தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோவான்
1. பரிசேயர் ஒருவர் இருந்தார். அவர்பெயர் நிக்கொதேமு; அவர் யூதப்பெரியோர்களுள் ஒருவர்.
2. அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்யமுடியாது" என்றார்.
3. இயேசு மறுமொழியாக, "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது என்று உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
4. அதற்கு நிக்கொதேமு, "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும் ? மீண்டும் தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்கக்கூடுமோ ?" என,
5. இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது.
6. ஊனுடலால் பிறப்பது ஊனுடலே. ஆவியால் பிறப்பதோ ஆவி.
7. நீங்கள் மேலிருந்து பிறக்க வேண்டுமென்று நான் உமக்குக் கூறியதால் வியப்படையாதீர்.
8. காற்று தான் விரும்பிய பக்கம் வீசுகின்றது; அதன் ஓசை கேட்கிறது; ஆனால், எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்குச் செல்கின்றது என்பதோ தெரிவதில்லை. ஆவியால் பிறக்கும் எவனும் அப்படியே."
9. நிக்கொதேமு மறுமொழியாக, "இது எவ்வாறு நடைபெற முடியும் ?" என்று கேட்க,
10. இயேசு கூறினார்: "நீர் இஸ்ராயேலில் பேர்பெற்ற போதகராயிருந்தும், இது உமக்குத் தெரியாதா!
11. "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: எமக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; யாம் கண்டதைக்குறித்தே சாட்சி கூறுகிறோம்; எம் சாட்சியத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
12. மண்ணுலகைச் சார்ந்தவைபற்றி நான் உங்களுக்குச் சொல்லியே நீங்கள் விசுவசிப்பதில்லையென்றால், விண்ணுலகைச் சார்ந்தவைபற்றி உங்களுக்குக் கூறினால், எவ்வாறு நீங்கள் விசுவசிக்கப் போகிறீர்கள் ?
13. வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே.
14. மனுமகனில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு,
15. மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்.
16. தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
17. கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.
18. அவரில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டன். ஏனெனில், அவன் கடவுளின் ஒரேபேறான மகனின் பெயரில் விசுவாசங்கொள்ளவில்லை.
19. அவர்கள் பெறும் தீர்ப்பு இதுவே: ஒளி உலகத்திற்கு வந்துள்ளது; மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்; ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.
20. பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை.
21. உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."
22. இதற்குப்பின், இயேசுவும் அவருடைய சீடரும் யூதேயா நாட்டிற்கு வந்தனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.
23. சாலீமுக்கு அருகிலுள்ள அயினோன் என்னுமிடத்தில் நிறைய தண்ணீர் இருந்ததால், அருளப்பரும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். மக்கள் வந்து ஞானஸ்நானம் பெற்றனர்.
24. அருளப்பர் இன்னும் சிறைப்படவில்லை.
25. இதனால், அருளப்பரின் சீடர் சிலருக்கும் யூதன் ஒருவனுக்கும் துப்புரவுமுறைமைபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று.
26. அவர்கள் அருளப்பரிடம் வந்து, "ராபி, உம்மோடு யோர்தானுக்கு அப்பால் ஒருவர் இருந்தாரே, அவரைக்குறித்து நீர் சாட்சியம் கூறினீரே; இதோ! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்; எல்லாரும் அவரிடம் போகின்றனர்" என்றார்கள்.
27. அதற்கு அருளப்பர் கூறியதாவது: "கடவுள் கொடுத்தாலொழிய யாரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.
28. "நான் மெசியா அல்லேன்; அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சி.
29. "மணமகளை உடையவன் மணமகனே; மணமகனின் சொல்லுக்காகக் காத்துநிற்கும் அவனுடைய நண்பன் மணமகனுடைய குரலைக் கேட்டுப் பெருமகிழ்வடைகின்றான். இதுவே என் மகிழ்ச்சி; இம்மகிழ்ச்சியும் நிறைவுற்றது.
30. அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்.
31. மேலிருந்து வருபவர் எல்லாருக்கும் மேலானவர். மண்ணிலிருந்து உண்டானவன் மண்ணுலகைச் சார்ந்தவன்; அவன் மண்ணுலகைச் சார்ந்தவனாகவே பேசுகிறான். விண்ணுலகிலிருந்து வருபவரோ எல்லாருக்கும் மேலானவர்.
32. தாம் கண்டதையும் கேட்டதையுங்குறித்தே அவர் சாட்சியம் பகர்கின்றார். ஆனால், அவருடைய சாட்சியத்தை எவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதோ, கடவுள் உண்மையானவர் என்பதற்கு அத்தாட்சி தருவது போலாகும்.
34. ஏனெனில், கடவுள் அனுப்பியவர் கடவுளின் சொற்களைக் கூறுகிறார்; ஏனெனில், கடவுள் அவருக்கு ஆவியை அளவுபார்த்துக் கொடுப்பதில்லை.
35. தந்தை மகன்பால் அன்புசெய்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
36. மகனில் விசுவாசங்கொள்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்; மகனில் விசுவாசங்கொள்ளாதவனோ வாழ்வைக் காணமாட்டான்; கடவுளின் சினமே அவன்மேல் வந்து தங்கும்."

