தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
லேவியராகமம்
1. மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2. ஒரு மனிதனுடைய தோலிலோ சதையிலோ வித்தியாசமான நிறமாவது கொப்புளமாவது ஒருவிதத் துலக்கமான வெண்படலமாவது உண்டானால், அது தொழுநோயென்று அறிந்து, அவனைக் குருவான ஆரோனிடமோ, அவர் புதல்வருள் எவனிடமோ கொண்டுவர வேண்டும்.
3. குரு அவனுடைய தோலிலே தொழுநோய் இருப்பதையும் மயிர்கள் வெண்ணிறமாய் மாறியிருப்பதையும் அந்தத் தொழுநோயின் தோற்றம் மற்றத்தோலையும் சதையையும் விடச் சற்றுப் பள்ளமாய் இருப்பதையும் கண்டால், அது தொழுநோய் என்று கூறுவார். அப்பொழுது அவருடைய தீர்ப்புக்கேற்றபடி அந்த நோயாளி தனியாய் வைக்கப்படுவான்.
4. அந்தத் துலக்கமான வெண்படலம் தோலில் இருந்தும், அவ்விடம் அவனுடைய தோலையும் சதையையும் விடப்பள்ளமாய் இராமலும் அதன் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், குரு அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
5. ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவார். அப்பொழுது நோய் அதிகப்படாமலும், முன்னைவிட அதிகமாய்த் தோலில் படராமலும் இருக்கக்கண்டால், குரு மீண்டும் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
6. ஏழாம் நாளில் அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். அப்போது அது சற்றுக் கருமையாகித் தோலில் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், அது சிரங்காகையால், அவனைச் சுத்தமானவன் என்று அனுப்பி விடுவார். அம்மனிதனோ தன் ஆடைகளைக் கழுவிச் சுத்தமாய் இருப்பான்.
7. ஆயினும், நோயாளி குருவினால் பரிசோதிக்கப்பட்டுச் சுத்தனென்று அனுப்பிவிடப்பட்ட பின், மறுபடியும் ( அவன் உடலிலே ) தொழுநோய் அதிகப்பட்டால், குருவிடம் அவன் மீண்டும் கொண்டுவரப்படுவான்.
8. அப்போது தீட்டுள்ளவனென்று தீர்ப்பிடப்படுவான்.
9. தொழுநோய் ஒரு மனிதனிடம் காணப்பட்டால், அவன் குருவிடம் கொண்டுவரப்படுவான்.
10. குரு அவனைப் பார்ப்பார். அப்பொழுது அவன் தோலிலே வெண்படலங்களும் இருந்து, மயிர் நிறமும் மாறி, சதையும் புண்ணுமாகத் தோன்றுமேயாயின்,
11. அது வெகு நாட்பட்ட நோயென்றும், சதையினுள் பழுத்துள்ளதென்றும் தீர்மானிக்கப்படும். குரு அவனைத் ( தீட்டுள்ளவனென்று ) தீர்ப்புச் சொல்வார். இருப்பினும், அவனுடைய தீட்டு வெளிப்படையானபடியால், அவனை அடைத்து வைக்கமாட்டார்.
12. ஆனால், தலைமுதல் பாதம்வரை உடல் முழுவதும் பூத்தது போல் தோன்றித் தோலிலே படர்ந்து உடல் முழுவதையும் மூடிய நோயானால்,
13. குரு அவனைப் பரிசோதித்த பின்னர் மகவும் சுத்தமான நோய் என்று தீர்க்கக்கடவார். உண்மையில் எங்கும் தோல் வெளுத்துப் போனபடியால் அவன் சுத்தமுள்ளவனே!
14. ஆனாலும், புண்ணுள்ள சதை அவனிடம் காணப்பட்டபோது,
15. குரு அவனைத் தீட்டுள்ளவனென்று எண்ணுவதனால், அவன் தீட்டுள்ளவனென்றே கருதப்படுவான். ஏனென்றால் தொழுநோய் பிடித்த புண்ணுள்ள சதை தீட்டாகும்.
