தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோவான்
1. இயேசு போய்க்கொண்டிருக்கும்போது பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டார்.
2. "ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று அவருடைய சீடர் அவரை வினவினர்.
3. இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.
4. "பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகின்றது. அப்பொழுது எவனும் வேலைசெய்ய முடியாது.
5. இவ்வுலகில் இருக்கும்வரை நான் உலகிற்கு ஒளி" என்றார்.
6. இதைச் சொன்னபின், தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறுண்டாக்கி, அச்சேற்றை அவனுடைய கண்கள்மேல் பூசி,
7. அவனை நோக்கி, "நீ போய்ச் சீலோவாம் குளத்தில் கழுவு" என்றார். (சீலோவாம் என்பதற்கு ' அனுப்பப்பட்டவர் ' என்பது பொருள். ) அவன் போய்க் கழுவினான், பார்வையோடு திரும்பி வந்தான்.
8. அக்கம்பக்கத்தாரும், முன்பு அவனைப் பிச்சைக்காரனாகப் பார்த்துவந்தவர்களும், "இவன்தானே அங்கே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன்?" என்றனர்.
9. சிலர், "இவன்தான்" என்றும், சிலரோ, "அவனல்லன், அவனைப் போலிருக்கிறான்" என்றும் சொல்லிக்கொண்டனர். அவனோ, "நான்தான்" என்றான்.
10. அவர்கள், "உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று கேட்டனர்.
11. அவன், "இயேசு என்பவர் சேறுண்டாக்கி என் கண்களில் பூசி, 'சீலோவாம் குளத்திற்குப் போய்க் கழுவு' என்றார். நான் போய்க் கழுவினேன், பார்வை பெற்றேன்" என்றான்.
12. அவர்கள், "அவர் எங்கே?" என்று அவனைக் கேட்க, அவன் "தெரியாது" என்றான்.
13. முன்பு குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடம் கூட்டிக்கொண்டு போயினர்.
14. இயேசு சேறுண்டாக்கி அவனுக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள்.
15. எனவே பரிசேயரும், "எப்படிப் பார்வை அடைத்தாய்?" என்ற அதே கேள்வியைக் கேட்டனர். அவனோ அவர்களிடம், "என் கண்களின் மேல் அவர் சேற்றைத் தடவினார்; போய்க் கழுவினேன்; இப்போது பார்க்கிறேன்" என்றான்.
16. பரிசேயர்களுள் சிலர், "அவன் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில்லை" என, சிலர், "பாவியானவன் இத்தகைய அருங்குறிகளை எப்படிச் செய்யமுடியும் ?" என்றனர். எனவே, அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
17. அவர்கள் மீண்டும் குருடனை நோக்கி, "உனக்குப் பார்வை அளித்தவனைக் குறித்து நீ என்ன சொல்லுகிறாய்?" என, அவன், "அவர் ஓர் இறைவாக்கினர்" என்றான்.
18. பார்வையடைந்தவனுடைய பெற்றோரை அழைத்துக் கேட்கும்வரை யூதர்கள், அவன் குருடனாயிருந்து பார்வை பெற்றான் என்பதை நம்பவில்லை.
19. உங்கள் மகன் பிறவிக்குருடன் என்று சொல்லுகிறீர்களே, இவன்தானா? இவனுக்கு இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது?" என்று அவர்களை வினவினர்.
20. அதற்கு அவனுடைய பெற்றோர், "இவன் எங்கள் மகன்தான். பிறவியிலேயே குருடன்தான். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்.
21. ஆனால், இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இவனுக்குப் பார்வை கொடுத்தவர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவனையே கேட்டுக்கொள்ளுங்கள். அவன் வயது வந்தவன்; நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.
22. யூதர்களுக்கு அஞ்சியே அவனுடைய பெற்றோர் இவ்வாறு கூறினர். ஏனெனில், அவரை மெசியாவாக எவனாவது ஏற்றுக்கொண்டால், அவனைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்கவேண்டுமென யூதர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.
23. அதனால்தான் அவனுடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன், அவனையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.
