2. நீ ஆரோனையும் அவன் புதல்வர்களையும் வரவழைத்து, அவர்களுடைய ஆடைகளையும், அபிசேகத் தைலத்தையும், பாவ நிவாரணப் பலிக்கு ஓர் இளங்காளையையும் இரண்டு ஆட்டுக் கிடாய்களையும், ஒரு கூடையில் புளியாத அப்பங்களையும் கொண்டு வந்து,
|
4. மோயீசன் ஆண்டவர் கட்டளையின்படியே செய்தார். கூடார வாயிலின் முன் சபையார் எல்லாரும் கூடியிருக்கையில்,
|
7. தலைமைக் குருவுக்கு மெல்லிய சணல் நூலால் நெய்யப்பட்ட உள்ளங்கியை அணிவித்து, இடைக்கச்சை கட்டி நீல மேலங்கியை அவர்மேல் இட்டு, அதன்மேல் ஏப்போத்தைத் தரித்து,
|
8. அதனோடு மார்புப்பதக்கத்தைச் சரிப்படுத்திக் கச்சையால் கட்டின பின்பு, நெஞ்சாபரணத்தையும் அணிவித்தார். இதிலே கோட்பாடு, உண்மை எனும் இரு வார்த்தைகள் எழுதப் பட்டிருந்தன.
|
9. அன்றியும், அவன் தலையின் மேல் முடியை அணிவித்த பின், ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி, அபிசேகத் தைலத்தினால் அருச்சனை செய்யப்பட்ட பொன் தகட்டையும் அவன் நெற்றிக்கு நேரே கட்டினார்.
|
10. பிறகு ( மோயீசன் ) அபிசேகத் தைலத்தை எடுத்து, உறைவிடத்திலும் அதிலுள்ள எல்லாத் தட்டுமுட்டுக்களிலும் பூசினார்.
|
11. ஏழுமுறை தெளித்துப் பலிபீடத்தை அருச்சனை செய்த பின், அதையும், அதைச் சார்ந்த எல்லாப் பாத்திரங்களையும் தொட்டியையும், அதன் பாதத்தையும் அபிசேகத் தைலம் ஊற்றித் தடவி அருச்சித்தார்.
|
13. மேலும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, அவர் புதல்வர்களையும் வரவழைத்து அவர்களுக்கு மெல்லிய சணல் நூலால் செய்த அங்கிகளை அணிவித்து, கச்சைகளைக் கட்டி முடிகளையும் அணிவித்தார்.
|
14. அதன்பின் பாவப் பரிகாரத்துக்கான இளங்காளையை ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மீது தங்கள் கைகளை வைத்த பின்,
|
15. மோயீசன் அதை வெட்டி இரத்தத்தை எடுத்து, அதில் தோய்த்த விரலால் பீடக் கொம்புகளைச் சுற்றிலும் தடவிப் பரிகாரம் செய்து அருச்சித்து, மீதியான இரத்தத்தை அதன் அடியில் ஊற்றினார்.
|
16. பின் குடல்களின் மேலிருந்த கொழுப்பையும், கல்லீரலின் சவ்வையும், இரண்டு சிறுநீரகங்களையும், அவற்றிலுள்ள கொழுப்புக்களையும் பீடத்தின் மேல் எரித்தார்.
|
17. இளங்காளையைத் தோலோடும் இறைச்சியோடும் சாணியோடும், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி, பாளையத்திற்கு வெளியே சுட்டெரித்தார்.
|
18. மேலும் ஒர் ஆட்டுக்கிடாயையும் தகனப்பலியாகச் செலுத்தினார். அதன் தலையின்மேல் ஆரோனும் அவர் புதல்வர்களும் தங்கள் கைகளை வைத்தபின் அவர் அதை வெட்டி,
|
20. பிறகு அந்த ஆட்டுக் கிடாயையும் துண்டு துண்டாய் வெட்டி, அதன் தலையையும் உறுப்புக்களையும் கொழுப்பையும் நெருப்பில் சுட்டெரித்தார்.
|
21. அதன்பின் குடல்களையும் கால்களையும் தண்ணீரால் கழுவியெடுத்து, ஆட்டுக்கிடாய் முழுவதையும் மோயீசன் பீடத்தின்மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அது ஆண்டவருக்கு மிக்க நறுமணமுள்ள தகனப்பலியாம். இவையெல்லாம் ஆண்டவர் தனக்குக் கட்டளையிட்டிருந்தபடி மோயீசன் செய்து முடித்தார்.