16. புண்ணுள்ள சதை பிறகு மாறி வெள்ளையாகி உடல் முழுவதும் மூடினால்,
17. குரு அவனைப் பரிசோதித்துப் பார்த்த பின்பு, அவனைச் சுத்தனென்று தீர்க்கக்கடவார்.
18. ( ஒருவனுடைய ) உடலின் மேல் தோலிலும் சதையிலும் புண் இருந்து ஆறிப்போய்,
19. அவ்விடத்திலே வெள்ளைத் தழும்பு அல்லது சிவப்பும் வெள்ளையும் கலந்த தழும்பு காணப்பட்டால், அம்மனிதனைக் குருவிடம் கொண்டு வரவேண்டும்.
20. தொழுநோய் உள்ள அவ்விடம் மற்ற சதையை விடப் பள்ளமாய் இருக்கிறதென்றும், மயிர்கள் வெள்ளையாகிவிட்டன என்றும் ( குரு ) கண்டாராயின், அவனைத் தீட்டுள்ளவன் என்பார். ஏனென்றால் அது புண்ணில் உண்டான தொழுநோய்.
21. ஆனால், மயிர் தன் இயற்கை நிறத்தை உடையதும் தழும்பு மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையுள்ளதாகக் கண்டால், அவனை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
22. வெண்படலாம் அதிகப்பட்டிருந்தால், அது தொழுநோயே என்று முடிவாகச் சொல்வார்.
23. அது அதிகப்படாமல் அவ்வளவில் நின்றிருக்கக் கண்டாலோ, அது புண்ணின் தழும்பாம் என்று சொல்லி, குரு அவனைச் சுத்தமுள்ளவன் என்பார்.
24. (ஒருவனுடைய) உடலின்மேல் நெருப்புப் பட்டதனாலே புண்ணுண்டாகி அது ஆறிப்போய் அவ்விடத்திலே வெள்ளை அல்லது சிவப்பான தழும்பு உண்டாயிருந்தால், அதைக் குரு கவனித்து வரக்கடவார்.
25. அந்தப் புண் வெள்ளையாக மாறிப் போயிற்றென்றும், மற்றத் தோலைக் காட்டிலும் அவ்விடம் பள்ளமாயிருத்கிற தென்றும் கண்டால், குரு அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவு செய்வார். ஏனென்றால், அது தழும்பிலே உண்டான தொழுநோய் ஆகும்.
26. ஆனால், மயிர் நிறம் மாறாமலும் புண் இருக்கும் இடம் மற்றச் சதையைவிடக் குழிந்திராமலும், தழும்பு சிறிது கருமையாயுமிருக்குமாயின், குரு அவனை ஏழு நாள் அடைத்து வைத்து,
27. ஏழாம் நாளிலே அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். தொழுநோய் தோலிலே படர்ந்திருந்ததாயின் அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவாகச் சொல்வார்.
28. அவ்வாறின்றி, வெளுவெளுப்பான நிறம் முன் இருந்த அளவிலே நின்றதாயின், அது வேக்காடேயன்றி வேறொன்றுமில்லை. அதனால், குரு அது சூட்டினால் உண்டான தழும்பென்று, அந்த மனிதனைச் சுத்தமானவன் எனத் தீர்ப்புக் கூறுவார்.
29. ஓர் ஆடவனுக்கோ பெண்ணுக்கோ தலையிலேயாவது நாடியிலேயாவது தொழுநோய் காணப்பட்டால், குரு அதைப் பரிசோதிக்க வேண்டும்.
30. பார்க்கும்போது அவ்விடம் மற்றத் தோலை விடக் குழிந்திருக்கிறதென்றும், மயிர் பொன்னிறமாயும் மிருதுவாயும் இருக்கிறதென்றும் கண்டால் அப்படிப்பட்டவர்களைத் தீட்டுள்ளவரென முடிவாய்ச் சொல்வார். உண்மையில் அது தலையின் அல்லது நாடியின் தொழு நோயே.
