1. இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது. அவனுடைய கோத்திரத்திற்கு அதன் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாவது
|
8. மேற்சொன்ன நகர்களைச் சுற்றிலும் தெற்கே இருக்கிற பாலாவாத்- பேவர்- இராமாத் வரையுள்ள எல்லாச் சிற்றூர்களும். இவை சிமியோன் புதல்வரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
|
9. யூதா புதல்வரின் பங்கு வீதம் அவர்களுக்கு மிகப் பெரியதாயிருந்ததால், மேற்சொன்ன நகர்களும் ஊர்களும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப் பெற்றன. எனவே, சிமியோன் புதல்வர் யூதா புதல்வர் நடுவே காணியாட்சி பெற்றனர்.
|
10. மூன்றாம் சீட்டு சபுலோன் புதல்வருக்கு விழுந்தது. அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பங்கு வீதத்தின் எல்லை சரீத் வரை நீண்டிருந்தது.
|
12. சாபேதிலிருந்து கிழக்கே கெசலேத்தாபோரின் எல்லை வரை திரும்பி, தாபரத்துக்குப் போய், ஜப்பேவுக்கு ஏறி,
|
13. அங்கிருந்து கெத்தப்பருக்கும் தக்கசீனுக்கும் கீழ்ப்புறத்தைக் கடந்து, ரெம்மோன், அம்தார், நோவா என்ற ஊர்களுக்குப் போய், அனத்தோனின் வடபக்கத்தைச் சுற்றிவந்து,
|
15. காத்தேதிலும் நவாலோலிலும் செமெரோனிலும் ஜெரலாவிலும் பெத்லேகேமிலும் முடியும். அப்பன்னிரு நகர்களும் அவற்றை அடுத்த ஊர்களும், சிற்றூர்களும்,
|
22. பிறகு, அவ்வெல்லை தாபோருக்கும் செகேசிமாவுக்கும் பெத்சமேசுக்கும் வந்து யோர்தானில் முடியும். அதற்குள் பதினாறு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும் உண்டு.
|
23. இந்நகர்களும் இவற்றை அடுத்த சிற்றூர்களும் இசாக்கார் புதல்வருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
|
26. அல்காத், காலீ, பேதன், அக்சப், எல்மலக், அமாத், மெசால் இவைகளே. பின்பு கடலருகே உள்ள கார்மேலுக்கும் சீகோருக்கும் லபனாத்துக்கும் சென்றது.
|
27. கிழக்கே பேத்தாகோனுக்குத் திரும்பி, வடக்கே சபுலோனுக்கும் ஜெப்தாயேலின் பள்ளத்தாக்குக்கும் போய், பெத்தெமெக்குக்கும், நேகியலுக்கும் வந்து,
|
28. காபுலின் இடப்புறத்திலேயும், அபிரானிலும் ரொகொபிலும் அமோனிலும் கானாவிலும் பெரிய சீதோனிலும் தொடங்கும்.
|
29. பிறகு அந்த எல்லை ஓர்மாவுக்குத் திரும்பி வந்து, அரண் சூழ்ந்த தீர்நகர், ஓசாநகர் வரையும் போகும். கடைசியில் அக்சிபா நாட்டில் அது கடலை அடையும்.
|
30. அதற்குள் அம்மா, ஆப்பேக், ரொகோப் முதலிய இருபத்திரண்டு நகர்களும் அவற்றையடுத்த ஊர்களும் அடங்கியிருந்தன.
|
31. இந்நகர்களும் இவற்றை அடுத்த ஊர்களும் ஆசேர் புதல்வரின் கோத்திரத்திற்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
|
33. அவரவர் வம்சங்களின்படி, கிடைத்த எல்லைகளாவன: எலேப், சானானீமிலுள்ள எலோன், ஆதமி என்ற நேக்கேப், ஜெப்னாயேல் ஊர்கள் தொடங்கி லேக்கு வரை போய், யோர்தானில் வந்து முடியும்.
|
34. மேலும் அவ்வெல்லை ஆசனேத்தாபோர் நோக்கி மேற்கே திரும்பி, அங்கிருந்து உக்குக்காவுக்குச் சென்று, தெற்கே சபுலோனைக் கடந்து, மேற்கே ஆசேர் நடுவிலும், சூரியன் உதிக்கும் திசையில் யோர்தானின் பக்கத்தில் யூதா நடுவிலும் போகிறது.
|
39. மேற்சொன்ன நகர்களும் அவற்றையடுத்த சிற்றூர்களும் நெப்தலி கோத்திரத்துப் புதல்வர்களுக்கு அவரவர் வம்சங்களின்படி சொந்தமாகும்.
|
47. இந்த எல்லையோடு முடிந்தது. தானின் புதல்வர் எழுந்து புறப்பட்டுப் போய் லெசேம் நகருடன் போரிட்டு அதைக் கைப்பற்றினர். வாளினால் கொன்று குவித்து அதைச் சொந்தமாக்கி அதில் குடியேறினர். லெசேமுக்குத் தங்கள் மூதாதையின் பெயரைச் சேர்த்து லெசேம்தான் என்று பெயரிட்டு அழைத்தனர்.
|
48. இந்நகர்களும் இவற்றைச் சேர்ந்த சிற்றூர்களும் தான் புதல்வர் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி கிடைத்த காணியாட்சியாகும்.
|
49. திருவுளச் சீட்டின் மூலம் வம்ச வரிசைப்படி ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நாட்டை பங்கிட்டு கொடுத்த பின்பு, இஸ்ராயேல் மக்கள் நூனின் மகன் யோசுவாவுக்குத் தம் நடுவில் ஒரு சொந்தக் காணியைக் கொடுத்தனர்.
|
50. எபிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த தம்னாத் சாரா என்ற இடமே அவர் பெற்றது. யோசுவா அதைக் கேட்டிருந்தார். ஆண்டவருடைய கட்டளைப்படி மக்களும் அதை அவருக்குக் கொடுத்தனர். அவர் அங்கு ஒரு நகரைக்கட்டி அதில் குடியேறினார்.
|
51. குருவான எலெயசாரும் நூனின் மகன் யோசுவாவும் இஸ்ராயேல் மக்களின் வம்சத் தலைவர்களும் கோத்திரப் பெருமக்களும், சீலோவிலிருந்து சாட்சிப் பேழை வாயிலிலே ஆண்டவர் திருமுன் திருவுளச் சீட்டின் மூலம் இஸ்ராயேல் மக்களின் கோத்திரங்களுக்கு நாட்டைப் பிரித்துக் கொடுத்த காணியாட்சிகள் இவைகளே.
|