|
22. பின்னர் குருக்களின் அபிசேகத்திற்காக மற்றொரு ஆட்டுக் கிடாயையும் ஒப்புக்கொடுத்தார். ஆரோனும் அவர் புதல்வர்களும் அதன் தலை மேல் தங்கள் கைகளை வைத்தனர்.
|
23. மோயீசன் அதை வெட்டி, அதன் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆரோனின் வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் தடவினார்.
|
24. பிறகு ஆரோனின் புதல்வரையும் அழைத்து, அவர்களுடைய வலக்காதின் மடலிலும் வலக் கை கால்களின் பெருவிரலிலும் பலியிடப்பட்ட ஆட்டுக்கிடாயின் இரத்தத்தைப் பூசி, எஞ்சிய இரத்தத்தைப் பீடத்தின் மேல் சுற்றிலும் வார்த்தார்.
|
25. ஆனால் கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய கொழுப்பு முழுவதையும், கல்லீரலின் மேலுள்ள சவ்வையும், இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் கொழுப்பையும், வலது முன்னந் தொடையையும் பிரித்தெடுத்தார்.
|
26. அப்போது ஆண்டவர் திருமுன் இருந்த கூடையினின்று புளியாத ஓர் அப்பத்தையும், எண்ணெய் தெளிக்கப்பட்ட ஒரு பலகாரத்தையும், ஒரு பணியாரத்தையும் எடுத்து அவற்றைக் கொழுப்புக்களின் மேலும் வலது முன்னந் தொடையின் மேலும் வைத்து,
|
27. அவற்றையெல்லாம் ஒன்றாய் ஆரோனுடைய கையிலும் அவர் புதல்வர் கையிலும் வைத்தார். அவர்கள் அவைகளை ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின்,
|
28. மோயீசன் அவர்கள் கையிலிருந்து அவைகளை மீண்டும் வாங்கித் தகனப் பலிப்பீடத்தின் மேல் சுட்டெரித்தார். ஏனென்றால், அவை அபிசேகத்துக்கடுத்த காணிக்கையும் ஆண்டவருக்கு நறுமணமுள்ள நேர்ச்சைப் பலிகள்.
|
29. ஆட்டுக்கிடாயின் மார்க்கண்டத்தை எடுத்து ஆண்டவர் திருமுன் உயர்த்தின பின், ஆண்டவர் கட்டளையிட்டிருந்தபடி அதனை அபிசேகம் செய்யப்பட்ட கிடாயில் தனக்குரிய பங்காக எடுத்துக் கொண்டார்.
|
30. அன்றியும், அபிசேகத் தைலத்திலும் பலிப் பீடத்தின் மேலிருந்த இரத்தத்திலும் சிறிது எடுத்து, ஆரோன் மேலும், அவர் உடைகள் மீதும், அவர் புதல்வர்கள் மேலும், அவர்களுடைய உடைகள் மீதும் தெளித்தார்.
|
31. அவர்களை உடைகள் மூலமாய்ப் பரிசுத்தமாக்கின பின், அவர்களை நோக்கி: நீங்கள் அந்த இறைச்சியைக் கூடார வாயில் முன் சமைத்து, அங்கேயே அவற்றை உண்ணுங்கள்; கூடையில் வைக்கப்பட்டுள்ள அபிசேக அப்பங்களையும் உண்ணுங்கள். இப்படியே ஆண்டவர் என்னை நோக்கி: ஆரோனும் அவர் புதல்வர்களும் அவற்றை உண்ணட்டும்;
|
32. ஆனால், இறைச்சியிலும் அப்பங்களிலும் மீதியாய் இருப்பனவெல்லாம் நெருப்பிலே எரிக்கப்படும் என்று சொன்னார்.
|
33. அபிசேக நாட்கள் நிறைவு பெறுமட்டும், ஏழு நாட்களும் நீங்கள் கூடார வாயிலை விட்டு வெளியேறாதீர்கள். அபிசேகம் ஏழு நாளில் நிறைவு பெறும் (என்றார்).
|
35. மீண்டும்: நீங்கள் சாகாத படிக்கு இரவு பகலாய் ஆசாரக் கூடாரத்தில் தங்கியிருந்து ஆண்டவருக்குக் காவல் காக்கக் கடவீர்கள். ஏனென்றால், எனக்கு இவ்வாறு கட்டளையிடப்பட்டது ( என்றார் ).
|
36. ஆண்டவர் மோயீசன் மூலமாய்க் கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவர் புதல்வர்களும் நிறைவேற்றினர்.
|