2. நீ சொல்வது உண்மை தான், எனக்கும் தெரியும்; ஆனால் கடவுள் முன்னிலையில் மனிதன் எப்படி நீதிமானாகத் தோன்றக் கூடும்?
|
4. அவரோ உள்ளத்தில் ஞானமிக்கவர், ஆற்றலில் வல்லவர்; அவரை எதிர்த்து நின்று வெற்றி கண்டவன் யார்?- அவர் மலைகளைப் பெயர்க்கிறார்,
|
9. சப்தரிஷிகணம், மிருகசீரிடம், கார்த்திகை விண்மீன்களையும், தென்திசை மண்டல விண்மீன் குழுக்களையும் அவரே படைத்தார்.
|
11. அவர் என்னைக் கடந்து போனாலும் நான் காண்கிறதில்லை, அவர் அசைந்து போவதுகூட எனக்குப் புலப்படுகிறதில்லை.
|
12. அவர் ஒன்றைப் பறித்துச் சென்றால், அவரை மறிப்பவன் யார்? 'என்ன செய்கிறீர்?' என அவரைக் கேட்பவன் யார்?
|
14. அப்படியிருக்க, அவருக்கு நான் மறுமொழி கூறுவதெப்படி? அவரோடு வழக்காட எவ்வாறு சொற்களைத் தேர்ந்தெடுப்பேன்?
|
19. வலிமையைப் பயன்படுத்தலாமா? அவரோ ஒப்பற்ற வலிமையுள்ளவர். நீதி மன்றத்திற்குப் போகலாமா? அவருக்கு அழைப்பாணை விடுப்பவன் யார்?
|
20. நான் குற்றமற்றவன் என எண்பிக்க முயன்றால், என் வாயே என் மேல் குற்றம் சுமத்துகிறது; நான் மாசற்றவன் எனக் காட்டினால் எதிர்மாறானதை அவர் எண்பிக்கிறார்.
|
24. மாநிலம் கொடியவன் கையில் விடப்பட்டுள்ளது, அதன் நீதிபதிகளின் முகங்களை அவன் மூடிவிடுகிறான், அவனில்லை என்றால் வேறெவன் அதைச் செய்யக்கூடும்?
|
27. என் முறையீட்டை மறந்து விடுவேன், வருத்தம் நிறைந்த என் முகத்தை மாற்றிக் கொண்டு முகமலர்ச்சியோடு இருப்பேன்' என்று நான் சொல்வேனாகில்,
|
28. என் துன்பங்களையெல்லாம் கண்டு அஞ்சுகிறேன்; ஏனெனில் என்னை மாசற்றவன் என்று நீர் ஏற்றுக் கொள்ள மாட்டீர் என அறிவேன்.
|
32. அவருக்கு நான் பதில் சொல்லவும், இருவரும் சேர்ந்து வழக்காடவும், அவர் என்னைப் போல் ஒரு மனிதன் அல்லரே!
|
34. தம் கோலால் என்னை அடிக்காமல் அவர் நிறுத்தட்டும், அவரைப் பற்றிய அச்சம் எனக்கு நடுக்கம் தராதிருக்கட்டும்.
|