. அவனுக்கோ வெகுகாலம்வரை மனம் வரவில்லை. பின்னர் அவன், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மனிதனை மதிப்பதுமில்லை;
5. என்றாலும், இக்கைம்பெண் என்னைத் தொந்தரைசெய்வதால் நான் அவளுக்கு நீதி வழங்குவேன். இல்லாவிட்டால், எப்போதும் என் உயிரை வாங்கிக் கொண்டே யிருப்பாள்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்."
6. அதன்பின் ஆண்டவர், "அந்த நீதியற்ற நடுவன் சொன்னதைப் பாருங்கள்.
7. தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?
8. விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.
9. தம்மை நீதிமான்களென நம்பிப் பிறரை புறக்கணிக்கும் சிலரை நோக்கி, அவர் இந்த உவமையைச் சொன்னார்:
10. " இருவர் செபம் செய்யக் கோயிலுக்குச் சென்றனர். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11. பரிசேயன் நின்றுகொண்டு, 'கடவுளே, கள்வர், அநீதர், விபசாரர் முதலான மற்ற மனிதரைப் போலவோ, இந்த ஆயக்காரனைப்போலவோ நான் இராததுபற்றி உமக்கு நன்றிசெலுத்துகிறேன்.
12. வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயிலெல்லாம் பத்திலொரு பகுதி கொடுக்கிறேன்' என்று தனக்குள்ளே செபித்தான்.
13. ஆயக்காரனோ தொலைவில் நின்று, வானத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லி மார்பில் அறைந்து கொண்டான்.
14. இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன் இவனே, அவனல்லன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
15. கைக்குழந்தைகளை அவர் தொட வேண்டுமென்று அவர்களையும் அவரிடம் கொண்டுவந்தனர். இதைக்கண்ட அவருடைய சீடர், அவர்களை அதட்டினர்.
16. இயேசுவோ அவர்களை அழைத்து, "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.
17. உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.
18. தலைவன் ஒருவன், "நல்ல போதகரே, என்ன செய்தால் எனக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்?" எனக் கேட்டான்.
19. அதற்கு இயேசு, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவரன்றி நல்லவர் எவருமில்லை.
20. கட்டளைகள் உனக்குத் தெரியுமே: விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.
21. அதற்கு அவன், "என் சிறுவமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.
22. இதைக் கேட்டு இயேசு, "இன்னும் ஒன்று உனக்குக் குறைவாயிருக்கிறது. உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.
23. அவன் அதைக் கேட்டு வருத்தப்பட்டான். ஏனெனில், அவன் பெரிய பணக்காரன்.
24. இயேசு அவனைப் பார்த்து, "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!
25. ஏனெனில், பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
26. அதைக் கேட்டவர்கள், "பின் யார்தாம் மீட்புப் பெறமுடியும் ?" என,
27. அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.
28. அப்போது இராயப்பர், "இதோ! எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்சென்றோமே" என்று சொல்ல,
29. அவர் அவர்களை நோக்கி, "தன் வீட்டையோ மனைவியையோ சகோதரரையோ பெற்றோரையோ மக்களையோ கடவுளின் அரசின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும்
30. இம்மையில் அதைவிட மிகுதியும், மறுமையில் முடிவில்லா வாழ்வும் பெறாமல் போகான் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
31. இயேசு பன்னிருவரையும் அழைத்து அவர்களிடம், "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகனைக்குறித்து இறைவாக்கினர்கள் எழுதியதெல்லாம் நிறைவேறும்.
32. புற இனத்தாரிடம் கையளிக்கப்பட்டு, ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகித் துப்பப்படுவார்.
33. அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்த பின் கொல்லுவார்கள். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்றார்.
34. இவற்றில் எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை. 'அவர் சொன்னதின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது. அவர் கூறியதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35. அவர் யெரிக்கோவை நெருங்கியபொழுது குருடன் ஒருவன் வழியோரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
36. திரளான மக்கள் நடந்து செல்வதைக்கேட்டு, அது என்ன வென்று வினவினான்.
37. நாசரேத்தூர் இயேசு அவ்வழியே செல்வதாக அவனுக்கு அறிவித்தனர்.