31. ஆனால், வெண்படலத்தின் தோல் மற்றத் தோலின் மட்டத்தில் இருக்கிறதென்றும், மயிரின் இயற்கை நிறமே அதுதான் என்றும் கண்டால், ஏழு நாள் அவனை அடைத்து வைத்து,
32. ஏழாம் நாளிலே அவனைப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்த்து, வெண்படலம் (மேலும்) பரவவில்லை, மயிர் சுய நிறமுள்ளது, அவ்விடத்துத் தோலும் மற்றத் தோலும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன என்று குரு கண்டால்,
33. அந்தப்படலம் இருக்கும் இடம் நீங்கலாக மற்ற மயிரைச் சவரம் செய்வித்து, அவனை வேறு ஏழு நாள் அடைத்து வைத்து,
34. ஏழாம் நாளிலே அதைப் பரிசோதிக்க அப்படலம் முன்னிருந்த அளவிலேயே நின்றதென்றும், அவ்விடம் மற்றத் தோலை விடப் பள்ளமாய் இல்லையென்றும் கண்டால், குரு அவனைச் சுத்தமானவன் என்று கூறுவார். அவன் தன் ஆடைகளைத் தோய்த்த பின் சுத்தமாகவே இருப்பான்.
35. அவ்வாறின்றி, அவன் சுத்தனென்று தீர்க்கப்பட்ட பின் அப்படலம் தோலில் மேலும் படர்ந்ததாயின்,
36. அவன் சந்தேகமின்றித் தீட்டுள்ளவனாதலால், மயிர் பொன்னிறமானதோ அன்றோ என்று குரு விசாரிக்க வேண்டியதில்லை.
37. ஆனால், படலம் அதிகப்படவில்லை, மயிரோ கருப்பு என்று கண்டால், அந்த மனிதன் குணமடைந்துள்ளான் என்றறிந்து, குரு அவனைச் சுத்தமானவனென்று அச்சமின்றித் தீர்க்கக் கடவார்.
38. ஓர் ஆடவன் அல்லது ஒரு பெண்ணின் தோலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால்,
39. குரு அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்க்கையில், அவர்களுடைய தோலிலே ஏதோ மங்கின வெள்ளை போல் மினுக்கும் புள்ளிகள் தேன்றினவென்று கண்டால், அது வெள்ளைத்தோலே தவிரத் தொழுநோய் அன்று என்றும், அவர்கள் சுத்தமானவர்கள் என்றும் கண்டுபிடிக்கக்கடவார்.
40. ஒருவனுடைய தலை மயிர் உதிர்ந்து அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாய் இருக்கிறான்.
41. அப்படியே ஒருவனுடைய முன்னந்தலை மயிர்கள் உதிர்ந்து அவன் அரை மொட்டையனானாலும், அவன் சுத்தமானவன்.
42. ஆனால், முன்னந்தலையிலேனும், பின்னந்தலையிலேனும் அவனுடைய மொட்டையான பகுதியிலே வெள்ளை அல்லது செம்பட்டைப் படலம் உண்டானால்,
43. குரு அதைக் கண்டவுடன், அது சந்தேகமற மொட்டைத் தலையிலுண்டான தொழுநோயே என்று தீர்ப்புச் சொல்வார்.
44. ஆகையால், தொழுநோயாளியென்று குருக்களின் தீர்மானப்படி விலக்கப்பட்டிருக்கிறவன் தையல் பிரிக்கப்பட்ட ஆடை அணிந்து,
45. தன் தலையை மூடாமலும், ( யாரைக் கண்டாலும் ): தீட்டு, தீட்டு என ஓலமிடக்கடவான்.
46. அவனுக்குத் தொழுநோய் இருக்குமட்டும் அவன் அசுத்தனானதால், அவன் பாளையத்திற்கு வெளியே தனித்து வாழக்கடவான்.