குறிப்பேடுகள்

No Verse Added

Total 21 Chapters, Current Chapter 3 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10 11
யோவான் 3:1
1. பரிசேயர் ஒருவர் இருந்தார். அவர்பெயர் நிக்கொதேமு; அவர் யூதப்பெரியோர்களுள் ஒருவர்.
2. அவர் ஓர் இரவில் இயேசுவிடம் வந்து, "ராபி, நீர் கடவுளிடமிருந்து வந்த போதகர் என்பதை அறிவோம். தன்னோடு கடவுள் இருந்தாலன்றி எவனும் நீர் செய்கிற அருங்குறிகளைச் செய்யமுடியாது" என்றார்.
3. இயேசு மறுமொழியாக, "எவனும் மேலிருந்து பிறந்தாலன்றி, கடவுளுடைய அரசைக் காணமுடியாது என்று உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்" என்றார்.
4. அதற்கு நிக்கொதேமு, "ஒருவன் வயதானபின் எப்படிப் பிறக்கமுடியும் ? மீண்டும் தாயின் வயிற்றில் நுழைந்து பிறக்கக்கூடுமோ ?" என,
5. இயேசு கூறியதாவது: "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: ஒருவன் நீரினாலும் ஆவியினாலும் பிறந்தாலன்றி கடவுளுடைய அரசில் நுழையமுடியாது.
6. ஊனுடலால் பிறப்பது ஊனுடலே. ஆவியால் பிறப்பதோ ஆவி.
7. நீங்கள் மேலிருந்து பிறக்க வேண்டுமென்று நான் உமக்குக் கூறியதால் வியப்படையாதீர்.
8. காற்று தான் விரும்பிய பக்கம் வீசுகின்றது; அதன் ஓசை கேட்கிறது; ஆனால், எங்கிருந்து வருகின்றது என்பதோ, எங்குச் செல்கின்றது என்பதோ தெரிவதில்லை. ஆவியால் பிறக்கும் எவனும் அப்படியே."
9. நிக்கொதேமு மறுமொழியாக, "இது எவ்வாறு நடைபெற முடியும் ?" என்று கேட்க,
10. இயேசு கூறினார்: "நீர் இஸ்ராயேலில் பேர்பெற்ற போதகராயிருந்தும், இது உமக்குத் தெரியாதா!
11. "உண்மையிலும் உண்மையாக உமக்குச் சொல்லுகிறேன்: எமக்குத் தெரிந்ததைப்பற்றியே பேசுகிறோம்; யாம் கண்டதைக்குறித்தே சாட்சி கூறுகிறோம்; எம் சாட்சியத்தையோ நீங்கள் ஏற்றுக்கொள்வதில்லை.
12. மண்ணுலகைச் சார்ந்தவைபற்றி நான் உங்களுக்குச் சொல்லியே நீங்கள் விசுவசிப்பதில்லையென்றால், விண்ணுலகைச் சார்ந்தவைபற்றி உங்களுக்குக் கூறினால், எவ்வாறு நீங்கள் விசுவசிக்கப் போகிறீர்கள் ?
13. வானகத்திலிருந்து இறங்கி வந்தவரேயன்றி வேறெவரும் வானகத்திற்கு ஏறிச்சென்றதில்லை. அப்படி வந்தவர் வானகத்திலிருக்கும் மனுமகனே.
14. மனுமகனில் விசுவாசங்கொள்ளும் அனைவரும் முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு,
15. மோயீசன் பாலைவனத்தில் பாம்பை உயர்த்தியதுபோல மனுமகனும் உயர்த்தப்படவேண்டும்.
16. தம் மகனில் விசுவாசங்கொள்ளும் எவரும் அழியாமல், முடிவில்லா வாழ்வைப் பெறும்பொருட்டு அந்த ஒரேபேறான மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்.
17. கடவுள் தம் மகனை உலகிற்கு அனுப்பியது அதற்குத் தீர்ப்பளிக்கவன்று, அவர்வழியாக உலகம் மீட்புப்பெறவே.
18. அவரில் விசுவாசங்கொள்பவன் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; விசுவாசங்கொள்ளாதவனோ ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டன். ஏனெனில், அவன் கடவுளின் ஒரேபேறான மகனின் பெயரில் விசுவாசங்கொள்ளவில்லை.