38. அவன், "இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று கத்தினான்.
39. முன்னே சென்றவர்கள், பேசாதிருக்கும்படி அவனை அதட்டினர். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.
40. இயேசு நின்று, அவனைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
41. அவன் நெருங்கி வந்ததும், "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, அவன், "ஆண்டவரே, நான் பார்வை பெறவேண்டும்" என்றான்.
42. இயேசு அவனை நோக்கி, "பார்வை பெறுக; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது" என்றார்.
43. அவன் உடனே பார்வை பெற்று, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான். மக்கள் அனைவரும் இதைக்கண்டு கடவுளைப் புகழ்ந்தேத்தினர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 24 Chapters, Current Chapter 18 of Total Chapters 24
லூக்கா 18:46
1. மனந்தளராமல் எப்பொழுதும் செபிக்க வேண்டுமென்பதற்கு அவர் ஓர் உவமை சொன்னார்:
2. " ஒரு நகரில் நடுவன் ஒருவன் இருந்தான். அவன் கடவுளுக்கும் அஞ்சுவதில்லை, மனிதனையும் மதிப்பதில்லை.
3. அந்நகரில் இருந்த கைம்பெண் ஒருத்தி, ' என் எதிராளியைக் கண்டித்து எனக்கு நீதி வழங்கும் ' என்று அவனிடம் கேட்டுக்கொண்டே வந்தாள்.
4. அவனுக்கோ வெகுகாலம்வரை மனம் வரவில்லை. பின்னர் அவன், ' நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை, மனிதனை மதிப்பதுமில்லை;
5. என்றாலும், இக்கைம்பெண் என்னைத் தொந்தரைசெய்வதால் நான் அவளுக்கு நீதி வழங்குவேன். இல்லாவிட்டால், எப்போதும் என் உயிரை வாங்கிக் கொண்டே யிருப்பாள்' என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்."
6. அதன்பின் ஆண்டவர், "அந்த நீதியற்ற நடுவன் சொன்னதைப் பாருங்கள்.
7. தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் நீதிவழங்காமல் இருப்பாரோ ? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரோ?
8. விரைவிலேயே அவர்களுக்கு நீதி வழங்குவார் என உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆயினும் மனுமகன் வரும்பொழுது மண்ணுலகில் விசுவாசத்தைக் காண்பாரோ ?" என்றார்.
9. தம்மை நீதிமான்களென நம்பிப் பிறரை புறக்கணிக்கும் சிலரை நோக்கி, அவர் இந்த உவமையைச் சொன்னார்:
10. " இருவர் செபம் செய்யக் கோயிலுக்குச் சென்றனர். ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
11. பரிசேயன் நின்றுகொண்டு, 'கடவுளே, கள்வர், அநீதர், விபசாரர் முதலான மற்ற மனிதரைப் போலவோ, இந்த ஆயக்காரனைப்போலவோ நான் இராததுபற்றி உமக்கு நன்றிசெலுத்துகிறேன்.
12. வாரத்திற்கு இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயிலெல்லாம் பத்திலொரு பகுதி கொடுக்கிறேன்' என்று தனக்குள்ளே செபித்தான்.
13. ஆயக்காரனோ தொலைவில் நின்று, வானத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல், 'கடவுளே, பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று சொல்லி மார்பில் அறைந்து கொண்டான்.
14. இறைவனுக்கு ஏற்புடையவனாகி வீடுதிரும்பியவன் இவனே, அவனல்லன் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏனெனில், தன்னை உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான்; தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான்."
15. கைக்குழந்தைகளை அவர் தொட வேண்டுமென்று அவர்களையும் அவரிடம் கொண்டுவந்தனர். இதைக்கண்ட அவருடைய சீடர், அவர்களை அதட்டினர்.
16. இயேசுவோ அவர்களை அழைத்து, "குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள்; தடுக்க வேண்டாம். ஏனெனில், கடவுளின் அரசு இத்தகையோரதே.
17. உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: கடவுளின் அரசைக் குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது" என்றார்.
18. தலைவன் ஒருவன், "நல்ல போதகரே, என்ன செய்தால் எனக்கு முடிவில்லா வாழ்வு கிடைக்கும்?" எனக் கேட்டான்.
