1. ஓய்வுநாளில் பரிசேயரின் தலைவன் ஒருவன் வீட்டில் அவர் உணவருந்தச் சென்றபோது, அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.
|
3. இயேசு சட்ட வல்லுநரையும் பரிசேயரையும் நோக்கி, "ஓய்வுநாளில் குணமாக்குதல் முறையா? இல்லையா?" எனக் கேட்டார்.
|
5. பின் அவர்களிடம், "உங்களுள் ஒருவனுடைய மகனோ மாடோ கிணற்றில் விழுந்தால், ஓய்வுநாளென்றாலும் உடனே அவன் தூக்கிவிடமாட்டானோ?" என்றார்.
|
7. மேலும், அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதலிடங்களைத் தேர்ந்துகொள்வதைக் கண்டு, அவர்களுக்கு உவமையாகக் கூறினதாவது:
|
8. " உன்னை ஒருவன் மணவிருந்திற்கு அழைக்கும்போது, நீ முதலிடத்தில் அமராதே. ஏனெனில், உன்னைவிட மதிப்பிற்குரிய ஒருவரை அவன் அழைத்திருக்கலாம்.
|
9. உன்னையும் அவரையும் அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'இவருக்கு உன் இடத்தை விடு' என்பான். அப்போது நீ வெட்கிக் கடைசி இடத்திற்குச் செல்லவேண்டியிருக்கும்.
|
10. மாறாக, உன்னை ஒருவன் அழைக்கும்போது கடைசி இடத்தில் போய் அமர்ந்துகொள். அப்படிச் செய்தால் உன்னை அழைத்தவன் வந்து உன்னை நோக்கி, 'நண்ப, மேலிடத்திற்குப்போம்' என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன் பந்தியிலிருப்பவர் முன்பாக நீ பெருமை அடைவாய்.
|
12. பின் தம்மை அழைத்திருந்தவனை நோக்கி, "நீ பகல் உணவிற்காவது இராவுணவிற்காவது, உன் நண்பர்களையோ சகோதரர்களையோ உறவினர்களையோ, செல்வரான அண்டை வீட்டாரையோ அழைக்காதே. அவர்களும் உன்னைத் திரும்ப அழைக்கலாம். அப்போது உனக்குக் கைம்மாறு கிடைத்துவிடும்.
|
14. அப்போது நீ பேறுபெற்றவன். ஏனெனில், உனக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நீதிமான்கள் உயிர்த்தெழும்போது உனக்குக் கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
|
15. அவருடன் பந்தியில் இருந்தவர்களுள் ஒருவன் இதைக்கேட்டு அவரை நோக்கி, "கடவுளின் அரசில் விருந்து உண்பவன் பேறுபெற்றவன்" என்றான்.
|
17. விருந்துக்கு நேரமானதும், 'எல்லாம் ஏற்பாடாயிற்று, வாருங்கள்' என்று அழைக்கப்பெற்றவர்களிடம் சொல்லும்படி தன் ஊழியனை அனுப்பினான்.
|
18. எல்லாரும் ஒன்றுபோலச் சாக்குச் சொல்லத் தொடங்கினர். 'தோட்டம் வாங்கியிருக்கிறேன். அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்கவேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான் ஒருவன்.
|
19. ' நான் ஐந்து ஏர் மாடு வாங்கியிருக்கிறேன். அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்' என்றான். இன்னொருவன்.
|
21. "ஊழியன் திரும்பிவந்து இதையெல்லாம் தன் தலைவனுக்கு அறிவித்தான். வீட்டுத் தலைவன் சினமுற்றுத் தன் ஊழியனிடம், 'நகரத்தின் தெருக்களிலும் சந்துகளிலும் விரைவில் சென்று, ஏழைகள், ஊனர்கள், குருடர்கள், முடவர்கள் ஆகியோரை இங்கே கூட்டிவா' என்றான்.
|
23. அதற்குத் தலைவன், 'சாலைகளிலும் வேலியோரங்களிலும் போய் என் வீடு நிறையும்படி மக்களை வற்புறுத்திக் கூட்டிவா.
|
24. அழைக்கப்பெற்றவர்களுள் எவனும் என் விருந்தைச் சுவைக்கமாட்டான் என உங்களுக்குச் சொல்லுகிறேன்' என்றான்."
|
26. "என்னிடம் வருகிறவன் தன் தந்தை, தாய், மனைவி, மக்கள், சகோதரர் சகோதரிகளையும், ஏன், தன் உயிரையுமே வெறுக்காவிட்டால் என் சீடனாயிருக்க முடியாது.
|
28. " உங்களுள் யாராவது கோபுரங்கட்ட விரும்பினால் வேலையை முடிக்கத் தன்னால் முடியுமாவென்று பார்ப்பதற்கு, முதலில் உட்கார்ந்து, வேண்டிய செலவைக் கணிக்க மாட்டானா?
|
31. அல்லது, ஓர் அரசன் மற்றோர் அரசன் மேல் போர்தொடுக்கப் போகுமுன், இருபதாயிரம் பேருடன் தன்னை எதிர்த்து வருபவனை பத்தாயிரம் பேருடன் எதிர்க்க முடியுமோ என்று, முதலில் அமர்ந்து ஆராய்ந்து பார்க்க மாட்டானா?
|
32. எதிர்க்க முடியாதெனில், அவன் இன்னும் தொலைவிலிருக்கும்பொழுதே தூதுவிடுத்து, சமாதானத்திற்கு ஆவன கோருவான்.
|
35. நிலத்திற்கோ எருக்குழிக்கோ பயனற்றது. வெளியில்தான் கொட்டப்படும். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும்."
|