24. குருடனாயிருந்தவனை மீண்டும் அழைத்து அவனிடம், "நீ கடவுளை மகிமைப்படுத்து; அவன் பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.
25. அவனோ, "அவர் பாவியோ, அல்லரோ, எனக்குத் தெரியாது. ஒன்றுதான் தெரியும்; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்" என்றான்.
26. மீண்டும் அவர்கள், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?" என்று வினவ,
27. அவன், "ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கவனிக்கவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கவேண்டும்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?" என்றான்.
28. அவர்கள் அவனைத் திட்டி, "நீதான் அந்த ஆளுடைய சீடன். நாங்களோ மோயீசனுடைய சீடர்.
29. கடவுள் மோயீசனோடு பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். இவன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.
30. அதற்கு அவன், "என்ன விந்தையாயிருக்கிறது! எனக்குப் பார்வை கொடுத்திருக்கிறார். இவர் எங்கிருந்து வந்தார் என்பது தெரியாதென்கிறீர்களே!
31. பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இறைப்பற்றுள்ளவனாய் அவர் விருப்பத்தின்படி நடக்கிறவனுக்கே செவிசாய்க்கிறார். இது நமக்கு நன்றாய்த் தெரியும்.
32. பிறவியிலேயே குருடனாயிருந்த ஒருவனுக்கு யாரும் பார்வையளித்ததாக ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை.
33. இவர் கடவுளிடமிருந்து வராதிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது" என்றான்.
34. அப்போது அவர்கள், "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குப் போதிக்கிறாய்?" என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
35. அவர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்வியுற்றார். பின்பு அவனைக் கண்டபொழுது, "மனுமகனில் உனக்கு விசுவாசம் உண்டா ?" என,
36. அவன், "ஆண்டவரே, அவர் யார் எனச் சொல்லும், நான் அவரில் விசுவாசம் கொள்வேன்" என்றான்.
37. இயேசு, அவனை நோக்கி, "நீ அவரைப் பார்த்திருக்கிறாய். உன்னுடன் பேசுகிறவரே அவர்" என்று கூற,
38. அவன், "ஆண்டவரே, விசுவசிக்கிறேன்" என்று சொல்லி அவரைப் பணிந்து வணங்கினான்.
39. அப்போது இயேசு, "நான் தீர்ப்பிடவே இவ்வுலகத்திற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வைபெறவும், பார்வையுள்ளோர் குருடராகவுமே நான் வந்தேன்" என்று கூறினார்.
40. அவருடனிருந்த பரிசேயர் சிலர் இதைக் கேட்டு, "நாங்களுமா குருடர்?" என்று வினவ,
41. இயேசு, "நீங்கள் குருடராய் இருந்தால், உங்களுக்குப் பாவம் இராது. ஆனால், 'எங்களுக்கு கண் தெரிகிறது' என்கிறீர்கள். ஆதலால், உங்கள் பாவத்திலேயே நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்" என்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Chapters, Current Chapter 9 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
யோவான் 9:6
1. இயேசு போய்க்கொண்டிருக்கும்போது பிறவிக் குருடன் ஒருவனைக் கண்டார்.
2. "ராபி, இவன் குருடனாகப் பிறந்தது யார் செய்த பாவம்? இவன் செய்த பாவமா? இவன் பெற்றோர் செய்த பாவமா?" என்று அவருடைய சீடர் அவரை வினவினர்.
3. இயேசு, "இவன் செய்த பாவமும் அன்று, இவன் பெற்றோர் செய்த பாவமும் அன்று. கடவுளுடைய செயல்கள் இவன் மட்டில் வெளிப்படும் பொருட்டே இப்படிப் பிறந்தான்.
4. "பகலாய் இருக்கும்வரை என்னை அனுப்பினவருடைய செயல்களை நாம் செய்யவேண்டியிருக்கிறது. இரவு வருகின்றது. அப்பொழுது எவனும் வேலைசெய்ய முடியாது.
5. இவ்வுலகில் இருக்கும்வரை நான் உலகிற்கு ஒளி" என்றார்.