19. அதற்கு இயேசு, "என்னை நல்லவர் என்பானேன்? கடவுள் ஒருவரன்றி நல்லவர் எவருமில்லை.
20. கட்டளைகள் உனக்குத் தெரியுமே: விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்ச்சான்று சொல்லாதே, தாய் தந்தையரைப் போற்று" என்றார்.
21. அதற்கு அவன், "என் சிறுவமுதல் இவையெல்லாம் கடைப்பிடித்து வருகிறேன்" என்றான்.
22. இதைக் கேட்டு இயேசு, "இன்னும் ஒன்று உனக்குக் குறைவாயிருக்கிறது. உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்குப் பகிர்ந்துகொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்பு வந்து என்னைப் பின்செல்" என்றார்.
23. அவன் அதைக் கேட்டு வருத்தப்பட்டான். ஏனெனில், அவன் பெரிய பணக்காரன்.
24. இயேசு அவனைப் பார்த்து, "கடவுளின் அரசில் செல்வமுடையவர் நுழைவது எவ்வளவோ அரிது!
25. ஏனெனில், பணக்காரன் கடவுளின் அரசில் நுழைவதைவிட, ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது" என்றார்.
26. அதைக் கேட்டவர்கள், "பின் யார்தாம் மீட்புப் பெறமுடியும் ?" என,
27. அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.
28. அப்போது இராயப்பர், "இதோ! எங்கள் உடைமைகளை விட்டுவிட்டு நாங்கள் உம்மைப் பின்சென்றோமே" என்று சொல்ல,
29. அவர் அவர்களை நோக்கி, "தன் வீட்டையோ மனைவியையோ சகோதரரையோ பெற்றோரையோ மக்களையோ கடவுளின் அரசின் பொருட்டுத் துறந்துவிடும் எவனும்
30. இம்மையில் அதைவிட மிகுதியும், மறுமையில் முடிவில்லா வாழ்வும் பெறாமல் போகான் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் " என்றார்.
31. இயேசு பன்னிருவரையும் அழைத்து அவர்களிடம், "இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகனைக்குறித்து இறைவாக்கினர்கள் எழுதியதெல்லாம் நிறைவேறும்.
32. புற இனத்தாரிடம் கையளிக்கப்பட்டு, ஏளனத்திற்கும் அவமானத்திற்கும் உள்ளாகித் துப்பப்படுவார்.
33. அவர்கள் அவரைச் சாட்டையால் அடித்த பின் கொல்லுவார்கள். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்றார்.
34. இவற்றில் எதுவும் அவர்களுக்கு விளங்கவில்லை. 'அவர் சொன்னதின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது. அவர் கூறியதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35. அவர் யெரிக்கோவை நெருங்கியபொழுது குருடன் ஒருவன் வழியோரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
36. திரளான மக்கள் நடந்து செல்வதைக்கேட்டு, அது என்ன வென்று வினவினான்.
37. நாசரேத்தூர் இயேசு அவ்வழியே செல்வதாக அவனுக்கு அறிவித்தனர்.
38. அவன், "இயேசுவே, தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று கத்தினான்.
39. முன்னே சென்றவர்கள், பேசாதிருக்கும்படி அவனை அதட்டினர். அவனோ, "தாவீதின் மகனே, என்மீது இரக்கம்வையும்" என்று இன்னும் அதிகமாய்க் கூவினான்.
40. இயேசு நின்று, அவனைத் தம்மிடம் கூட்டிக்கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.
41. அவன் நெருங்கி வந்ததும், "உனக்கு நான் என்ன செய்யவேண்டும்?" என்று அவனைக் கேட்க, அவன், "ஆண்டவரே, நான் பார்வை பெறவேண்டும்" என்றான்.
42. இயேசு அவனை நோக்கி, "பார்வை பெறுக; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது" என்றார்.
43. அவன் உடனே பார்வை பெற்று, கடவுளை மகிமைப் படுத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தான். மக்கள் அனைவரும் இதைக்கண்டு கடவுளைப் புகழ்ந்தேத்தினர்.
Total 24 Chapters, Current Chapter 18 of Total Chapters 24
×

Alert

×

tamil Letters Keypad References