2. நீ இஸ்ராயேல் மக்களுக்குச் சொல்லவேண்டியதாவது: செய்ய வேண்டாமென்று ஆண்டவர் கட்டளை இட்டவைகளில் ஒன்றைத் தெரியாமல் மீறி ஒருவன் பாவம் செய்யும் போது,
|
3. அல்லது அபிசேகம் செய்யப் பெற்ற ஒரு குரு பாவம் செய்து அதனால் மக்களையும் பாவத்திற்கு உட்படுத்தும் போது, அவன் தன் பாவத்திற்கு பரிகாரமாக மறுவற்ற ஒரு இளங்காளையை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பானாக.
|
4. ( எவ்வாறெனில் ) சாட்சியக் கூடாரவாயிலிலே ஆண்டவர் திருமுன் அதைக் கொணர்ந்து அதன் தலையின்மீது கையை வைத்து, அதைக் கொன்று ஆண்டவருக்குப் பலியிடுவான்.
|
6. அவ்விரத்தத்தில் விரலைத் தோய்த்து, அதைக் கொண்டு ஏழுமுறை ஆண்டவர் திருமுன் பரிசுத்த இடத்தின் திரைக்கெதிரே தெளிப்பான்.
|
7. மேலும், அவன் அதில் கொஞ்சம் எடுத்துச் சாட்சியக் கூடாரத்தின் உள்ளேயிருக்கும் ஆண்டவருக்கு மிக விருப்பமானதாகவும் நறுமணமுள்ளதாகவும் இருக்கும்படி பீடக் கொம்புகளின் மேல் பூசுவான். மீதியை எல்லாம் கூடார வாயிலிலுள்ள தகனப்பலி பீடத்தின் அடியில் ஊற்றிவிடக்கடவான்.
|
8. பிறகு அவன் பாவத்திற்குப் பரிகாரமாகச் செலுத்தப்படும் பலிப் பொருளின் கொழுப்பு முழுவதையும், குடல்களை மூடியிருக்கும் கொழுப்பையும், உள்ளே இருக்கிற எல்லாவற்றையும் எடுத்து,
|
9. இரண்டு சிறு நீரகங்களையும், அவற்றின் மேலிருக்கும் விலாவை அடுத்த சவ்வையும், சிறுநீரகங்களோடு இருக்கும் ஈரலின் கொழுப்பையும் எடுத்து,
|
10. சமாதானப்பலிக்குரிய காளைக்குச் செய்கிற வழக்கப்படி, அவற்றையெல்லாம் தகனப் பலிபீடத்தின் மேல் சுட்டெரிக்கக் கடவான்.
|
12. தலை, கால், குடல், சாணம், முதலிய மற்ற உடலுறுப்புக்களையும் பாளையத்திற்கு வெளியே சாம்பல் கொட்டுவதற்குக் குறிக்கப்பட்ட சுத்தமான இடத்திற்குக் கொண்டு போய், அவ்விடத்திலே விறகுக் கட்டைகளின் மேல் இட்டுச் சுட்டெரிக்கக் கடவான்.
|
14. பிறகு, தாங்கள் செய்தது பாவமென்று கண்டுபிடித்தால், அவர்கள் தங்கள் பாவப் பரிகாரமாக ஒரு இளங்காளையை ஒப்புக் கொடுக்க வேண்டும். அதற்காகக் கூடார வாயிலுக்கு அதைக் கொண்டு வரவேண்டும்.
|
15. அப்போது மக்களில் மூப்பர்கள் ஆண்டவர் திருமுன் அதன் தலை மீது கையை வைப்பார்கள். அந்த இளங்காளை ஆண்டவர் திருமுன் பலியிடப்பட்ட பின்,
|
16. அபிசேகம் செய்யப் பெற்ற குரு அதன் இரத்தத்தில் சிறிது எடுத்துச் சாட்சியக் கூடாரத்தினுள் கொண்டு வந்து,
|
18. பிறகு சாட்சியக் கூடாரத்திலே ஆண்டவர் திருமுன் அமைந்திருக்கும் பீடத்தின் கொம்புகளிலும் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, எஞ்சிய இரத்தத்தைச் சாட்சியக் கூடார வாயிலிலுள்ள தகனப் பீடத்தின் அடியில் ஊற்றி விடுவார்.
