1. இதற்குப்பின், ஆண்டவர் வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் அவர்களை இருவர் இருவராகத் தமக்குமுன்னால் அனுப்பினார்.
|
2. அப்போது அவர்களைப் பார்த்துக் கூறினதாவது: "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு ஆதலால் தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்.
|
4. பணப்பையோ கைப்பையோ மிதியடியோ எதுவும் எடுத்துச் செல்லவேண்டாம். வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்தவேண்டாம்.
|
6. சமாதானத்துக்குரியவன்அங்கு இருந்தால், உங்கள் சமாதானம் அவனிடம் தங்கும்; இல்லையேல் உங்களிடம் திரும்பிவிடும்.
|
7. அவர்களிடம் உள்ளதை உண்டு குடித்து அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில், வேலையாள் கூலிக்கு உரிமை உடையவன். வீடு வீடாய்ச் செல்லவேண்டாம்.
|
9. அங்குள்ள பணியாளரைக் குணமாக்கி, கடவுளின் அரசு உங்களை நெருங்கியுள்ளது' என்று மக்களுக்குத் தெரிவியுங்கள்.
|
11. 'எங்கள் காலில் ஒட்டிய உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிப்போடுகிறோம்; இருப்பினும் கடவுளின் அரசு நெருங்கியுள்ளது என்று அறிந்துகொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள்.
|
12. அந்நாளில் சோதோமுக்கு நேரிடுவது அவ்வூருக்கு நேரிடுவதைப்போல் அவ்வளவு கடினமாயிராது என உங்களுக்குக் கூறுகிறேன்.
|
13. " கொராசின் நகரே, உனக்கு ஐயோ கேடு! பெத்சாயிதா நகரே, உனக்கு ஐயோ கேடு! ஏனெனில், உங்களிடம் செய்த புதுமைகள் தீர், சீதோனில் செய்யப்பட்டிருப்பின், முன்பே கோணி உடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பர்.
|
16. " உங்களுக்குச் செவிசாய்ப்பவன் எனக்குச் செவிசாய்க்கிறான். உங்களைப் புறக்கணிப்பவன் என்னைப் புறக்கணிக்கிறான். என்னைப் புறக்கணிப்பவனோ என்னை அனுப்பினவரையே புறக்கணிக்கிறான்."
|
17. பின்பு, எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் வந்து, "ஆண்டவரே, உம் பெயரால் பேய்கள்கூட எங்களுக்கு அடங்குகின்றன" என்றனர்.
|
19. இதோ! பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வலிமையை வெல்லவும் உங்களுக்கு வல்லமை அளித்தேன்.
|
20. எதுவும் உங்களுக்குத் தீங்கு இழைக்காது. ஆயினும் ஆவிகள் உங்களுக்கு அடங்கி இருக்கின்றன என்று மகிழவேண்டாம். ஆனால் உங்கள் பெயர் வானகத்தில் எழுதியுள்ளது என்றே மகிழுங்கள்" என்றார்.
|
21. அந்நேரத்தில் இயேசு பரிசுத்த ஆவியினால் அக்களிப்புற்றுக் கூறியதாவது: " தந்தையே, விண்ணிற்கும் மண்ணிற்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும் விவேகிகளுக்கும் இவற்றை மறைத்துச் சிறுவருக்கு வெளிப்படுத்தியதால் உம்மைப் புகழ்கிறேன். ஆம், தந்தாய், இதுவே உமது திருவுள்ம்.
|
22. என் தந்தை எல்லாவற்றையும் எனக்குக் கையளித்துள்ளார். மகன் யாரென்று தந்தையன்றி வேறெவனும் அறியான். தந்தை யாரென்று மகனும், மகன் எவனுக்கு வெளிப்படுத்துவாரோ அவனுமன்றி வேறெவனும் அறியான்."
|
23. அவர் தம் சீடர்பக்கம் திரும்பி அவர்களுக்கு மட்டும் தனிமையாகக் கூறியதாவது: "நீங்கள் காண்பதைக் காணும் கண்கள் பேறுபெற்றவை.
|
24. ஏனெனில், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: இறைவாக்கினர், அரசர் பலர் நீங்கள் காண்பதைக் காணவிரும்பியும் காணவில்லை. நீங்கள் கேட்பதைக் கேட்கவிரும்பியும் கேட்கவில்லை."
|
25. சட்ட வல்லுநர் ஒருவர் எழுந்து அவரைச் சோதிக்க, "போதகரே, முடிவில்லாத வாழ்வு பெற, நான் செய்யவேண்டிய தென்ன?" என்று வினவினார்.
|
27. அவர் மறுமொழியாக, "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு உன் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு வலிமையோடும் முழு மனத்தோடும் அன்புசெய்வாயாக. உன்மீது நீ அன்புகாட்டுவதுபோல், உன் அயலான்மீதும் நீ அன்புகாட்டுவாயாக" என்றார்.
|
29. அவர், தாம் கேட்டது சரியான கேள்வி என்று காட்ட விரும்பி, " என் அயலான் யார்?" என்று இயேசுவை வினவினார்.
|
30. அதற்கு இயேசு, "யெருசலேமிலிருந்து யெரிக்கோவுக்கு ஒருவன் இறங்கிச் செல்லுகையில், கள்வர்கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் ஆடைகளைப் பறித்துக்கொண்டு அவனைக் காயப்படுத்திக் குற்றுயிராய் விட்டுச் சென்றார்கள்.
|
33. ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அவனருகில் வந்து, அவனைக் கண்டு, மனமிரங்கினான்.
|
34. அவனை அணுகி எண்ணெயும் திராட்சை இரசமும் வார்த்து, அவன் காயங்களைக் கட்டித் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவனைக் கண்காணித்தான்.
|
35. மறுநாள் இரு வெள்ளிக்காசுகளை எடுத்துச் சாவடிக்காரனிடம் கொடுத்து, 'இவனைக் கண்காணித்துக் கொள். இதற்குமேல் செலவானால் திரும்பி வரும்போது கொடுத்துவிடுவேன்' என்றான்.
|
37. அதற்கு அவர், "அவனுக்கு இரக்கம் காட்டியவன்தான்" என்றார். இயேசு, " நீரும் போய் அவ்வாறே செய்யும்" என்று கூறினார்.
|
38. அவர்கள் போகும்பொழுது ஓர் ஊருக்குள் வர, மார்த்தாள் என்னும் பெண் ஒருத்தி தன் வீட்டில் அவரை வரவேற்றாள்.
|
39. அவளுக்கு மரியாள் என்னும் சகோதரி இருந்தாள். அவள் ஆண்டவருடைய காலடியில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
|
40. மார்த்தாளோ பலவகையாய்ப் பணிவிடை புரிவதில் பரபரப்பாயிருந்தாள். அவள் வந்து, "ஆண்டவரே, நான் உமக்குப் பணிபுரிய என் சகோதரி என்னைத் தனியே விட்டுவிட்டாளே, உமக்குக் கவலையில்லையா ? எனக்கு உதவி செய்யும்படி அவளுக்குச் சொல்லும்" என்றாள்.
|
42. ஆனால், தேவையானது ஒன்றே. மரியாள் நல்ல பங்கைத் தேர்ந்துகொண்டாள். அது அவளிடமிருந்து எடுக்கப்படாது " என்றார்.
|