19. அவர்கள் பெறும் தீர்ப்பு இதுவே: ஒளி உலகத்திற்கு வந்துள்ளது; மனிதர்களோ ஒளியைவிட இருளையே விரும்பினர்; ஏனெனில், அவர்களுடைய செயல்கள் தீயனவாயிருந்தன.
20. பொல்லாது செய்பவன் எவனும் ஒளியை வெறுக்கிறான். தன் செயல்கள் தவறானவை என்று வெளியாகாதபடி அவன் ஒளியிடம் வருவதில்லை.
21. உண்மைக்கேற்ப நடப்பவனோ, தன் செயல்கள் கடவுளோடு ஒன்றித்துச் செய்தவையாக வெளிப்படும்படி ஒளியிடம் வருகிறான்."
22. இதற்குப்பின், இயேசுவும் அவருடைய சீடரும் யூதேயா நாட்டிற்கு வந்தனர். அங்கே அவர் அவர்களோடு தங்கி, ஞானஸ்நானம் கொடுத்துவந்தார்.
23. சாலீமுக்கு அருகிலுள்ள அயினோன் என்னுமிடத்தில் நிறைய தண்ணீர் இருந்ததால், அருளப்பரும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தார். மக்கள் வந்து ஞானஸ்நானம் பெற்றனர்.
24. அருளப்பர் இன்னும் சிறைப்படவில்லை.
25. இதனால், அருளப்பரின் சீடர் சிலருக்கும் யூதன் ஒருவனுக்கும் துப்புரவுமுறைமைபற்றி வாக்குவாதம் உண்டாயிற்று.
26. அவர்கள் அருளப்பரிடம் வந்து, "ராபி, உம்மோடு யோர்தானுக்கு அப்பால் ஒருவர் இருந்தாரே, அவரைக்குறித்து நீர் சாட்சியம் கூறினீரே; இதோ! அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார்; எல்லாரும் அவரிடம் போகின்றனர்" என்றார்கள்.
27. அதற்கு அருளப்பர் கூறியதாவது: "கடவுள் கொடுத்தாலொழிய யாரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது.
28. "நான் மெசியா அல்லேன்; அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சி.
29. "மணமகளை உடையவன் மணமகனே; மணமகனின் சொல்லுக்காகக் காத்துநிற்கும் அவனுடைய நண்பன் மணமகனுடைய குரலைக் கேட்டுப் பெருமகிழ்வடைகின்றான். இதுவே என் மகிழ்ச்சி; இம்மகிழ்ச்சியும் நிறைவுற்றது.
30. அவர் வளரவேண்டும், நானோ குறையவேண்டும்.
31. மேலிருந்து வருபவர் எல்லாருக்கும் மேலானவர். மண்ணிலிருந்து உண்டானவன் மண்ணுலகைச் சார்ந்தவன்; அவன் மண்ணுலகைச் சார்ந்தவனாகவே பேசுகிறான். விண்ணுலகிலிருந்து வருபவரோ எல்லாருக்கும் மேலானவர்.
32. தாம் கண்டதையும் கேட்டதையுங்குறித்தே அவர் சாட்சியம் பகர்கின்றார். ஆனால், அவருடைய சாட்சியத்தை எவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.
33. அவருடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்வதோ, கடவுள் உண்மையானவர் என்பதற்கு அத்தாட்சி தருவது போலாகும்.
34. ஏனெனில், கடவுள் அனுப்பியவர் கடவுளின் சொற்களைக் கூறுகிறார்; ஏனெனில், கடவுள் அவருக்கு ஆவியை அளவுபார்த்துக் கொடுப்பதில்லை.
35. தந்தை மகன்பால் அன்புசெய்து அனைத்தையும் அவர் கையில் ஒப்படைத்துள்ளார்.
36. மகனில் விசுவாசங்கொள்பவன் முடிவில்லா வாழ்வைக் கொண்டுள்ளான்; மகனில் விசுவாசங்கொள்ளாதவனோ வாழ்வைக் காணமாட்டான்; கடவுளின் சினமே அவன்மேல் வந்து தங்கும்."
Total 21 Chapters, Current Chapter 3 of Total Chapters 21
1 2 3 4 5 6 7 8 9 10 11
×

Alert

×

tamil Letters Keypad References