1. லாசர் என்னும் ஒருவன் பிணியுற்றிருந்தான். அவன் பெத்தானியா ஊரினன். அதுவே மரியாள், அவளுடைய சகோதரி மார்த்தாள் இவர்களுடைய ஊர். -
|
2. இந்த மரியாள்தான், முன்னொருநாள் ஆண்டவருக்குப் பரிமளத்தைலம் பூசி, அவருடைய பாதங்களைக் கூந்தலால் துடைத்தவள். பிணியுற்றிருந்த லாசர் அவளுடைய சகோதரன். -
|
3. அவனுடைய சகோதரிகள் இயேசுவிடம் ஆளனுப்பி, "ஆண்டவரே, இதோ! நீர் நேசிக்கிறவன் பிணியுற்றுள்ளான்" என்று தெரிவித்தார்கள்.
|
4. இயேசு இதைக் கேட்டு, "இப்பிணி சாவில்வந்து முடியாது, கடவுளின் மகிமைக்காகவே இப்படி ஆயிற்று; இதனால் கடவுளுடைய மகன் மகிமை பெற வேண்டியிருக்கிறது" என்றார்.
|
8. அவருடைய சீடர், "ராபி, இப்போதுதான் யூதர்கள் உம்மைக் கல்லால் எறியப்பார்த்தார்களே; நீர் மீண்டும் அங்குப் போகிறீரா ?" என,
|
9. இயேசு மறுமொழியாகக் கூறினார்: "பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் உண்டன்றோ ? பகலில் நடப்பவன் இடறி விழுவதில்லை; ஏனெனில், அவன் இவ்வுலகின் ஒளியைக் காண்கிறான்.
|
11. இதைக் கூறியபின் அவர் அவர்களிடம், "நம் நண்பன் லாசர் தூங்குகிறான், அவனைத் தூக்கத்திலிருந்து எழுப்பச் செல்லுகிறேன்." என்றார்.
|
13. இயேசு குறிப்பிட்டது அவனுடைய சாவையே. அவர்களோ வெறும் தூக்கத்தையே அவர் குறிப்பிட்டதாக நினைத்தார்கள்.
|
15. உங்களுக்கு விசுவாசம் உண்டாகும் என உங்கள்பொருட்டு, நான் அங்கு இல்லாமற்போனதுபற்றி மகிழ்கிறேன். வாருங்கள், அவனிடம் செல்வோம்" என்று தெளிவாகச் சொன்னார்.
|
21. மரியாளோ வீட்டிலேயே இருந்தாள். மார்த்தாள் இயேசுவிடம், "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்.
|
22. இப்பொழுதுகூட நீர் கடவுளிடமிருந்து கேட்பதெல்லாம் அவர் உமக்கு அருள்வார் என்று எனக்குத் தெரியும்" என்றாள்.
|
24. அதற்கு மார்த்தாள், "இறுதிநாளில் எல்லாரும் உயிர்த்தெழும்போது அவனும் உயிர்த்தெழுவான் என்பது எனக்குத் தெரியும்" என்றாள்.
|
26. உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.
|
27. அவளோ, "ஆம் ஆண்டவரே, நீர் மெசியா; இவ்வுலகிற்கு வரும் கடவுளின் மகன் நீர்தான் என்று நான் விசுவசிக்கிறேன்" என்றாள்.
|
28. இப்படிச் சொன்னபின் மார்த்தாள் தன் சகோதரி மரியாளை அழைக்கச் சென்றாள். அவளிடம் வந்து, "போதகர் வந்துவிட்டார். உன்னை அழைக்கிறார்" என்று காதோடு காதாய்ச் சொன்னாள்.
|
31. மரியாளின் வீட்டில் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர், அவள் விரைந்தெழுந்து வெளியே சென்றதைக் கண்டு, அழுவதற்குத்தான் கல்லறைக்குச் செல்லுகிறாள் என்றெண்ணி அவளோடு போனார்கள்.
|
32. இயேசு இருந்த இடத்திற்கு மரியாள் வந்ததும், அவரைக் கண்டு காலில் விழுந்து, "ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்" என்றாள்.
|
34. மனம் குமுறிக் கலங்கி, "அவனை எங்கே வைத்தீர்கள் ?" என்று கேட்க, "ஆண்டவரே, வந்து பாரும்" என்றார்கள்.
