1. அப்போது ஒருவரையொருவர் மிதித்துக்கொண்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்கையில், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "பரிசேயரின் வெளிவேடமாகிய புளிப்பு மாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.
|
3. ஆதலின், நீங்கள் இருளில் கூறியதெல்லாம் ஒளியில் கேட்கப்படும். அறைகளில் காதோடு காதாய்ப் பேசியது கூரைமீதிருந்து அறிவிக்கப்படும்.
|
4. " என் நண்பர்களாகிய உங்களுக்குச் சொல்லுகிறேன்: உடலைக் கொன்றபின் அதற்குமேல் ஒன்றும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
|
5. யாருக்கு அஞ்சவேண்டும் என்று உங்களுக்குக் காண்பிப்பேன். கொன்றபின் நரகத்தில் வீழ்த்தவும் வல்லவருக்கு அஞ்சுங்கள். ஆம், அவருக்கே அஞ்சுங்கள் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.
|
6. இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா? அவற்றில் ஒன்றும் கடவுள் முன்னிலையில் மறக்கப்படுவதில்லையே!
|
7. ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்.
|
8. " நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனிதர்முன் என்னை வெளிப்படையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ, அவனை மனுமகனும் கடவுளின் தூதர்கள்முன் வெளிப்படையாக ஏற்றுக்கொள்வார்.
|
10. " மனுமகனுக்கு எதிராய்ப் பேசுகிறவன் எவனும் மன்னிப்புப்பெறுவான் ஆனால், பரிசுத்த ஆவியைப் பழிப்பவனோ மன்னிப்புப்பெறான்.
|
11. "செபக்கூடங்களுக்கும், ஆள்வோர்முன்னும் அதிகாரிகள்முன்னும், உங்களைக் கூட்டிக்கொண்டு போகும்போது, எப்படிப் பதில் சொல்வது, என்ன பதில் அளிப்பது, என்ன பேசுவது என்று கவலைப்பட வேண்டாம்.
|
13. அப்போது, கூட்டத்தில் ஒருவன், "போதகரே, என் சகோதரன் என்னுடன் சொத்தைப் பங்கிட்டுக்கொள்ளுமாறு சொல்லும்" என்றான்.
|
15. பின் மக்களைப் பார்த்து, "எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில், ஒருவனுக்கு எவ்வளவு தானிருந்தாலும் செல்வப்பெருக்கினால் வாழ்வு. வந்துவிடாது" என்றார்.
|
18. 'சரி, என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன். அங்கு என் உடைமை, கோதுமை எல்லாம் சேர்த்துவைத்து:
|
19. நெஞ்சே, பல்லாண்டுகளுக்கு வேண்டிய பொருள் உனக்கு ஏராளமாய் உள்ளது. இளைப்பாறு; உண்டு குடித்து, விருந்தாடு என்று சொல்லிக்கொள்வேன்' என்றான்.
|
20. ஆனால் கடவுள், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிரைவாங்கப் போகிறார்கள். நீ தேடி வைத்தது யாருக்குக் கிடைக்குமோ?' என்றார்.
|
22. பின்னர், அவர் தம் சீடருக்குக் கூறியதாவது: "ஆதலால் உங்களுக்குச் சொல்லுகிறேன்: உயிர் வாழ எதை உண்பதென்றோ, உடலை மூட எதை உடுப்பதென்றோ கவலைப்பட வேண்டாம்.
|
24. காக்கைகளைக் கவனியுங்கள். அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை. அவற்றிற்குக் குதிருமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுளே அவற்றிற்கு உணவளிக்கிறார். பறவைகளைவிட நீங்கள் எவ்வளவோ மேலானவர்கள்.
|
27. காட்டுமலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனியுங்கள். அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. ஆயினும் சாலொமோன்கூடத் தம் மாட்சியிலெல்லாம் இவற்றுள் ஒன்ரறப்போல் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
|
28. குறைவான விசுவாசம் உள்ளவர்களே, வயலில் இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் புல்லைக் கடவுள் இவ்வாறு உடுத்துவாரானால், உங்களுக்கு எவ்வளவுதான் செய்யமாட்டார்?
|
30. ஏனெனில், உலகத்தில் புறவினத்தார்தாம் இவையெல்லாம் தேடியலைவர். இவை உங்களுக்குத் தேவை என்று உங்கள் தந்தைக்குத் தெரியும்.
|
32. "சிறு மந்தையே, அஞ்சாதே; ஏனெனில், உங்கள் தந்தை தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்.
|
33. "உங்கள் உடைமைகளை விற்றுப் பிச்சையிடுங்கள். இற்றுப்போகாத பணப்பைகளையும், வானகத்தில் குறையாத செல்வத்தையும் தேடிக்கொள்ளுங்கள். அங்கே திருடன் அண்டுவதில்லை, பூச்சி அரிப்பதுமில்லை.