47. கம்பளி ஆடையின் அல்லது மெல்லிய சணல் நூல் துணியின்,
48. பாவிலேனும் ஊடையிலேனும் தொழுநோய் தோன்றினால், குறிப்பாக, தோலிலும் தோலினால் செய்யப்பட்ட எவ்வகை உடையிலும் மேற்சொன்ன தீட்டு காணப்பட்டால்,
49. அப்படிப்பட்டவைகளில் வெள்ளை அல்லது செம்பட்டை நிறமுள்ள கறை தோன்றினால், அது தொழுநோயென்று கருதப்படவேண்டும். ஆதலால், அதனைக் குருவிடம் காண்பிக்க வேண்டும்.
50. இவர் அதைப் பரிசோதித்துப் பார்க்கக் கடவார். பின் அதை ஏழுநாள் அடைத்து வைப்பார்.
51. ஏழாம் நாள் திரும்பவும் அதைச் சோதித்துப் பார்க்கையில், கறை, மேலும் படர்ந்திருக்கக் கண்டால் அது தீராத்தொழுநோய் என்று கண்டு மேற்சொன்ன ஆடையும், முன்சொன்ன கறையுள்ள பொருளும் தீட்டுள்ளவை என்று குரு முடிவாய்ச் சொல்வார்.
52. இதன் பொருட்டு,
53. தீட்டுப்பட்ட அந்தப் பொருள் நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.
54. அப்படி இல்லாமல், கறை அதிகப்படவில்லை என்று குரு கண்டால், தொழுநோய் காணப்பட்ட ஆடையைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழு நாட்கள் அடைத்து வைப்பார்.
55. அப்பொழுது அதற்கு இயற்கையான நிறம் திரும்பிவராதிருந்த போதிலும், தொழுநோய் மேலும் பரவவில்லையென்று காண்பாராயின், மேற்சொன்ன பொருள் தீட்டாயிருக்கிறதென்று தீர்மானித்து, அதை நெருப்பில் சுட்டெரித்து விடுவார். ஏனென்றால், தொழுநோய் ஆடையின் வெளிப்புறத்திலேனும், உட்புறத்திலும் வெளிப்புறத்திலுமேனும் பரவியிருக்கிறது.
56. ஆனால், கழுவப்பட்ட பின் ஆடையிலுள்ள கறை சிறிது இருண்டதாகக் குரு கண்டால், தீட்டுப்பட்ட இடத்தை ஆடையில் இராதபடிக்குக் கத்தரித்தெடுத்து விடுவார்.
57. ஆனால், முன் சுத்தமாய் இருந்த இடங்களில் மீண்டும் இங்குமங்கும் நிலையற்ற ஒருவிதத் தொழுநோய் காணப்படுமாயின், ஆடை முழுவதுமே நெருப்புக்கு இரையாக்கப்படும்.
58. அந்தத் தீட்டு அதை விட்டுப் போய்விட்டால், சுத்தமான இடங்களை இரண்டாம் முறை கழுவுவார். அப்பொழுது அவை தீட்டில்லாமலே போய்விடும்.
59. ஆட்டுமயிர்களால் அல்லது மெல்லிய சணல் நூல்களால் நெய்யப்பட்ட அவ்வகைப் பொருட்களிலும் தொழுநோய் காணப்பட்டால், அது எப்படி சுத்தமாகும் அல்லது தீட்டுள்ளதாகும் என்பதற்கு இதுவே சட்டமாம் என்று ( ஆண்டவர் ) திருவுளம் பற்றினார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 27 Chapters, Current Chapter 13 of Total Chapters 27
லேவியராகமம் 13:51
1. மேலும், ஆண்டவர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:
2. ஒரு மனிதனுடைய தோலிலோ சதையிலோ வித்தியாசமான நிறமாவது கொப்புளமாவது ஒருவிதத் துலக்கமான வெண்படலமாவது உண்டானால், அது தொழுநோயென்று அறிந்து, அவனைக் குருவான ஆரோனிடமோ, அவர் புதல்வருள் எவனிடமோ கொண்டுவர வேண்டும்.
