1. வாரத்தின் முதல்நாள் விடியற்காலையில் இருட்டாயிருக்கும்பொழுதே, மதலேன் மரியாள் கல்லறைக்கு வந்தாள். கல்லறைவாயிலில் இருந்த கல் எடுபட்டிருப்பதைக் கண்டாள்.
|
2. கண்டதும், சீமோன் இராயப்பரிடமும், இயேசுவினால் நேசிக்கப்பட்டவராகிய மற்றச் சீடரிடமும் ஓடிவந்து, அவர்களைப் பார்த்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து எடுத்துவிட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, அறியோம்" என்றாள்.
|
4. இருவரும் ஒருமிக்க ஓடினார்கள்; மற்றச் சீடரோ இராயப்பரைவிட விரைவாக ஓடி அவருக்குமுன் கல்லறையை அடைந்தார்.
|
7. இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் தனியாகச் சுருட்டி ஒரு பக்கமாக வைக்கப்பட்டிருந்தது.
|
11. மரியாள் கல்லறைக்கருகில் வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள். அழுதுகொண்டே கல்லறைக்குள் குனிந்துபார்த்தாள்.
|
12. வெண்ணாடை அணிந்த வானதூதர் இருவரை அங்கே கண்டாள். இயேசுவின் உடலை வைத்திருந்த இடத்தில் ஒருவர் தலைமாட்டிலும், மற்றவர் கால்மாட்டிலுமாக அமர்ந்திருந்தனர்.
|
13. அவர்கள் அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ?" என, அவள், "என் "ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர். எங்கே வைத்தனரோ, தெரியவில்லை" என்றாள்.
|
14. இப்படிச் சொன்னபின், திரும்பிப் பார்த்தபொழுது இயேசு நிற்பதைக் கண்டாள். ஆனால், அவர் இயேசு என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
|
15. இயேசு அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார். அவளோ அவரைத் தோட்டக்காரன் என்றெண்ணி அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் ? சொல்லும். நான் அவரை எடுத்துச்செல்வேன்" என்றாள்.
|
16. இயேசு அவளை நோக்கி, "மரியே! " என்றார். அவர் திரும்பிப்பார்த்து, "ராபூனி!" என்றாள். இந்த எபிரேயச் சொல்லுக்குப் போதகரே என்பது பொருள்.
|
17. இயேசு அவளை நோக்கிக் கூறியதாவது: "என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில், நான் மேலெழும்பி என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. என் சகோதரர்களிடம்போய், ' என் தந்தையும் உங்கள் தந்தையும், என் கடவுளும் உங்கள் கடவுளுமாகியவரிடம் நான் மேலே எழும்பிச் செல்கிறேன் ' என்று அவர்களுக்குச் சொல்."
|
18. மதலேன் மரியாள் சீடரிடம் வந்து, "ஆண்டவரைக் கண்டேன், அவர் எனக்கு இப்படிச் சொன்னார்" என்று அறிவித்தாள்.
|
19. வாரத்தின் முதல் நாளாகிய அன்று மாலை, சீடர்கள் தாங்கள் கூடியிருந்த இடத்திலே யூதருக்கு அஞ்சிக் கதவுகளை மூடிவைத்திருக்கையில், இயேசு வந்து அவர்களிடையே நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
|
20. இவ்வாறு சொல்லி, அவர்களுக்குத் தம் கைகளையும் விலாவையும் காண்பித்தார். ஆண்டவரைக் கண்டு சீடர்கள் மகிழ்வுற்றார்கள்.
|
21. இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சமாதானம். "என் தந்தை என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்" என்றார்.
|
23. எவர்களுடைய பாவங்களை மன்னிப்பீர்களோ, அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்; எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை மன்னிப்பின்றி விடப்படும்" என்றார்.
|
25. மற்றச் சீடர்கள் அவரிடம், "ஆண்டவரைக் கண்டோம்" என்றதற்கு அவர், "அவருடைய கைகளில் ஆணியால் உண்டான தழும்பைப் பார்த்து, ஆணிகள் இருந்த இடத்தில் என் விரலையிட்டு, அவர் விலாவில் என் கையையிட்டாலொழிய விசுவசிக்கமாட்டேன்" என்றார்.
|
26. எட்டு நாளுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் வீட்டில் இருந்தார்கள். தோமையாரும் அவர்களோடிருந்தார். கதவுகள் மூடியிருக்க, இயேசு வந்து அவர்களிடைய நின்று, "உங்களுக்குச் சமாதானம்" என்றார்.
|
27. பின்பு தோமையாரை நோக்கி, "இங்கே உன் விரலையிடு; இதோ! என் கைகள். உன் கையை நீட்டி என் விலாவில் இடு; விசுவாசம் அற்றவனாயிராதே, விசுவாசங்கொள்" என்றார்.
|
29. இயேசுவோ, "என்னைக் கண்டதால் நீ விசுவாசங்கொண்டாய்! காணாமலே விசுவசிப்பவர்கள் பேறுபெற்றோர்" என்றார்.
|
31. இயேசு கடவுளின் மகனாகிய மெசியா என்று நீங்கள் விசுவசிக்கும்படியும், விசுவசித்து அவர் பெயரால் வாழ்வு பெறும்படியும் இந்நூலிலுள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
|