|
37. அவர்களுள் சிலர், "குருடனுக்குப் பார்வையளித்த இவர், இவன் சாகாமலிருக்கச் செய்ய முடியவில்லையா ?" என்றனர்.
|
38. இயேசு மீண்டும் மனம் குமுறியவராய்க் கல்லறைக்குச் சென்றார். அது ஒரு குகை; அதைக் கல் ஒன்று மூடியிருந்தது.
|
39. "கல்லை எடுத்து விடுங்கள்" என்றார் இயேசு. செத்தவனுடைய சகோதரி மார்த்தாள் அவரை நோக்கி, "ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே! " என்றாள்.
|
40. அதற்கு இயேசு, "உனக்கு விசுவாசம் இருந்தால், கடவுளின் மகிமையைக் காண்பாய் என்று நான் சொல்லவில்லையா ?" என்றார்.
|
41. அப்பொழுது கல்லை அப்புறப்படுத்தினர். இயேசு கண்களை ஏறெடுத்து, "தந்தாய், நீர் எனக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
|
42. நீர் என்றும் எனக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சூழ்ந்து நிற்கும் கூட்டத்தின் பொருட்டே நான் இப்படிச் சொல்கிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவசிக்கவே இப்படிச் சொல்கிறேன்" என்றார்.
|
44. என்றதும் இறந்தவன் வெளியே வந்தான். அவனுடைய கை கால்கள் துணியால் சுற்றிக் கட்டுண்டிருந்தன. அப்போது இயேசு, "கட்டவிழ்த்து அவனைப் போகவிடுங்கள்" என்றார்.
|
47. தலைமைக் குருக்களும் பரிசேயர்களும் தலைமைச் சங்கத்தைக் கூட்டி, "இந்த ஆள் பல அருங்குறிகளைச் செய்கிறானே, என்ன செய்யலாம் ?
|
48. இவனை இப்படியே விட்டுவிட்டால் எல்லாரும் இவனில் விசுவாசம்கொள்வர். உரோமையர் வந்து நம் புனித இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே" என்றனர்.
|
49. அவ்வாண்டின் தலைமைக்குருவாயிருந்த கைப்பாஸ், சங்கத்தில் எழுந்து மற்றவர்களை நோக்கி, "உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
|
50. நம் இனம் முழுவதுமே அழிந்துபோகாதபடி ஒருவன் மட்டும் மக்களுக்காக இறப்பது நலம் என்பதை நீங்கள் உணரவில்லையே" என்றார்.
|
51. இதை அவர் தாமாகச் சொல்லவில்லை. அவ்வாண்டின் தலைமைக் குருவாயிருந்தபடியால், இயேசு தம் இனத்தினருக்காக இறக்கப்போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இறைவாக்காகக் கூறினார்.
|
52. உள்ளபடி அவர் இறப்பது தம் இனத்தினருக்காக மட்டுமன்று. சிதறிக் கிடந்த கடவுளின் மக்களை ஒன்றாய்ச் சேர்ப்பதற்காகவுமே.
|
54. அதுமுதல் இயேசு யூதர்களிடையே வெளிப்படையாக நடமாடவில்லை. பாலைவனத்திற்கு அருகிலுள்ள பகுதிக்குப் போய், எப்பிராயீம் என்ற ஊரில் தம் சீடருடன் தங்கியிருந்தார்.
|
55. யூதர்களுடைய பாஸ்கா விழா அண்மையிலிருந்தது. பாஸ்காவுக்கு முன்னே, பலர் துப்புரவுச் சடங்கு செய்வதற்காக நாட்டுப் புறங்களிலிருந்து யெருசலேமுக்குப் போனார்கள்.
|
56. அங்கே இயேசுவைத் தேடினார்கள். "அவர் திருவிழாவுக்கு வருவாரா ? வரமாட்டாரா ? என்ன நினைக்கிறீர்கள் ?" என்று கோயிலில் கூடிவந்தவர்களிடையே பேச்சு நடந்தது.
|
57. தலைமைக் குருக்குளும் பரிசேயரும் அவரைப் பிடிக்கவிரும்பி, அவர் இருக்குமிடம் யாருக்காவது தெரிந்தால், தங்களிடம் வந்து அறிவிக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தனர்.
|