3. குரு அவனுடைய தோலிலே தொழுநோய் இருப்பதையும் மயிர்கள் வெண்ணிறமாய் மாறியிருப்பதையும் அந்தத் தொழுநோயின் தோற்றம் மற்றத்தோலையும் சதையையும் விடச் சற்றுப் பள்ளமாய் இருப்பதையும் கண்டால், அது தொழுநோய் என்று கூறுவார். அப்பொழுது அவருடைய தீர்ப்புக்கேற்றபடி அந்த நோயாளி தனியாய் வைக்கப்படுவான்.
4. அந்தத் துலக்கமான வெண்படலம் தோலில் இருந்தும், அவ்விடம் அவனுடைய தோலையும் சதையையும் விடப்பள்ளமாய் இராமலும் அதன் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், குரு அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
5. ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவார். அப்பொழுது நோய் அதிகப்படாமலும், முன்னைவிட அதிகமாய்த் தோலில் படராமலும் இருக்கக்கண்டால், குரு மீண்டும் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
6. ஏழாம் நாளில் அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். அப்போது அது சற்றுக் கருமையாகித் தோலில் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், அது சிரங்காகையால், அவனைச் சுத்தமானவன் என்று அனுப்பி விடுவார். அம்மனிதனோ தன் ஆடைகளைக் கழுவிச் சுத்தமாய் இருப்பான்.
7. ஆயினும், நோயாளி குருவினால் பரிசோதிக்கப்பட்டுச் சுத்தனென்று அனுப்பிவிடப்பட்ட பின், மறுபடியும் ( அவன் உடலிலே ) தொழுநோய் அதிகப்பட்டால், குருவிடம் அவன் மீண்டும் கொண்டுவரப்படுவான்.
8. அப்போது தீட்டுள்ளவனென்று தீர்ப்பிடப்படுவான்.
9. தொழுநோய் ஒரு மனிதனிடம் காணப்பட்டால், அவன் குருவிடம் கொண்டுவரப்படுவான்.
10. குரு அவனைப் பார்ப்பார். அப்பொழுது அவன் தோலிலே வெண்படலங்களும் இருந்து, மயிர் நிறமும் மாறி, சதையும் புண்ணுமாகத் தோன்றுமேயாயின்,
11. அது வெகு நாட்பட்ட நோயென்றும், சதையினுள் பழுத்துள்ளதென்றும் தீர்மானிக்கப்படும். குரு அவனைத் ( தீட்டுள்ளவனென்று ) தீர்ப்புச் சொல்வார். இருப்பினும், அவனுடைய தீட்டு வெளிப்படையானபடியால், அவனை அடைத்து வைக்கமாட்டார்.
12. ஆனால், தலைமுதல் பாதம்வரை உடல் முழுவதும் பூத்தது போல் தோன்றித் தோலிலே படர்ந்து உடல் முழுவதையும் மூடிய நோயானால்,
13. குரு அவனைப் பரிசோதித்த பின்னர் மகவும் சுத்தமான நோய் என்று தீர்க்கக்கடவார். உண்மையில் எங்கும் தோல் வெளுத்துப் போனபடியால் அவன் சுத்தமுள்ளவனே!
14. ஆனாலும், புண்ணுள்ள சதை அவனிடம் காணப்பட்டபோது,
15. குரு அவனைத் தீட்டுள்ளவனென்று எண்ணுவதனால், அவன் தீட்டுள்ளவனென்றே கருதப்படுவான். ஏனென்றால் தொழுநோய் பிடித்த புண்ணுள்ள சதை தீட்டாகும்.
16. புண்ணுள்ள சதை பிறகு மாறி வெள்ளையாகி உடல் முழுவதும் மூடினால்,
17. குரு அவனைப் பரிசோதித்துப் பார்த்த பின்பு, அவனைச் சுத்தனென்று தீர்க்கக்கடவார்.