|
20. முன்பு செய்தது போலவே இந்தக் காளைக்கும் செய்து குரு அவர்களுக்காக வேண்டவே, ஆண்டவர், அவர்கள் மீது இரக்கம் கொள்வார்.
|
21. முன்பு செய்தது போலவே இக்காளையையும் பாளையத்திற்கு வெளியே கொண்டுபோய்ச் சுட்டெரிக்கக்கடவார். இவ்வாறு மக்களின் பாவத்திற்குப் பரிகாரம் செய்யப்படும்.
|
23. பின் தனது பாவத்தை அறிய வந்தால், மறுவற்ற வெள்ளாட்டுக்கிடாய் ஒன்றை ஆண்டவருக்குப் பலியாக ஒப்புக்கொடுத்து,
|
24. தனது கையை அதன் தலை மீது வைத்து அது பாவ விமோசனப் பலியாய் இருப்பதனால், ஆண்டவர் திருமுன் தகனப்பலியிடுவதற்குக் குறித்திருக்கும் இடத்திலே அதைப் பலியிடுவான்.
|
25. பின்னர் குரு பாவத்துக்கான பலிப்பொருளின் இரத்தத்திலே விரலைத் தோய்த்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் பாதத்திலே ஊற்றி விடுவார்.
|
26. கொழுப்பையோ, சமாதானப் பலிகளில் செய்யப்படுகிற வழக்கப்படி, (பீடத்தின்மீது ) சுட்டெரித்த பிறகு, குரு அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடவே அவன் மன்னிப்படைவான்.
|
27. நாட்டு மக்களில் யாரேனும் அறியாமையினால் ஆண்டவருடைய கட்டளைகளால் விலக்கப்பட்டவைகளில் யாதொன்றையும் மீறிப் பாவம் செய்தால்,
|
29. பாவப்பொறுத்தலுக்கான அந்தப் பலிமிருகத்தின் தலைமீது கையை வைத்து, அதைத் தகனப் பலியிடும் இடத்திலே வெட்டிக் கொல்லக்கடவான்.
|
30. குருவும் தம் விரலில் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலிபீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் அடியிலே ஊற்றிவிடுவார்.
|
31. சமாதானப் பலிகளில் செய்யப்படுவதுபோல்,( குரு ) கொழுப்பெல்லாம் எடுத்துக்கொண்டு போய்ப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு நறுமணமாய்ச் சுட்டெரித்து, அவனுக்காக மன்றாடுவார். அப்போது அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
|
33. அவன் அதன் தலைமீது தன் கையை வைத்துத் தகனப்பலி மிருகங்கள் கொல்லப்படும் இடத்திலே அதைக் கொல்லக்கடவான்.
|
34. குருவோ தம் விரலில் அதன் இரத்தத்தை எடுத்துத் தகனப் பலி பீடத்தின் கொம்புகளில் தடவி, எஞ்சிய இரத்தத்தை அதன் அடியில் ஊற்றி விடுவார்.
|
35. பிறகு, சமாதானப் பலியாக வெட்டப்படும் செம்மறிக் கிடாயிக்குச் செய்கிற வழக்கப்படி, அதனுடைய கொழுப்பெல்லாம் எடுத்துப் பீடத்தின் மீது ஆண்டவருக்கு உரித்தான தூபவகைகளாகச் சுட்டெரித்து, அவனுக்காகவும் அவன் பாவத்துக்காகவும் மன்றாடுவாராக. அதனால் அவனுக்கு மன்னிப்புக் கிடைக்கும்.
|