1. (4:20) மீன் தூண்டிலால் லெவீயாத்தானை உன்னால் பிடிக்கக்கூடுமோ? அதன் நாக்கைக் கயிற்றால் கட்ட உன்னால் இயலுமோ?
|
2. (4:21) அதற்கு மூக்கணாங்கயிறு போட உன்னால் முடியுமோ? அல்லது குறட்டினால் அதன் தாடையைத் துளைக்கலாகுமோ?
|
5. (4:24) பறவையோடு விளையாடுவது போல் அதனோடும் விளையாடுவாயோ? உன் பெண் மக்களுக்கு அதை வாரால் கட்டி, விளையாட்டுப் பொருளாகக் கொடுப்பாயோ?
|
6. (4:25) வணிகர்கள் அதை விலைக்குக் கேட்பார்களோ? வியாபாரிகளுக்குள் அதைக் கூறுபோட்டுப் பிரித்துக் கொள்வார்களோ?
|
8. (4:27) அதன் மேல் உன் கைகளை வைத்துப்பார்; எழும்பும் மல்லாட்டத்தை ஒருபோதும் மறவாய்; மறுபடி அவ்வாறு செய்ய நீ நினைக்க மாட்டாய்!
|
9. (4:28) இதோ, அதைப் பிடிக்கலாமென நம்புகிறவன் ஏமாந்து போகிறான், அதைப் பார்த்ததுமே அவன் அஞ்சித் தளர்வான்.
|
12. (3) லெவீயாத்தானின் உறுப்புகளைப் பற்றிச் சில சொல்வோம், அதன் நிகரற்ற ஆற்றலைப் பற்றியும் கொஞ்சம் விவரிப்போம்:
|
14. (5) அதன் முகத்தின் கதவுகளைத் திறக்கக் கூடியவன் எவன்? அதன் பற்களைச் சுற்றியும் திகில் தான் இருக்கிறது.
|
20. (11) கொதிக்கும் பானையினின்றும், எரியும் நாணல்களினின்றும் புகையெழுவது போல் அதன் மூக்கிலிருந்து புகை வெளிப்படுகிறது.
|
26. (17) வாளால் வெட்டினாலும், அதற்குத் காயமேற்படாது; ஈட்டியோ அம்போ எறிவேலோ அதை ஒன்றும் செய்ய முடியாது.
|
29. (20) பெரிய தடிகள் அதற்குச் சிறிய நாணற் குச்சிகள் போலாம், எறிவேல்கள் பாய்வதைக் கண்டு அது நகைக்கிறது.
|
30. (21) அதன் வயிற்றின் அடிப்பாகம் கூரிய ஓடுகள் போல் உள்ளது, புணையடிக்கும் உருளை போல் அது சேற்றில் புரளுகிறது.
|