6. இதைச் சொன்னபின், தரையில் உமிழ்ந்து, உமிழ்நீரால் சேறுண்டாக்கி, அச்சேற்றை அவனுடைய கண்கள்மேல் பூசி,
7. அவனை நோக்கி, "நீ போய்ச் சீலோவாம் குளத்தில் கழுவு" என்றார். (சீலோவாம் என்பதற்கு ' அனுப்பப்பட்டவர் ' என்பது பொருள். ) அவன் போய்க் கழுவினான், பார்வையோடு திரும்பி வந்தான்.
8. அக்கம்பக்கத்தாரும், முன்பு அவனைப் பிச்சைக்காரனாகப் பார்த்துவந்தவர்களும், "இவன்தானே அங்கே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவன்?" என்றனர்.
9. சிலர், "இவன்தான்" என்றும், சிலரோ, "அவனல்லன், அவனைப் போலிருக்கிறான்" என்றும் சொல்லிக்கொண்டனர். அவனோ, "நான்தான்" என்றான்.
10. அவர்கள், "உனக்கு எப்படிப் பார்வை கிடைத்தது?" என்று கேட்டனர்.
11. அவன், "இயேசு என்பவர் சேறுண்டாக்கி என் கண்களில் பூசி, 'சீலோவாம் குளத்திற்குப் போய்க் கழுவு' என்றார். நான் போய்க் கழுவினேன், பார்வை பெற்றேன்" என்றான்.
12. அவர்கள், "அவர் எங்கே?" என்று அவனைக் கேட்க, அவன் "தெரியாது" என்றான்.
13. முன்பு குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடம் கூட்டிக்கொண்டு போயினர்.
14. இயேசு சேறுண்டாக்கி அவனுக்குப் பார்வை அளித்த நாள் ஓர் ஓய்வுநாள்.
15. எனவே பரிசேயரும், "எப்படிப் பார்வை அடைத்தாய்?" என்ற அதே கேள்வியைக் கேட்டனர். அவனோ அவர்களிடம், "என் கண்களின் மேல் அவர் சேற்றைத் தடவினார்; போய்க் கழுவினேன்; இப்போது பார்க்கிறேன்" என்றான்.
16. பரிசேயர்களுள் சிலர், "அவன் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதில்லை" என, சிலர், "பாவியானவன் இத்தகைய அருங்குறிகளை எப்படிச் செய்யமுடியும் ?" என்றனர். எனவே, அவர்களிடையே பிளவு ஏற்பட்டது.
17. அவர்கள் மீண்டும் குருடனை நோக்கி, "உனக்குப் பார்வை அளித்தவனைக் குறித்து நீ என்ன சொல்லுகிறாய்?" என, அவன், "அவர் ஓர் இறைவாக்கினர்" என்றான்.
18. பார்வையடைந்தவனுடைய பெற்றோரை அழைத்துக் கேட்கும்வரை யூதர்கள், அவன் குருடனாயிருந்து பார்வை பெற்றான் என்பதை நம்பவில்லை.
19. உங்கள் மகன் பிறவிக்குருடன் என்று சொல்லுகிறீர்களே, இவன்தானா? இவனுக்கு இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது?" என்று அவர்களை வினவினர்.
20. அதற்கு அவனுடைய பெற்றோர், "இவன் எங்கள் மகன்தான். பிறவியிலேயே குருடன்தான். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும்.
21. ஆனால், இப்பொழுது எப்படிக் கண் தெரிகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. இவனுக்குப் பார்வை கொடுத்தவர் யார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. அவனையே கேட்டுக்கொள்ளுங்கள். அவன் வயது வந்தவன்; நடந்ததை அவனே சொல்லட்டும்" என்றனர்.
22. யூதர்களுக்கு அஞ்சியே அவனுடைய பெற்றோர் இவ்வாறு கூறினர். ஏனெனில், அவரை மெசியாவாக எவனாவது ஏற்றுக்கொண்டால், அவனைச் செபக்கூடத்திற்குப் புறம்பாக்கவேண்டுமென யூதர்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தனர்.