|
36. திருமணவிருந்துக்குப் போன தம் தலைவன், எப்பொழுது வருவானோ என்று காத்திருக்கிறவர்களைப்போல, நீங்களும் இருங்கள். அவன் வந்து தட்டியவுடனே திறக்க வேண்டுமென்றோ?
|
37. எவ்வூழியர் விழித்திருக்கக் காண்பானோ, அவ்வூழியர் பேறுபெற்றவர். உறுதியாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்: அவன் இடுப்பில் வரிந்துகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிலமர்த்தி, ஒவ்வொருவனையும் அணுகி அவர்களுக்குப் பணிவிடை புரிவான்.
|
38. அவன் இரண்டாம் சாமத்தில் வந்தாலும், மூன்றாம் சாமத்தில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருக்கக் கண்டால், அவ்வூழியர்கள் பேறுபெற்றவர்கள்.
|
39. திருடன் இன்ன சாமத்தில் வருவான் என்று வீட்டுத்தலைவனுக்குத் தெரிந்தால், வீட்டில் கன்னம்வைக்க விடமாட்டானன்றோ?
|
42. ஆண்டவர் கூறியதாவது: "தக்க காலத்தில் தன் வேலையாட்களுக்குப் படியளக்க, தலைவன் ஏற்படுத்திய நம்பிக்கையும் விவேகமும் உள்ள கண்கானிப்பாளன் யார் ?
|
45. ஆனால், 'என் தலைவர் வரக் காலந்தாழ்த்துகிறார்' என்று அவ்வூழியன் தனக்குள் சொல்லிக்கொண்டு, வேலைக்காரர் வேலைக்காரிகளை அடித்து, மயக்கமுற உண்டு குடிக்கத் தொடங்கினால்,
|
46. அவ்வூழியன் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் தலைவன் வந்து அவனை நீக்கிவிட்டு, விசுவாசமற்றவர் கதிக்கு அவனை உள்ளாக்குவான்.
|
47. "தன் தலைவனின் விருப்பத்தை அறிந்திருந்தும், முன்னேற்பாடு செய்யாமலும், அவனது விருப்பத்தின்படி நடவாமலும், இருந்த ஊழியன் நன்றாய் அடிபடுவான்.
|
48. அவன் விருப்பத்தை அறியாமல் தண்டனைக் குரியவற்றைச் செய்பவனோ கொஞ்சம் அடிபடுவான். எவனுக்கு அதிகம் அளிக்கப்பட்டதோ அவனிடம் அதிகம் எதிர்பார்க்கப்படும். எவனிடம் அதிகம் ஒப்படைத்தார்களோ அவனிடம் இன்னும் அதிகமாய்க் கேட்பார்கள்.
|
51. நான் மண்ணுலகிற்குச் சமாதானத்தை அளிக்க வந்தேனென்றா எண்ணுகிறீர்கள்? இல்லை, பிரிவினை உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.
|
52. இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் மூவர் இருவருக்கு எதிராகவும், இருவர் மூவருக்கு எதிராகவும் பிரிந்திருப்பர்.
|
53. தகப்பன் மகனுக்கும், மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும், மருமகள் மாமிக்கும் எதிராகப் பிரிக்கப்படுவர்."
|
54. அவர் கூட்டத்தை நோக்கி, "மேற்கிலிருந்து மேகம் எழும்புவதை நீங்கள் பார்த்ததும் மழை வரும் என்கிறீர்கள். அப்படியே நடக்கிறது.
|
55. தெற்கிலிருந்து காற்று அடிப்பதைப் பார்க்கும்பொழுது மிகுந்த வெப்பம் உண்டாகும் என்கிறீர்கள். அதுவும் அப்படியே நடக்கிறது.
|
56. வெளிவேடக்காரரே, வானின் தோற்றத்தையும் பூமியின் தோற்றத்தையும் உய்த்துணர நீங்கள் அறிந்திருந்தும், இக்காலத்தை நீங்கள் உய்த்துணராமல் இருப்பது எப்படி?
|
58. நீ உன் எதிரியோடு அதிகாரியிடம் செல்லும்போது, வழியிலேயே வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய். இல்லையேல், அவன் உன்னை நீதிபதியிடம் இழுத்துக்கொண்டு போக, நீதிபதி உன்னைச் சேவகனிடம் கையளிக்கக்கூடும். சேவகன் உன்னைச் சிறையில் அடைக்க நேரிடும்.
|
59. கடைசிக் காசைத் திருப்பிக் கொடுக்குமளவும், அங்கிருந்து நீ வெளியேறமாட்டாய் என உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
|