18. ( ஒருவனுடைய ) உடலின் மேல் தோலிலும் சதையிலும் புண் இருந்து ஆறிப்போய்,
19. அவ்விடத்திலே வெள்ளைத் தழும்பு அல்லது சிவப்பும் வெள்ளையும் கலந்த தழும்பு காணப்பட்டால், அம்மனிதனைக் குருவிடம் கொண்டு வரவேண்டும்.
20. தொழுநோய் உள்ள அவ்விடம் மற்ற சதையை விடப் பள்ளமாய் இருக்கிறதென்றும், மயிர்கள் வெள்ளையாகிவிட்டன என்றும் ( குரு ) கண்டாராயின், அவனைத் தீட்டுள்ளவன் என்பார். ஏனென்றால் அது புண்ணில் உண்டான தொழுநோய்.
21. ஆனால், மயிர் தன் இயற்கை நிறத்தை உடையதும் தழும்பு மற்றத் தோலைவிடக் குழிந்திராமல் சற்றுக் கருமையுள்ளதாகக் கண்டால், அவனை ஏழு நாள் அடைத்து வைப்பார்.
22. வெண்படலாம் அதிகப்பட்டிருந்தால், அது தொழுநோயே என்று முடிவாகச் சொல்வார்.
23. அது அதிகப்படாமல் அவ்வளவில் நின்றிருக்கக் கண்டாலோ, அது புண்ணின் தழும்பாம் என்று சொல்லி, குரு அவனைச் சுத்தமுள்ளவன் என்பார்.
24. (ஒருவனுடைய) உடலின்மேல் நெருப்புப் பட்டதனாலே புண்ணுண்டாகி அது ஆறிப்போய் அவ்விடத்திலே வெள்ளை அல்லது சிவப்பான தழும்பு உண்டாயிருந்தால், அதைக் குரு கவனித்து வரக்கடவார்.
25. அந்தப் புண் வெள்ளையாக மாறிப் போயிற்றென்றும், மற்றத் தோலைக் காட்டிலும் அவ்விடம் பள்ளமாயிருத்கிற தென்றும் கண்டால், குரு அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவு செய்வார். ஏனென்றால், அது தழும்பிலே உண்டான தொழுநோய் ஆகும்.
26. ஆனால், மயிர் நிறம் மாறாமலும் புண் இருக்கும் இடம் மற்றச் சதையைவிடக் குழிந்திராமலும், தழும்பு சிறிது கருமையாயுமிருக்குமாயின், குரு அவனை ஏழு நாள் அடைத்து வைத்து,
27. ஏழாம் நாளிலே அவனைக் கவனித்துப் பார்க்கக்கடவார். தொழுநோய் தோலிலே படர்ந்திருந்ததாயின் அவனைத் தீட்டுள்ளவன் என்று முடிவாகச் சொல்வார்.
28. அவ்வாறின்றி, வெளுவெளுப்பான நிறம் முன் இருந்த அளவிலே நின்றதாயின், அது வேக்காடேயன்றி வேறொன்றுமில்லை. அதனால், குரு அது சூட்டினால் உண்டான தழும்பென்று, அந்த மனிதனைச் சுத்தமானவன் எனத் தீர்ப்புக் கூறுவார்.
29. ஓர் ஆடவனுக்கோ பெண்ணுக்கோ தலையிலேயாவது நாடியிலேயாவது தொழுநோய் காணப்பட்டால், குரு அதைப் பரிசோதிக்க வேண்டும்.
30. பார்க்கும்போது அவ்விடம் மற்றத் தோலை விடக் குழிந்திருக்கிறதென்றும், மயிர் பொன்னிறமாயும் மிருதுவாயும் இருக்கிறதென்றும் கண்டால் அப்படிப்பட்டவர்களைத் தீட்டுள்ளவரென முடிவாய்ச் சொல்வார். உண்மையில் அது தலையின் அல்லது நாடியின் தொழு நோயே.
