2. அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்யமுடியாது" என்றார்.
|
3. இயேசு மறுமொழியாக, "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது என்று உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
|
4. அதற்கு நிக்கொதேமு, "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும் ? மீண்டும் தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்கக்கூடுமோ ?" என,
|
5. இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது.
|
8. காற்று தான் விரும்பிய பக்கம் வீசுகின்றது; அதன் ஓசை கேட்கிறது; ஆனால், எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்குச் செல்கின்றது என்பதோ தெரிவதில்லை. ஆவியால் பிறக்கும் எவனும் அப்படியே."
|
11. "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: எமக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; யாம் கண்டதைக்குறித்தே சாட்சி கூறுகிறோம்; எம் சாட்சியத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
|
12. மண்ணுலகைச் சார்ந்தவைபற்றி நான் உங்களுக்குச் சொல்லியே நீங்கள் விசுவசிப்பதில்லையென்றால், விண்ணுலகைச் சார்ந்தவைபற்றி உங்களுக்குக் கூறினால், எவ்வாறு நீங்கள் விசுவசிக்கப் போகிறீர்கள் ?
|
13. வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே.
|
16. தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
|
18. அவரில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டன். ஏனெனில், அவன் கடவுளின் ஒரேபேறான மகனின் பெயரில் விசுவாசங்கொள்ளவில்லை.
|
19. அவர்கள் பெறும் தீர்ப்பு இதுவே: ஒளி உலகத்திற்கு வந்துள்ளது; மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்; ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.
|
20. பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை.
|
21. உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."
|
22. இதற்குப்பின், இயேசுவும் அவருடைய சீடரும் யூதேயா நாட்டிற்கு வந்தனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.
|
23. சாலீமுக்கு அருகிலுள்ள அயினோன் என்னுமிடத்தில் நிறைய தண்ணீர் இருந்ததால், அருளப்பரும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். மக்கள் வந்து ஞானஸ்நானம் பெற்றனர்.
|
25. இதனால், அருளப்பரின் சீடர் சிலருக்கும் யூதன் ஒருவனுக்கும் துப்புரவுமுறைமைபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று.
|
26. அவர்கள் அருளப்பரிடம் வந்து, "ராபி, உம்மோடு யோர்தானுக்கு அப்பால் ஒருவர் இருந்தாரே, அவரைக்குறித்து நீர் சாட்சியம் கூறினீரே; இதோ! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்; எல்லாரும் அவரிடம் போகின்றனர்" என்றார்கள்.
|
28. "நான் மெசியா அல்லேன்; அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சி.
|
29. "மணமகளை உடையவன் மணமகனே; மணமகனின் சொல்லுக்காகக் காத்துநிற்கும் அவனுடைய நண்பன் மணமகனுடைய குரலைக் கேட்டுப் பெருமகிழ்வடைகின்றான். இதுவே என் மகிழ்ச்சி; இம்மகிழ்ச்சியும் நிறைவுற்றது.
|
31. மேலிருந்து வருபவர் எல்லாருக்கும் மேலானவர். மண்ணிலிருந்து உண்டானவன் மண்ணுலகைச் சார்ந்தவன்; அவன் மண்ணுலகைச் சார்ந்தவனாகவே பேசுகிறான். விண்ணுலகிலிருந்து வருபவரோ எல்லாருக்கும் மேலானவர்.
|
32. தாம் கண்டதையும் கேட்டதையுங்குறித்தே அவர் சாட்சியம் பகர்கின்றார். ஆனால், அவருடைய சாட்சியத்தை எவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
|
34. ஏனெனில், கடவுள் அனுப்பியவர் கடவுளின் சொற்களைக் கூறுகிறார்; ஏனெனில், கடவுள் அவருக்கு ஆவியை அளவுபார்த்துக் கொடுப்பதில்லை.
|
36. மகனில் விசுவாசங்கொள்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்; மகனில் விசுவாசங்கொள்ளாதவனோ வாழ்வைக் காணமாட்டான்; கடவுளின் சினமே அவன்மேல் வந்து தங்கும்."
|