3. அவனுடைய உடலிலுள்ள மேக வெட்டை இடைவிடாது ஊறிக்கொண்டிருந்தாலும் அடைபட்டிருந்தாலும் அது அவனுக்குத் தீட்டாம்.
|
5. அவனது படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான் அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
6. அவன் உட்கார்ந்திருந்த இடத்திலே உட்கார்ந்தவனோ தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிக்கக்கடவான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
7. அவனது உடலைத் தொட்டிருப்பவனும் தன் ஆடைகளைத் தோய்த்துக் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
8. மேகவெட்டையுள்ள மனிதன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால் அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தண்ணீரில் குளிப்பான். அவன் மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
10. மேகவெட்டை உள்ளவனுக்குக் கீழ் இருந்தது எல்லாம் மாலைவரை தீட்டாயிருக்கும். அதில் எதையும் சுமந்தவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
11. அப்படிப்பட்ட நோயுள்ளவன் தன் கைகளைத் தண்ணீரில் கழுவுவதற்கு முன் மற்றொருவனைத் தொட்டிருப்பானாயின், அவன் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் தண்ணீரில் குளித்து மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
12. மேகவெட்டை உள்ளவன் தொட்ட மட்பாண்டம் உடைக்கப்பட வேண்டும். மரத்தினால் அமைந்த பாண்டமாயின் தண்ணீரில் கழுவப்படவேண்டும்.
|
13. அவ்வித நோயுடையவன் நலமடைந்தானாயின், தான் சுத்தமானபின் ஏழு நாட்களை எண்ணிவருவான். பின் ஊற்று நீரில் தன் ஆடைகளைத் தோய்த்துத் தானும் குளித்த பின் சுத்தமுள்ளவனாவான்.
|
14. எட்டாம் நாளிலோ அவன் இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக்குஞ்சுகளை எடுத்துக் கொண்டு, ஆண்டவர் திருமுன் சாட்சியக் கூடார வாயிலில் வந்து, அவற்றைக் குருவிடம் கொடுப்பான்.
|
15. குரு பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு ஒன்றையும் ஒப்புக்கொடுத்த பின் அந்த மேகவெட்டையுள்ளவன் அதினின்று சுத்தமடையும்படி ஆண்டவர் திருமுன் வேண்டக்கடவார்.
|
17. மேலும், அவன் அணிந்திருந்த ஆடையையும் தோலாடையையும் தண்ணீரில் தோய்ப்பான். அவையும் மாலைவரை தீட்டுள்ளனவாய் இருக்கும்.
|
21. அன்றியும், விலக்கமாய் இருக்கிற நாட்களில் அவள் எதன்மீது துங்குவாளோ அல்லது உட்காருவாளோ அவை தீட்டுப்பட்டவை.
|
22. அவளுடைய படுக்கையைத் தொட்டவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
23. அவள் உட்கார்ந்த ( மணைமுதலிய ) எப்பொருளையும் தொடுபவன் தன் ஆடைகளைத் தோய்த்து, தானும் நீராடி, மாலைவரை தீட்டுப்பட்டிருப்பான்.
|
24. மாதவிடாய்க் காலத்தில் அவளோடு படுத்த ஆடவன் எழுநாள் தீட்டுள்ளவனாய் இருப்பதுமன்றி, அவன் படுக்கும் எவ்விதப் படுக்கையும் தீட்டுப்படும்.
|
25. ஒரு பெண் விலக்கமாய் இருக்கவேண்டிய காலமல்லாமல் அவளுடைய இரத்தம் பலநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது காலத்திற்கு மிஞ்சி இரத்தம் வற்றிப் போகாமல் இருந்தால், அது கண்டிருக்கும் நாளெல்லாம் அந்தப் பெண் மாதவிடாய் விலக்கம் போல் விலகியிருக்கக்கடவாள்.
|
29. எட்டாம் நாளிலே தனக்காக இரண்டு காட்டுப்புறாக்களை அல்லது இரண்டு மாடப்புறாக் குஞ்சுகளைச் சாட்சியக் கூடார வாயிலிலே குருவிடம் கொண்டு வரக் கடவாள்.
|
30. அவர் பாவப் பரிகாரத்திற்கு ஒன்றையும் தகனப்பலிக்கு மற்றொன்றையும் ஒப்புக்கொடுத்து, ஆண்டவர் திருமுன் அவளுக்காகவும் அவளுடைய அசுத்த இரத்த ஊறலுக்காகவும் மன்றாடக் கடவார்.
|
31. ஆகையால், இஸ்ராயேல் மக்கள் அசுத்தத்திற்கு அஞ்சி, தங்கள் நடுவேயிருக்கும் நமது உறைவிடத்தை அசுத்தப்படுத்தியபின் தங்கள் அசுத்தங்களிலே சாகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்க வேண்டுமென்று அவர்களுக்கு அறிவுரை கூறக்கடவீர்கள்.
|
33. மாதவிடாயின் பொருட்டு விலக்காய் இருக்கிறவளுக்கும், அல்லது மித மிஞ்சின இரத்த ஊறல் உள்ளவளுக்கும், இப்படிப்பட்டவளோடு படுத்த ஆடவனுக்கும் ஏற்பட்ட சட்டம் இதுவே என்றார்
|