23. அதனால்தான் அவனுடைய பெற்றோர், "அவன் வயது வந்தவன், அவனையே கேட்டுக்கொள்ளுங்கள்" என்றனர்.
24. குருடனாயிருந்தவனை மீண்டும் அழைத்து அவனிடம், "நீ கடவுளை மகிமைப்படுத்து; அவன் பாவி என்பது எங்களுக்குத் தெரியும்" என்றனர்.
25. அவனோ, "அவர் பாவியோ, அல்லரோ, எனக்குத் தெரியாது. ஒன்றுதான் தெரியும்; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்" என்றான்.
26. மீண்டும் அவர்கள், "அவன் உனக்கு என்ன செய்தான்? எப்படிப் பார்வை அளித்தான்?" என்று வினவ,
27. அவன், "ஏற்கனவே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கவனிக்கவில்லை. மறுபடியும் ஏன் அதைக் கேட்கவேண்டும்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?" என்றான்.
28. அவர்கள் அவனைத் திட்டி, "நீதான் அந்த ஆளுடைய சீடன். நாங்களோ மோயீசனுடைய சீடர்.
29. கடவுள் மோயீசனோடு பேசினார் என்பது எங்களுக்குத் தெரியும். இவன் எங்கிருந்து வந்தான் என்பது எங்களுக்குத் தெரியாது" என்று சொன்னார்கள்.
30. அதற்கு அவன், "என்ன விந்தையாயிருக்கிறது! எனக்குப் பார்வை கொடுத்திருக்கிறார். இவர் எங்கிருந்து வந்தார் என்பது தெரியாதென்கிறீர்களே!
31. பாவிகளுக்குக் கடவுள் செவிசாய்ப்பதில்லை. இறைப்பற்றுள்ளவனாய் அவர் விருப்பத்தின்படி நடக்கிறவனுக்கே செவிசாய்க்கிறார். இது நமக்கு நன்றாய்த் தெரியும்.
32. பிறவியிலேயே குருடனாயிருந்த ஒருவனுக்கு யாரும் பார்வையளித்ததாக ஒருபோதும் கேள்விப்பட்டதேயில்லை.
33. இவர் கடவுளிடமிருந்து வராதிருந்தால் ஒன்றுமே செய்திருக்க முடியாது" என்றான்.
34. அப்போது அவர்கள், "பிறப்பிலிருந்தே பாவத்தில் மூழ்கிக் கிடக்கும் நீயா எங்களுக்குப் போதிக்கிறாய்?" என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
35. அவர்கள் அவனை வெளியே தள்ளிவிட்டதை இயேசு கேள்வியுற்றார். பின்பு அவனைக் கண்டபொழுது, "மனுமகனில் உனக்கு விசுவாசம் உண்டா ?" என,
36. அவன், "ஆண்டவரே, அவர் யார் எனச் சொல்லும், நான் அவரில் விசுவாசம் கொள்வேன்" என்றான்.
37. இயேசு, அவனை நோக்கி, "நீ அவரைப் பார்த்திருக்கிறாய். உன்னுடன் பேசுகிறவரே அவர்" என்று கூற,
38. அவன், "ஆண்டவரே, விசுவசிக்கிறேன்" என்று சொல்லி அவரைப் பணிந்து வணங்கினான்.
39. அப்போது இயேசு, "நான் தீர்ப்பிடவே இவ்வுலகத்திற்கு வந்தேன். பார்வையற்றோர் பார்வைபெறவும், பார்வையுள்ளோர் குருடராகவுமே நான் வந்தேன்" என்று கூறினார்.
40. அவருடனிருந்த பரிசேயர் சிலர் இதைக் கேட்டு, "நாங்களுமா குருடர்?" என்று வினவ,
41. இயேசு, "நீங்கள் குருடராய் இருந்தால், உங்களுக்குப் பாவம் இராது. ஆனால், 'எங்களுக்கு கண் தெரிகிறது' என்கிறீர்கள். ஆதலால், உங்கள் பாவத்திலேயே நீங்கள் நிலைத்திருக்கிறீர்கள்" என்றார்.
Total 21 Chapters, Current Chapter 9 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
×

Alert

×

tamil Letters Keypad References