1. அவ்வேளையில் சிலர் அவரிடம் வந்து, பிலாத்து கலிலேயரின் இரத்தத்தை அவர்களுடைய பலியோடு கலந்தார் என்ற செய்தியை அறிவித்தனர்.
|
2. அவர் மறுமொழியாக, "இக்கலிலேயர் இத்தகைய சாவுக்கு உள்ளானார்கள் என்பதால், மற்றெல்லாக்கலிலேயரையும் விட இவர்கள் பாவிகள் என்று கருதுகிறீர்களா?
|
3. அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில் நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்.
|
4. சிலோவாமில் கோபுரம் விழுந்து பதினெட்டுப் பேரைக் கொன்றதே; அவர்கள் யெருசலேமில் வாழ்ந்த மற்றெல்லாரையும்விடக் குற்றவாளிகள் என்று கருதுகிறீர்களா?
|
5. அப்படியன்று என, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். மனந்திரும்பாவிடில், நீங்கள் எல்லோரும் அவ்வாறு அழிவீர்கள்" என்றார்.
|
6. மேலும் அவர் இந்த உவமையைக் கூறினார்; "ஒருவன் தன் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டுவைத்திருந்தான். அவன் வந்து அதிலே பழம் தேடியபொழுது ஒன்றுங்காணவில்லை.
|
7. ஆகவே, தோட்டக்காரனிடம், 'மூன்று ஆண்டுகளாக வந்து, இந்த அத்திமரத்திலே பழம் தேடுகிறேன். ஒன்றும் காணவில்லை. இதை வெட்டிவிடு. ஏன் வீணாக இடத்தை அடைத்துக்கொண்டிருக்கிறது?' என்றான்.
|
11. பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.
|
12. அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.
|
14. இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
|
15. ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
|
16. ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.
|
17. என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.
|
19. அது கடுகுமணிக்கு ஒப்பாகும். ஒருவன் அதை எடுத்துத் தன் தோட்டத்திலே விதைக்கிறான். அது வளர்ந்து பெரிய மரமாயிற்று. வானத்துப் பறவைகளும் அதனுடைய கிளைகளில் வந்து தங்குகின்றன" என்றார்.
|
21. அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். அதைப் பெண் ஒருத்தி எடுத்து மூன்றுபடி மாவில் பொதிந்துவைக்கிறாள். மாவு முழுவதும் புளிப்பேறுகிறது."
|
23. ஒருவன் அவரைப் பார்த்து, "ஆண்டவரே, மீட்புப்பெறுபவர் சிலர்தாமோ?" என்று கேட்க, அவர் மக்களுக்குக் கூறியது:
|
24. "ஒடுக்கமான வாயில்வழியே நுழையப் பாடுபடுங்கள். ஏனெனில், பலர் நுழைய முயன்றும் முடியாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
|
25. வீட்டுத் தலைவர் எழுந்து கதவைத் தாளிட, நீங்கள் வெளியே நின்று கதவைத் தட்டிக்கொண்டே, 'ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்பீர்கள். அதற்கு அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன்' என்று கூறுவார்.
|
26. பின்பு நீங்கள், 'உம்முடன் உண்டோம், குடித்தோம்; நீரும் எங்கள் தெருக்களில் போதித்தீரே' என்று சொல்லுவீர்கள்.
|
27. ஆனால், அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ, யானறியேன். அநீதிபுரியும் அனைவரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்' என்பார்.
|
28. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபும், இன்னும் எல்லா இறைவாக்கினர்களும் கடவுளின் அரசில் இருப்பதையும், நீங்கள் புறம்பே தள்ளப்படுவதையும் காணும்போது, புலம்பலும் பற்கடிப்பும் இருக்கும்.
|
29. கிழக்கிலும் மேற்கிலும், வடக்கிலும் தெற்கிலும் இருந்து மக்கள் வந்து கடவுளின் அரசில் பந்தி அமர்வார்கள்.
|
31. அந்நேரத்தில் பரிசேயர் சிலர் அவரிடம் வந்து, "இங்கிருந்து போய்விடும். ஏரோது உம்மைக் கொல்ல வேண்டுமென்றிருக்கிறான்" என்றனர்.
|
32. அதற்கு அவர், "நீங்கள் போய் அந்தக் குள்ளநரியிடம் இதை அறிவியுங்கள்: 'இன்றும் நாளையும் போய் ஓட்டுகிறேன். நோய்களையும் குணமாக்குகிறேன். மூன்றாம் நாள் முடிவடைவேன்.
|
33. ஆயினும், இன்றும் நாளையும் அடுத்த நாளும் நான் என்வழியே செல்ல வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் யெருசலேமுக்கு வெளியே மடிவது முறையாகாதே! '
|
34. "யெருசலேமே, இறைவாக்கினர்களைக் கொன்று, உன்னிடம் அனுப்பப்பட்டோரையும் கல்லால் எறியும் யெருசலேமே, கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் ஒன்றுசேர்ப்பதுபோல, நானும் உன் மக்களை ஒன்றுசேர்க்க எத்தனையோ முறை விரும்பினேன்! நீயோ உடன்படவில்லை.
|
35. இதோ! உங்கள் வீடு குடியற்றுப்போகும். 'ஆண்டவருடைய பெயரால் வருகிறவர் வாழி' என்று நீங்கள் கூறும் நாள்வரை என்னைக் காண மாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
|