3. பொறாமை அற்பனை அழிக்கிறது. அறிவிலி வேரூன்றுவதைக் கண்டேன், ஆனால் உடனே அவன் இருப்பிடத்தைச் சபித்தேன்.
|
4. பாதுகாப்பு அவன் மக்களுக்கு மிகத் தொலைவு, ஊர்ச் சபையில் அவர்கள் நசுக்கப்படுகின்றனர், அவர்களை விடுவிக்கிறவன் எவனுமில்லை.
|
5. பசித்தவர்கள் அவர்களது விளைச்சலை அறுத்துத் தின்பார்கள், கடவுள் அவர்கள் வாயினின்று பறித்து விடுவார், பேராசை பிடித்தவர்கள் அவர்கள் செல்வத்திற்குக் காத்திருப்பர்.
|
13. ஞானிகளை அவர்களின் ஞானத்தினாலேயே பிடிக்கிறார், பொல்லாதவர்களின் சூழ்ச்சிகளைத் தலைகீழாய் வீழ்த்துகிறார்.
|
17. கடவுளால் திருத்தப் பெறுகிறவன் உண்மையில் பேறுபெற்றவன்! ஆதலால் எல்லாம் வல்லவரின் திருத்தத்தைப் புறக்கணியாதீர்.
|
18. ஏனெனில், காயப்படுத்துகிறவர் அவரே, காயத்தைக் கட்டுபவரும் அவரே. அடிப்பவர் அவரே, ஆற்றுவதும் அவர் கைகளே.
|
24. உம் கூடாரம் தீங்கின்றி இருப்பதை அறிந்துகொள்வீர், உம் கிடையைப் பார்க்க வரும் போது எதுவும் குறையாதிருப்பதைக் காண்பீர்.
|
26. தக்கபருவத்தில் அரிக்கட்டுகள் களத்திற்குப் போவது போல், முதிர்ந்த வயதில் உம் கல்லறைக்குச் செல்வீர்.
|