31. ஆனால், வெண்படலத்தின் தோல் மற்றத் தோலின் மட்டத்தில் இருக்கிறதென்றும், மயிரின் இயற்கை நிறமே அதுதான் என்றும் கண்டால், ஏழு நாள் அவனை அடைத்து வைத்து,
32. ஏழாம் நாளிலே அவனைப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்த்து, வெண்படலம் (மேலும்) பரவவில்லை, மயிர் சுய நிறமுள்ளது, அவ்விடத்துத் தோலும் மற்றத் தோலும் ஒரே மட்டத்தில் இருக்கின்றன என்று குரு கண்டால்,
33. அந்தப்படலம் இருக்கும் இடம் நீங்கலாக மற்ற மயிரைச் சவரம் செய்வித்து, அவனை வேறு ஏழு நாள் அடைத்து வைத்து,
34. ஏழாம் நாளிலே அதைப் பரிசோதிக்க அப்படலம் முன்னிருந்த அளவிலேயே நின்றதென்றும், அவ்விடம் மற்றத் தோலை விடப் பள்ளமாய் இல்லையென்றும் கண்டால், குரு அவனைச் சுத்தமானவன் என்று கூறுவார். அவன் தன் ஆடைகளைத் தோய்த்த பின் சுத்தமாகவே இருப்பான்.
35. அவ்வாறின்றி, அவன் சுத்தனென்று தீர்க்கப்பட்ட பின் அப்படலம் தோலில் மேலும் படர்ந்ததாயின்,
36. அவன் சந்தேகமின்றித் தீட்டுள்ளவனாதலால், மயிர் பொன்னிறமானதோ அன்றோ என்று குரு விசாரிக்க வேண்டியதில்லை.
37. ஆனால், படலம் அதிகப்படவில்லை, மயிரோ கருப்பு என்று கண்டால், அந்த மனிதன் குணமடைந்துள்ளான் என்றறிந்து, குரு அவனைச் சுத்தமானவனென்று அச்சமின்றித் தீர்க்கக் கடவார்.
38. ஓர் ஆடவன் அல்லது ஒரு பெண்ணின் தோலில் வெள்ளைப் புள்ளிகள் காணப்பட்டால்,
39. குரு அவர்களைப் பரிசோதித்துப் பார்க்கக்கடவார். இப்படிப் பார்க்கையில், அவர்களுடைய தோலிலே ஏதோ மங்கின வெள்ளை போல் மினுக்கும் புள்ளிகள் தேன்றினவென்று கண்டால், அது வெள்ளைத்தோலே தவிரத் தொழுநோய் அன்று என்றும், அவர்கள் சுத்தமானவர்கள் என்றும் கண்டுபிடிக்கக்கடவார்.
40. ஒருவனுடைய தலை மயிர் உதிர்ந்து அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாய் இருக்கிறான்.
41. அப்படியே ஒருவனுடைய முன்னந்தலை மயிர்கள் உதிர்ந்து அவன் அரை மொட்டையனானாலும், அவன் சுத்தமானவன்.
42. ஆனால், முன்னந்தலையிலேனும், பின்னந்தலையிலேனும் அவனுடைய மொட்டையான பகுதியிலே வெள்ளை அல்லது செம்பட்டைப் படலம் உண்டானால்,
43. குரு அதைக் கண்டவுடன், அது சந்தேகமற மொட்டைத் தலையிலுண்டான தொழுநோயே என்று தீர்ப்புச் சொல்வார்.
44. ஆகையால், தொழுநோயாளியென்று குருக்களின் தீர்மானப்படி விலக்கப்பட்டிருக்கிறவன் தையல் பிரிக்கப்பட்ட ஆடை அணிந்து,
45. தன் தலையை மூடாமலும், ( யாரைக் கண்டாலும் ): தீட்டு, தீட்டு என ஓலமிடக்கடவான்.
46. அவனுக்குத் தொழுநோய் இருக்குமட்டும் அவன் அசுத்தனானதால், அவன் பாளையத்திற்கு வெளியே தனித்து வாழக்கடவான்.
47. கம்பளி ஆடையின் அல்லது மெல்லிய சணல் நூல் துணியின்,
48. பாவிலேனும் ஊடையிலேனும் தொழுநோய் தோன்றினால், குறிப்பாக, தோலிலும் தோலினால் செய்யப்பட்ட எவ்வகை உடையிலும் மேற்சொன்ன தீட்டு காணப்பட்டால்,
49. அப்படிப்பட்டவைகளில் வெள்ளை அல்லது செம்பட்டை நிறமுள்ள கறை தோன்றினால், அது தொழுநோயென்று கருதப்படவேண்டும். ஆதலால், அதனைக் குருவிடம் காண்பிக்க வேண்டும்.
50. இவர் அதைப் பரிசோதித்துப் பார்க்கக் கடவார். பின் அதை ஏழுநாள் அடைத்து வைப்பார்.
51. ஏழாம் நாள் திரும்பவும் அதைச் சோதித்துப் பார்க்கையில், கறை, மேலும் படர்ந்திருக்கக் கண்டால் அது தீராத்தொழுநோய் என்று கண்டு மேற்சொன்ன ஆடையும், முன்சொன்ன கறையுள்ள பொருளும் தீட்டுள்ளவை என்று குரு முடிவாய்ச் சொல்வார்.
52. இதன் பொருட்டு,
53. தீட்டுப்பட்ட அந்தப் பொருள் நெருப்பில் சுட்டெரிக்கப்படும்.
54. அப்படி இல்லாமல், கறை அதிகப்படவில்லை என்று குரு கண்டால், தொழுநோய் காணப்பட்ட ஆடையைக் கழுவச் சொல்லி, இரண்டாம் முறையும் ஏழு நாட்கள் அடைத்து வைப்பார்.
55. அப்பொழுது அதற்கு இயற்கையான நிறம் திரும்பிவராதிருந்த போதிலும், தொழுநோய் மேலும் பரவவில்லையென்று காண்பாராயின், மேற்சொன்ன பொருள் தீட்டாயிருக்கிறதென்று தீர்மானித்து, அதை நெருப்பில் சுட்டெரித்து விடுவார். ஏனென்றால், தொழுநோய் ஆடையின் வெளிப்புறத்திலேனும், உட்புறத்திலும் வெளிப்புறத்திலுமேனும் பரவியிருக்கிறது.
56. ஆனால், கழுவப்பட்ட பின் ஆடையிலுள்ள கறை சிறிது இருண்டதாகக் குரு கண்டால், தீட்டுப்பட்ட இடத்தை ஆடையில் இராதபடிக்குக் கத்தரித்தெடுத்து விடுவார்.
57. ஆனால், முன் சுத்தமாய் இருந்த இடங்களில் மீண்டும் இங்குமங்கும் நிலையற்ற ஒருவிதத் தொழுநோய் காணப்படுமாயின், ஆடை முழுவதுமே நெருப்புக்கு இரையாக்கப்படும்.
58. அந்தத் தீட்டு அதை விட்டுப் போய்விட்டால், சுத்தமான இடங்களை இரண்டாம் முறை கழுவுவார். அப்பொழுது அவை தீட்டில்லாமலே போய்விடும்.
59. ஆட்டுமயிர்களால் அல்லது மெல்லிய சணல் நூல்களால் நெய்யப்பட்ட அவ்வகைப் பொருட்களிலும் தொழுநோய் காணப்பட்டால், அது எப்படி சுத்தமாகும் அல்லது தீட்டுள்ளதாகும் என்பதற்கு இதுவே சட்டமாம் என்று ( ஆண்டவர் ) திருவுளம் பற்றினார்.
Total 27 Chapters, Current Chapter 13 of Total Chapters 27
×

Alert

×

tamil Letters Keypad References